Friday, April 24, 2026
Home Blog Page 11

2026 தேர்தல் செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் போட்ட உத்தரவு

0

எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில், உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுதி, நகர, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள் ஒவ்வொருவரையும் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனித்தனியாக சந்திக்கும் நிகழ்வு கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின்போது சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஆட்சி குறித்த பொதுமக்களின் மனநிலை, இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உள்ள எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து வருகிறார்.
மேலும் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் நிர்வாகிகளை ஸ்டாலின் அறிவுறுத்தி வருகிறார். இச்சந்திப்பின் போது, முன்வைக்கப்படும் கோரிக்கைகள் உடனடியாக அமைச்சர்களிடம் பேசித் தீர்வு காணப்படுவதோடு, மண்டல பொறுப்பாளர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என்றும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இன்றைய ’உடன்பிறப்பே வா’ நிகழ்வில் சூலூர், கிணத்துக்கடவு, மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது அவர், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று, நிர்வாகிகள் முன்னிலையில் மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவே வென்றது. அதன் காரணமாக இம்முறை திமுக நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிப்பாக தெரிவித்துள்ளார். மேலும் அரசின் சாதனைகளை தொகுதி முழுக்கவும் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும், கலைஞர் உரிமைத்தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உரிமைத்தொகை பெறும் வகையில் கட்சியினர் உதவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல் SIR பணிகளில் உள்ள குழப்பங்களால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு திமுகவினர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் திமுக தவைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

மோடி பீகாரில் ரூ.10 ஆயிரம் தந்தது போல் இங்கு 15 ஆயிரம் ரூபாய் தரவும் வாய்ப்பு உள்ளது என்பதால் தாய்மார்கள் தயாராக இருங்கள் -சீமான்

0

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் 89 ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:

இப்படி பணநாயக கொள்ளை கூட்டத்திடம் எங்கள் பிள்ளைகளை விட்டுச் செல்லவா? முன்னோர்கள் போராடிச் செத்தார்கள். எங்களுக்கு இருக்கக் கூடிய கடைசி உரிமை வாக்கு தான். அதையும் பறிக்கிறார்கள். அதைப் போராடிப் பெற வேண்டிய நிலைமைக்கு எங்களைத் தள்ளியுள்ளது நாடு. பகத்சிங் முன் வைத்த முழக்கம் விடுதலை பெற்று இவ்வளவு ஆண்டுகளாகியும் அப்படியே உள்ளது.
வருவாய் துறையில் பணியாற்றுபவர்கள் கல்வி அறிவு பெற்றவர்கள். அவர்களுக்கே எஸ்ஐஆர் பணி சிரமம் என்றால் அடித்தட்டில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோரை பணி அமர்த்தியுள்ளார்கள். தகுதி வாய்ந்த அதிகாரிகளின் சான்றிதழ்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களெல்லாம் இந்த பணியைச் செய்வதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் தானா? பாஜக இந்த எஸ்ஐஆரை கொண்டு வருகிறது. செயல்படுத்துவது யார்? மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இதை செயல்படுத்த முடியாது என்று மக்களை திரட்டி பேரணி செல்லும் போது, திமுக ஒப்புக்கு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, உங்களுடன் கூட்டணி வைத்த கட்சிகளை கூப்பிட்டு பேசி விட்டு இவ்வளவு தீவிரமாக எஸ்ஐஆரை செயல்படுத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது?பிஎல்ஒ அலுவலர்களை பணியமர்த்தி விட்டு, உங்களது கட்சிக்காரர்களுக்கு அங்கு என்ன வேலை? உங்களது கட்சி வாக்குகளைத் தவிர மற்ற வாக்குகளை தூக்கி விடும் பணியை தவிர வேறு என்ன நடக்கும்? ஈரோடு கிழக்கில் கள்ள வாக்கு பதிவு செய்யப்பட்டதா? இல்லையா? வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? பிறகு எஸ்ஐஆரை திருத்தி என்ன நேர்மை வரப் போகிறது? எனக்கு இருக்கும் கடைசி உரிமை இந்த வாக்கு தான். அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்புக்கு என்னை தள்ளிவிட்டார்கள். தவறு நடப்பதை திருத்துவதற்குப் பெயர் தான் திருத்தம். ஒரு நிலத்தில் களையை மட்டும் பிடுங்காமல் மொத்தமாக அழித்துவிட்டு, மறுபடியும் நடுவதாக சொல்லும் நீங்கள் முட்டாள்களா? நாங்களா?
யார் இதில் பைத்தியம்? இறந்து பல ஆண்டுகள் ஆனவர்களின் வாக்கை நீக்குமாறு பலமுறை எழுதிக் கொடுத்தும், இப்போதும் அவருக்கு விண்ணப்பம் வருகிறது என்பது என்ன மாதிரியான செயல்?பீகாரில் 81 லட்சம் பேர் ஏன் விடுபட்டார்கள்? ஒரு வீட்டில் 100 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இரட்டை வாக்குரிமை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை எஸ்.ஐ.ஆருக்கு பின்னர் பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்கு திருட்டு திருத்தமாகத் தான் இருக்கிறது.
பீகாரில் எஸ்ஐஆர் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தமிழிசை சவுந்தர்ராஜன் சொன்னதாக கூறுகிறீர்கள். கள்ள ஓட்டு போட்டால் வாக்கு சதவீதம் அதிகரிக்க தான் செய்யும். 81 லட்சம் பேர் வெளியே நிற்கிறார்களே ஏன் என்று சொல்ல முடிகிறதா? போராடும் திறனை ஒழித்து விட்டு நீ என்ன நேர்மையாளன்? கடைசி நேரத்தில் மக்களின் வங்கிக்கணக்கில் பத்தாயிரம் போட்டு விட்டு வாக்கை பறிக்கும் நீ என்ன நேர்மையாளன்? இவர்கள் 1000 கொடுக்கிறார்கள். அவர்கள் 10 ஆயிரம் கொடுக்கிறார்கள். 5 ஆண்டு ஆட்சியில் அந்த 10 ஆயிரத்தை கொடுக்காமல் இப்போது ஏன் கொடுத்தார்கள்? எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு திமுகவினர் செல்லும் போது அந்த வீட்டின் வரவேற்பில் எனது புகைப்படமுமோ, தம்பி விஜய் படமோ இருந்தால் அவர்களுக்கு ஓட்டு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? திமுக செல்லும் போது எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா புகைப்படம் இருந்தால் அவர்களுக்கு ஓட்டு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? பாஜகவினர் செல்லும் போது இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு ஓட்டு இருக்கும் என்று நினைக்கிறீர்களா? எப்படிப்பட்ட ஜனநாயகம் இது. கொளத்தூரில் கள்ள ஓட்டு இருக்கிறது என்றால், அவ்வளவு நேர்மையாளர்கள் அந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டியது தானே? கொளத்தூரில் மட்டும் தான் போலி வாக்காளர்கள் உள்ளார்களா?
பிஜேபி வென்ற தொகுதிகளில் எல்லாம் போலி வாக்காளர்கள் இல்லையா? திருத்தம் செய்வது என்றால் அதற்கு கால அவகாசம் எடுத்து செய்ய வேண்டியது தானே? வாக்காளர்கள் எங்களுக்கான ஆட்சியாளர்களை தேர்வு செய்தோம்‌. இப்போது ஆட்சியாளர்கள் தங்களுக்கான வாக்காளர்களைத் தேர்வு செய்கிறார்கள். பாஜகவிடம் நாட்டையே கொடுத்து நாசமாக்கி விட்டார்கள். இந்த அரை கிரவுண்டையும் முடித்து விட்டுச் செல்லுங்கள். தமிழ்நாட்டில் உள்ள பீகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வாக்காளர்கள் இல்லை. அனைவரும் பாஜகவின் வாக்காளர்கள். ஹிந்தியை திணித்தால் எதிர்க்கிறோம் என்பதால் ஹிந்திகாரர்களை திணிக்கிறார்கள்.
இறைவழிபாட்டை விமர்சித்த இயக்கங்கள் திரை வழிபாட்டை போற்ற வைத்தன. கடவுள் வழிபாட்டைவிட கதாநாயக வழிபாடு சிறந்தது என கட்டமைத்து விட்டார்கள். மோடி பீகாரில் 10 ஆயிரம் போட்டது போல், நமது ஆட்கள் 15 ஆயிரம் போடவும் வாய்ப்பு உள்ளது. அம்மாக்களிடம் வங்கியில் கணக்கை ஆரம்பித்து விடச் சொல்ல வேண்டும்.பீகாரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக்கூடும். ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. கூடுதலாக 2 லட்சம் கோடி கடன் அதிகரிக்க வேண்டியது தானே. காங்கிரஸ் கட்சி காசு கொடுத்ததால் அண்ணா தோற்றுவிட்டார். காசு கொடுப்பதை அண்ணா விமர்சித்துப் பேசினார். ரூ.2 கொடுத்ததற்கே விமர்சித்த அண்ணாவின் பிள்ளைகள் 2000 ரூபாய் கொடுக்கிறார்கள்.

உள்ளத்திலும், கோயிலிலும் தாமரை மலர வேண்டும் என கூறுகிறார்கள். தாமரை தண்ணீரிலேயே மலர்வதில்லை. எங்கள் ஊரில் வெங்காய தாமரை தான் வளர்கிறது” என்று சீமான் கூறினார்.

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் லஞ்சத்திற்காக காத்திருக்கும் அரச அதிகாரிகள்- கோவையில் பெண் புகார்

0

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி  அருகே உள்ள மோளகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் அவர் குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது நிலத்தை சுற்றியும் உள்ள காலி நிலங்களை பொன்னுச்சாமி, சாந்திநாதன்,சரவணன்,துரைசாமி பாலசுப்பிரமணியம் ஆகியோர் விலைக்கு வாங்கி அதை வீட்டு மனை இடங்களாக பிரித்து விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நிலத்தை அளவிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நில அளவையாளர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அலுவலர்கள் நிலத்தை அளவிடு செய்யாமல் எதிர் தரப்பினரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தாமதம் செய்து வருவதாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் போதிய பாதுகாப்பு வசதி கொடுக்கவில்லை என்றும் நில அளவையாளர் நிலத்தை வந்து அளக்க மறுப்பு தெரிவித்ததாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட ரமேஷ் குடும்பத்துடன் புகார் அளித்தனர்.

அது மட்டும் இல்லாமல் அரசு பணியில் இல்லாத ஒருவரை அரசு அலுவலகத்தில் வேலைக்கு வைத்து அவர் மூலமாக லஞ்சம் பெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக போராட்டம்

0

கோவையில் தனியார் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். அதேபோல் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே அதிமுக மகளிர் அணியினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கண்டன பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அதிமுக மகளிரணி மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய வளர்மதி, அதிமுகவினர் போராட்டம் நடத்தப் போகிறார்கள் என தெரிந்ததை அடுத்து காவல் துறையினர் சினிமாவில் வருவது போன்று கடைசி நேரத்தில் யாரையோ பிடித்து சுட்டு பிடித்துள்ளதாக கூறுகின்றனர் என்றார். மேலும், அவர்கள் தான் குற்றவாளி என்று தெரிந்திருந்தால் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு காலில் சுட்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, தற்போது 60 வயது மூதாட்டிக்கு கூட பெப்பர்ஸ் ஸ்பிரே கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என தெரிவித்தார்.

பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்தான கேள்விக்கு, அவர் ஒரு அணியில் இருந்து தான் சென்றிருக்கிறார். அதிமுகவிலிருந்து செல்லவில்லை என பதில் அளித்தார். அதிமுகவில் இருந்து பல்வேறு தலைவர்கள் பிரிந்து செல்வது குறித்த கேள்விக்கு இது போன்ற விஷயங்களை எல்லாம் எடப்பாடியார் பார்த்துக் கொள்வார் என்றும் அதிமுக என்பது ஒரு கடல் என்றும் தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம் விவகாரம் – தேர்தல் ஆணையத்திற்கு செங்கோட்டையன் கடிதம்

0

நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் விவகாரத்தை தேர்தல் ஆணையம் கையில் எடுத்து விசாரிக்க வேண்டும். மேலும் ஈபிஎஸ் தலைமைத் தாங்குவது உண்மையான அதிமுக இல்லை. கட்சியின் உண்மை நிலையை நிரூபிக்க அவகாசம் தேவை என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்எல்ஏ-வுமான செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அதிரடியாக நீக்கினார். எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனருக்கும் கடந்த ஓராண்டு காலமாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே தான் பொறுப்பு வகித்துவரும் நிலையில், கட்சி சார்பில் எடுக்கப்படக்கூடிய முக்கிய முடிவுகளில் தனது தலையீடு இல்லையே என்ற எண்ணம் செங்கோட்டையனுக்கு வெகு நாட்களாக இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதுபோன்ற பல நிகழ்வுகளால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் செங்கோட்டையன் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி அன்று, இராமநாதபுரத்தில் நடைபேற்ற முத்துரமலிங்க தேவரின் குருபூஜையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வாகனத்தில் அவருடன் ஒன்றாக வந்த செங்கோட்டையன், அவர்களுடன் ஒன்றாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செய்தார்.

இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் செங்கோட்டையன் இணைந்து பயணித்து, அதிமுகவை எடப்பாடியிடம் இருந்து மீட்கப் போவதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக அதிமுகவின் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டார். தன்னை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கட்சி விதிகளை முறையாக பின்பற்றாமல் தன்னை நீக்கிவிட்டதாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது எடப்பாடி மீது செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்!

0

கோவை பீளமேடு அருகேயுள்ள சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம், கடந்த (நவ.2) அன்று இரவு சுமார் 10.30 மணியளவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கார் ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த சாலையில் திடீரென கார் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர், காரில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அது கைகலப்பாக மாற, அந்த மூவரும் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் இரும்பு கம்பியால் காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் காரில் இருந்த ஆண் நண்பர் கீழே இறங்கியபோது, அவரது தலை மற்றும் கையில் அந்த 3 பேரும் கத்தியால் தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததை அடுத்து, காரில் இருந்த பெண்ணை இழுத்துச் சென்று, அருகிலிருந்த புதர் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். படுகாயம் அடைந்த அந்த இளைஞர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விருந்து சென்று அந்தப் பெண்ணை தேடத் தொடங்கினர்,அதிகாலை சுமார் 4 மணியளவில் போலீசார் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இக்குற்றச்செயலில் ஈடுபட்ட மூவரையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் அந்த இடத்திற்கு செல்கிற வழிகளில் உள்ள சிசிடிவிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குற்றச்செயலில் சம்பந்தப்பட்ட மூவரும் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து குற்ற செயலில் ஈடுபட்ட மூவரையும் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர்கள் மூவரும் கோவை துடியலூர் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பட்டத்தரசியம்மன் கோயில் அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் மூவரையும் தனிப்படை போலீசார் கைதுசெய்ய முயன்றபோது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் சந்திரசேகர் என்பவரை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. தப்பியோட முயன்ற மூன்று பேரின் கால்களிலும் பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன், சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் மூவரையும் கோவை அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காலீஸ்வரன் ஆகிய 3 பேரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கோவை இருகூர் அருகே வீடு எடுத்து தங்கி, கட்டட வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதில் கருப்பசாமி மற்றும் காலீஸ்வரன் இருவரும் சகோதரர்கள் என்பதும், இவர்கள் மீது ஒரு கொலை வழக்கு, வழிப்பறி, அடிதடி கடத்தல் போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மூவர் மீதும் பெண் வன்கொடுமை வழக்கு, திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வாரிசு அரசியல் செங்கோட்டையன் பகிரங்க குற்றச்சாட்டு!

0

எடப்பாடி பழனிசாமியின், மாப்பிள்ளை இப்போது கட்சியில் தலையெடுத்து வருகிறார். அதிமுகவும் வாரிசு அரசியல் செய்து வருகிறது என்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கட்சியில் நீக்கப்பட்டது மற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே எனது முழுமையான உழைப்பை கொடுத்து வந்தேன். என்னை பொருத்தவரை தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி தன்னையும், பிறரையும் ஏமாற்றுபவர்கள் நேரத்தையும் பிறரின் உழைப்பையும் கெடுக்கிறார்கள். அப்படிபட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. அதிமுகவிலும் வாரிசு அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர், மாப்பிள்ளை என அவரது குடும்பத்தினர்கள் அதிமுகவில் தலையெடுத்து வருவது அனைவரும் அறிந்த உண்மை” என்று செங்கோட்டையன் கூறினார்அதிமுகவில் இருந்து நீக்கம்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இதனையடுத்து அவரிடம் இருந்த கட்சிப் பதவிகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை திமுகவின் பி டீம் என செங்கோட்டையன் முன்னிலையிலேயே டிடிவி தினகரன் விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு: இதையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை செங்கோட்டையன் அடுக்கினார். அதில் என்னை திமுகவின் ‘பி’ டீம் என இபிஎஸ் விமர்சிக்கிறார். கொடநாடு வழக்கில் இபிஎஸ் தான் ஏ1. நான் யாருக்கும் எப்போதும் பி டீம் இல்லை. யார் பி டீம் என தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். இபிஎஸ் தற்போது தற்காலிக பொதுச் செயலாளராக மட்டுமே இருந்து வருகிறார். பொதுச் செயலாளரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி அதிமுகவில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அவர் என்னை எந்த அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கினார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக வழக்கறிஞர்களுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – திமுக அரசை சாடிய அண்ணாமலை

0

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை “X” தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, 3 சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது. இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா..!

0

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் சதய விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

தஞ்சாவூரை ஆண்ட மாமன்னன் இராஜராஜசோழனின் 1040வது ஆண்டு சதய விழா இன்று (அக்.31) மற்றும் நாளை (நவ 1) ஆகிய இரண்டு நாட்களில் தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது. இவ்விழாவில் தொடக்க நாளான இன்று கலை பண்பாட்டுத் துறை, தஞ்சாவூர் மண்டலம் சார்பில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புற கலை நிகழ்ச்சியோடு பேரணியாக வலம் வந்து பெரிய கோயில் நந்தி மண்டபத்தில் நிறைவடைகிறது.
இப்பேரணியில் கொம்பு வாத்தியம், சிலம்பாட்டம், புலியாட்டம், கும்மிக் கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நையாண்டி மேள நாதசுரம், தவில், கரகாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம் ஆகியவை நடைபெற்றது. மேலும் தேவலோக நடனங்களான சிவன், பார்வதி, காளி, பச்சைக்காளி, பவளக்காளி, அரக்கன், கருப்பு ஆகியவையும், வள்ளித் திருமண வேடத்திலும் வலம் வருதல் நிகழ்வும், பம்பை கைச்சிலம்பாட்டம், மற்றும் பெரியமேளம் போன்ற கலைகளில் 250க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு கலை ஊர்வல பேரணியாக நடைபெற்றது. மேலும், இந்த ஊர்வல நிகழ்ச்சியில் அக்கால இராஜராஜ சோழனின் நகர்வலத்தை இக்கால தலைமுறைக்கு நினைவுப்படுத்தும் வகையில், குதிரை பூட்டப்பட்ட தங்கரதம், இராஜஇராஜ சோழன் வேடம், அமைச்சர்கள் வேடம், வாயில்காவலர்கள் வேடம் ஆகியவற்றில் வேடமிட்ட கலைஞர்கள் பங்குபெறும் ஊர்வல நிகழ்ச்சியும் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை எம்பி முரசொலி, எம்எல்ஏ சந்திரசேகரன், மேயர் இராமநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சதய விழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் இராஜாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 1040வது சதய விழா 2 நாட்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தேவார திருமுறை அரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

களப்பணியில் கலைஞரின் உடன்பிறப்புகளை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது…

0

திமுக இருக்கும்வரை இந்த மண்ணில் பாஜகவின் பகல்கனவு நிறைவேறாது என திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேச்சு.

மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற இலக்குடன் திமுகவினர் களப்பணியாற்றுவதற்கான பயிற்சி கூட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர் என 2,500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தொண்டர்கள் மனதில், இப்போ என்ன ஓடிட்டு இருக்குனு, எனக்கு நல்லா தெரியுது… என்னடா, தலைவரும் சும்மா இருக்கமாட்றாரு.. நம்மையும் சும்மா இருக்கவிடமாட்றாருனு சிலர் நினைப்பீர்கள். ஆனா சுணங்கி சும்மா இருந்துட்டா, நாம ஒரே இடத்துல தேங்கிடுவோம். ஆகையால் லட்சியத்தை நோக்கி ஓடிக்கிட்டே இருக்க வேண்டும். எப்போதும் மக்கள் கூடவே இருந்து பணியாற்றும் உங்களுக்கு, இந்த பயிற்சி கூட்டம் என்பது, எக்ஸாமுக்கு தயாராகுற ஸ்டூடண்ட், எல்லாத்தையும் படிச்ச பிறகு மீண்டும் ஒருமுறை ரிவிஷன் பண்ணுவாங்கள்ல. அப்படி எலக்‌ஷன் எனும் தேர்வுக்கு முன்னால் நாம் செய்யும் ரிவிஷன்தான் இந்த பயிற்சிக் கூட்டம்.2019 முதல் நாம் எதிர்கொண்ட அத்தனை தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளை பெற்று வருவது, எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அன்னைக்கு நியூஸ் ஹெட்லைன்ஸ் என்னனா “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது” இதுதான். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. உங்கள் உழைப்பு மீதும், ஆட்சியின் சாதனைகள் மீதும். தமிழ்நாட்டு மக்கள் மீதும் உள்ள நம்பிக்கையில் கூறுகிறேன்” என்றார். மேலும் பேசிய அவர், “2026 தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற தேர்தல். தனித்தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கிற நம் ஆட்சியா? அல்லது டெல்லிக்கு வளைந்து கொடுக்கிற அடிமைகளின் ஆட்சியானு தீர்மானிக்கிற தேர்தல். தமிழ்நாட்டோட சுயமரியாதையையும், தனித்தன்மையையும் காப்பாற்றப்போகும் தேர்தல்.தமிழ்நாட்டை அழிக்க இன எதிரிகளும், தமிழ்த் துரோகிகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வருகிறார்கள். அவர்களை வீழ்த்தி நம் மண், மொழி, மானத்தைக் காக்க வேண்டும். அதற்காகதான் திமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாகணும்னு தொடர்ந்து சொல்கிறேன்.
தமிழ்நாட்டுக்கு எல்லா வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது. குறிப்பாக, இந்தி, சமஸ்கிருதம், ஜிஎஸ்டி, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, ஆளுநர் என தொல்லைக்கு மேல் தொல்லை கொடுக்கிறார்கள். இது தமிழ்நாட்டின் மேல் தொடுக்கப்படும் தாக்குதல். இந்த தாக்குதலை முறியடிக்கிற வல்லமை நமக்குதான் உள்ளது. ஏனென்றால், இந்த மண்ணில் திமுக இருக்கும்வரை பாஜகவின் பகல்கனவு நிறைவேறாது. அது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். இருந்தாலும், புதுசு புதுசா குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள். அந்த வகையில் உழைக்கும் மக்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை SIR மூலமாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டால் பாஜகவும், அதன் கூட்டாளியான அதிமுகவும் வெற்றிபெற்று விடலாம்ன்னு கணக்கு போடுறாங்க. அதாவது, மக்களை நேரடியா தேர்தல் களத்தில் சந்திக்கிற தெம்பு, திராணி இல்லாதவங்க, மக்களோட வாக்குரிமையை பறிச்சிட்டா வெற்றி பெறலாம்-ன்னு தப்புக்கணக்கு போடுறாங்க. SIR முறையை கைவிடவேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்தணும்-னா அதுக்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் திமுக நேரடியாகவே வலியுறுத்தியுள்ளது. அதையும் மீறி முன்னெடுக்கப்படுகிற ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்டரீதியா எதிர்கொள்வது மட்டுமில்லை, மக்களோடு களத்தில் நின்று எதிர்கொள்ளும் வலிமையும் நமக்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் நமக்கு மட்டும்தான் உண்டு!ஆகையால், மக்களின் வாக்குரிமையையே பறிக்கத் துணியும் SIR செயல்பாட்டை விழிப்போடு கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர் எல்லாரும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்பு,” என்றார்.

அத்துடன், ” அதிமுக தன்னோட சொந்தக்கட்சியின் உரிமைகளையே பாஜகவிடம் அடகு வெச்சிட்ட நிலையில், மக்களுடைய உரிமைகளைப் பத்தி கவலைப்பட அதுக்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளை காக்க வேண்டியவர்கள் திமுகவினரும், தோழமைக் கட்சியினரும்தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் காக்கும் திமுக ஆட்சியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’-னு நான் உறுதியளிக்கிறேன். 2021 தேர்தல் தமிழ்நாட்டை கொத்தடிமை அதிமுக கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். அதேபோல, 2026 தேர்தல் என்பது தமிழ்நாட்டை பாஜக – அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்யத் திட்டமிடும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும்.எதிர்க்கட்சி தலைவரா உள்ள எடப்பாடி பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியா இருந்த அதிமுகவை, அமித்ஷாகிட்ட விழுந்து சரண்டர் பண்ணிட்டாரு. அந்த கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பல, ஏன் அவருடைய கட்சிக்காரர்களும் விரும்பல! இருந்தாலும் விசிக வர்றாங்க, கம்யூனிஸ்ட்டுகள் வர்றாங்க, காங்கிரஸ் வர்றாங்கனு அவரும் தினமும் சொல்லிப் பார்த்தார். ஆனால் யாரும் அங்கே போகவில்லை… மக்களும் அவர் பேசுறத நம்பத் தயாராக இல்லை.

ஆகையால், தமிழ்நாட்டுக்கு எதிரா கூட்டணி அமைச்சிருக்க அவருடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று, அதை நமது கூட்டணிக்கான வாக்குகளா மாற்ற வேண்டும். திமுக 7ஆவது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமா ஆளும் தகுதி திமுக-வுக்கு தான் இருக்குனு நிரூபிக்கணும்” என்று திமுக தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசினார்.