Sunday, May 24, 2026

சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறோம்…’ – பிரேமலதா விஜயகாந்த்

Must read

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் உரையாடினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பிற மாநிலத்திலிருந்து இங்கு வந்து பணியாற்றிக் கொண்டிருந்த குடும்பம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எல்ஐசி அதிகாரி கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில், காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை இன்னும் தீவிர படுத்த வேண்டும். தேமுதிக சார்பாக அனைத்து முக்கிய நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிடுவார்கள். நானும் களத்தில் இறங்கி கண்டிப்பாக விளையாடுவேன். உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம். தேமுதிக-விற்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கிடைத்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி உள்ளது. அதிமுக, திமுக களத்தில் உள்ள நிலையில், சீமான் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். விஜய்யும் போட்டியில் உள்ள நிலையில் நான்கு முனை போட்டி உள்ளது.
2011 தேர்தலுக்குப் பிறகு தேமுதிக தனித்துப் போட்டியிடவில்லை. தேமுதிக யாருடன் கூட்டணி என்பது தான் தமிழ்நாட்டில் தற்போதைய தலைப்புச் செய்தியாக உள்ளது. ஒரு முடிவு எடுத்தால், அதில் நாங்கள் தீர்க்கமாக இருப்போம். யாருடனும் தேமுதிக பேரம் பேசவில்லை, எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் அந்த கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். தேமுதிக கூட்டணி அமைக்கும் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தோழமைக் கட்சிகள் தான். யாருடனும் நாங்கள் தற்போது வரை கூட்டணி குறித்து பேசவில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பிப்ரவரி 3 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அதற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்போம்.” என்றார்.

தேமுதிக நிதி கேட்பதால் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படாமல் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”சொந்த பணத்தில் கட்சி நடத்தி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் லஞ்சம் மற்றும் கையூட்டு பெற்ற நபர்கள் பட்டியலில் தேமுதிக இருக்கிறதா? தவறான கேள்விகளை கேட்க வேண்டாம்” என ஆவேசம் அடைந்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து,...