Saturday, September 12, 2026

சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறோம்…’ – பிரேமலதா விஜயகாந்த்

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் உரையாடினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பிற மாநிலத்திலிருந்து இங்கு வந்து பணியாற்றிக் கொண்டிருந்த குடும்பம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எல்ஐசி அதிகாரி கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில், காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை இன்னும் தீவிர படுத்த வேண்டும். தேமுதிக சார்பாக அனைத்து முக்கிய நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிடுவார்கள். நானும் களத்தில் இறங்கி கண்டிப்பாக விளையாடுவேன். உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம். தேமுதிக-விற்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கிடைத்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது. வரும் சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி உள்ளது. அதிமுக, திமுக களத்தில் உள்ள நிலையில், சீமான் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். விஜய்யும் போட்டியில் உள்ள நிலையில் நான்கு முனை போட்டி உள்ளது.
2011 தேர்தலுக்குப் பிறகு தேமுதிக தனித்துப் போட்டியிடவில்லை. தேமுதிக யாருடன் கூட்டணி என்பது தான் தமிழ்நாட்டில் தற்போதைய தலைப்புச் செய்தியாக உள்ளது. ஒரு முடிவு எடுத்தால், அதில் நாங்கள் தீர்க்கமாக இருப்போம். யாருடனும் தேமுதிக பேரம் பேசவில்லை, எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் அந்த கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். தேமுதிக கூட்டணி அமைக்கும் கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமரும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தோழமைக் கட்சிகள் தான். யாருடனும் நாங்கள் தற்போது வரை கூட்டணி குறித்து பேசவில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. பிப்ரவரி 3 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அதற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்போம்.” என்றார்.

தேமுதிக நிதி கேட்பதால் கூட்டணிப் பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படாமல் உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”சொந்த பணத்தில் கட்சி நடத்தி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலையில் லஞ்சம் மற்றும் கையூட்டு பெற்ற நபர்கள் பட்டியலில் தேமுதிக இருக்கிறதா? தவறான கேள்விகளை கேட்க வேண்டாம்” என ஆவேசம் அடைந்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...