Tuesday, June 23, 2026

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்

Must read

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது ச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 22) திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ....

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்

வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் - மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...

மேகதாது அணை கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் – நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், "அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி...

வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் – மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். விழாவில் , கலந்துகொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் ஜூலை 5-ஆம் தேதி எனது தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. 2026ஆம் ஆண்டுக்கான விருதுபெறும் சான்றோர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் இயக்கத் தோழர்கள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேகதாது விவகாரம் – அனைத்துக் கட்சிக் கூட்டம்
தொடர்ந்து, மேகதாது விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாலொழிய தீர்வு எட்டமுடியாது என துரைமுருகன் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்மொழ்ந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம், புதிய முதலமைச்சரும் மேகதாது அணைக்கு ஒன்றிய அரசு அனுமதிக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். இருப்பினும், நாம் என்ன செய்ய வேண்டும்? அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து எவ்வாறு செயல்பட வேண்டும்? மேகதாது பகுதியில் அணை கட்டினால், தமிழ்நாடு எந்த வகையில் பாதிக்கப்படும்? விவசாயிகள் மட்டுமின்றி குடிநீருக்காக மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்? கால்நடைகள் எவ்வாறு பாதிக்கப்படும்? குறித்தெல்லாம் ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது அவசியமானது. விசிகவும் அதற்கு கோரிக்கை விடுக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “காங்கிரஸ் கட்சி எப்போதுமே தமிழ்நாட்டு நலன்களை முன்னிறுத்தி முடிவுகளை எடுத்திருக்கிறது. தமிழ்நாடு எடுக்கிற முடிவுகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒத்துழைப்பு அளித்திருக்கிறது. இதுதான் கடந்த கால வரலாறு. எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மக்களுக்கு ஒத்துழைப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது ச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 22) திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ....

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்

வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் - மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...

மேகதாது அணை கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் – நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், "அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி...

மகன் மிதுனுக்கு அதிமுகவில் எந்த பதவியும் கொடுக்க மாட்டோம்- எடப்பாடி பழனிசாமி

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தவெகவுக்கு ஆதரவாகவும் முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனி...