Saturday, September 12, 2026

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்ட செந்தில் பாலாஜி, டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் ரூ.400 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்த சிபிஐ, விசாரணையையும் துரிதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் கஸ்தூரி நகர் பகுதியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் இல்லத்துக்கு மஃப்டி உடைகளில் சென்ற கரூர் ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அங்கு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லாததால் காவல்துறையினர் திரும்பிச் சென்றனர். செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது சகோதரர் அசோக்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அசோக்கை பலமுறை கைது செய்ய முயன்றது. எனினும், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிரான சட்டப் பாதுகாப்பை அவர் பெற்று வந்தார்.இதுபோன்ற சூழலில், அசோக்கின் செல்போன் சிக்னல் சென்னை எம்.ஆர்.சி. நகர் பகுதியில் காட்டியதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜி இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், வீட்டின் பாதுகாவலரிடம் இருந்து செல்போனை பெற்று, சமீபத்திய அழைப்புகள் மற்றும் தொடர்புகள் குறித்தும் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று இரவு முதல் அசோக்கை தேடும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அசோக் மீது பண மோசடி தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், தற்போது எந்த வழக்கில் அவரை தேடி வருகின்றனர் என்பது குறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கரூரில் அசோக் மீது புதிதாக ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...