Monday, July 13, 2026

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்ட செந்தில் பாலாஜி, டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் ரூ.400 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்த சிபிஐ, விசாரணையையும் துரிதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் கஸ்தூரி நகர் பகுதியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் இல்லத்துக்கு மஃப்டி உடைகளில் சென்ற கரூர் ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அங்கு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லாததால் காவல்துறையினர் திரும்பிச் சென்றனர். செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது சகோதரர் அசோக்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அசோக்கை பலமுறை கைது செய்ய முயன்றது. எனினும், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிரான சட்டப் பாதுகாப்பை அவர் பெற்று வந்தார்.இதுபோன்ற சூழலில், அசோக்கின் செல்போன் சிக்னல் சென்னை எம்.ஆர்.சி. நகர் பகுதியில் காட்டியதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜி இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், வீட்டின் பாதுகாவலரிடம் இருந்து செல்போனை பெற்று, சமீபத்திய அழைப்புகள் மற்றும் தொடர்புகள் குறித்தும் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று இரவு முதல் அசோக்கை தேடும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அசோக் மீது பண மோசடி தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், தற்போது எந்த வழக்கில் அவரை தேடி வருகின்றனர் என்பது குறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கரூரில் அசோக் மீது புதிதாக ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...