Wednesday, March 11, 2026

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் பிப்.5-ல் பட்ஜெட் அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை

Must read

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆளும் திமுக தீவிரம் காட்டி வருகிறது. ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ள போதிலும், அது திமுக கூட்டணியில் இருந்து விலகாது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் சேர்க்க திமுக மும்முரம் காட்டி வருகிறது.

அதே போல, எதிரணியில் இருக்கும் அதிமுகவும் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக மற்றும் பல சிறிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்துள்ளது. இது தவிர, தற்போதைய தேர்தல் களத்தில் விஜய்யின் தவெகவும், சீமான் தலைையிலான நாம் தமிழர் கட்சியும் உள்ளன.

இந்த சூழலில், தமிழ்நாடு சட்டப் பேரவை பிப்ரவரி மாதம் கூடவுள்ளது. இந்த சட்டப் பேரவைக்கு மே மாதம் வரை மட்டுமே அவகாசம் இருப்பதால், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிப்ரவரி 13 அல்லது 14ஆம் தேதியன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.சட்டப் பேரவை தேர்தல் நெருங்கியுள்ளதால், இந்த பட்ஜெட்டில் பல தரப்பு மக்களை கவரும் வகையிலான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், நடுத்தர மக்கள் ஆகியோரை கவரும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், எந்த அறிவிப்பையும் தமிழக அரசால் அறிவிக்க முடியாது. எனவே, இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலை, இதற்கான வாய்ப்பாக அரசு பயன்படுத்திக் கொள்ளும் எனத் தெரிகிறது. இருந்த போதிலும், இது முழுமையான பட்ஜெட் கிடையாது. 2026 ஜூன் மாதம் பதவியேற்கும் புதிய அரசே, ஜூலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடுவது, மக்களுக்கு சலுகைகளை அறிவிக்கலாமா? என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....