Monday, May 25, 2026

மத்திய பட்ஜெட் 2026: விலை உயரப் போகும் – குறையப் போகும் பொருட்கள் என்னென்ன?

Must read

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, இந்த பட்ஜெட்டானது ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலமாக, தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு, அரிய வகை கனிமம் எடுப்பதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய வழித்தடம், சென்னை – ஹைதராபாத், சென்னை – பெங்களூரு இடையே அதிவேக ரயில் பாதை உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த மத்திய பட்ஜெட்டில் துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி, ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக பல பொருட்கள் விலை உயர்வையும், விலை வீழ்ச்சியையும் சந்திக்கவுள்ளன.அந்த வகையில், எந்தெந்த பொருட்கள் விலை குறையும் என்பதை முதலில் பார்ப்போம். இந்த பட்ஜெட்டில் அத்யாவசிய மருந்துகளுக்கான சுங்க வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவற்றுக்கான மருந்துகளின் விலை குறையவுள்ளது.

அதேபோல, பேட்டரி பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் மின்சார வாகனங்களின் விலை கணிசமாக குறையவுள்ளது. மேலும், செல்போன், டிவி ஆகியவற்றின் விலையும் குறைகிறது. இவற்றை தவிர, தோல் பொருட்கள், காலணி, வெளிநாட்டு கல்வி செலவு, வெளிநாட்டு பயண செலவு, மைக்ரோவேவ், வீடியோ கேம் பொருட்கள், விமான பாகங்கள், பீடி தயாரிக்க பயன்படும் தெண்டு இலைகள் ஆகியவற்றின் விலை குறையவுள்ளது.

ஆடம்பர மற்றும் இறக்குமதி பொருட்கள்
மீதான சுங்க வரி, இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு கைக்கடிகாரங்கள், இறக்குமதி கார்கள், சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகைப்பொருட்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றை தவிர, மதுபானங்கள், நிலக்கரி, இரும்பு பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் விலை உயர்வை சந்திக்கவுள்ளன.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து,...