Saturday, September 12, 2026

மத்திய பட்ஜெட் 2026: விலை உயரப் போகும் – குறையப் போகும் பொருட்கள் என்னென்ன?

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, இந்த பட்ஜெட்டானது ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலமாக, தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு, அரிய வகை கனிமம் எடுப்பதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய வழித்தடம், சென்னை – ஹைதராபாத், சென்னை – பெங்களூரு இடையே அதிவேக ரயில் பாதை உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த மத்திய பட்ஜெட்டில் துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதி, ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக பல பொருட்கள் விலை உயர்வையும், விலை வீழ்ச்சியையும் சந்திக்கவுள்ளன.அந்த வகையில், எந்தெந்த பொருட்கள் விலை குறையும் என்பதை முதலில் பார்ப்போம். இந்த பட்ஜெட்டில் அத்யாவசிய மருந்துகளுக்கான சுங்க வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவற்றுக்கான மருந்துகளின் விலை குறையவுள்ளது.

அதேபோல, பேட்டரி பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் மின்சார வாகனங்களின் விலை கணிசமாக குறையவுள்ளது. மேலும், செல்போன், டிவி ஆகியவற்றின் விலையும் குறைகிறது. இவற்றை தவிர, தோல் பொருட்கள், காலணி, வெளிநாட்டு கல்வி செலவு, வெளிநாட்டு பயண செலவு, மைக்ரோவேவ், வீடியோ கேம் பொருட்கள், விமான பாகங்கள், பீடி தயாரிக்க பயன்படும் தெண்டு இலைகள் ஆகியவற்றின் விலை குறையவுள்ளது.

ஆடம்பர மற்றும் இறக்குமதி பொருட்கள்
மீதான சுங்க வரி, இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு கைக்கடிகாரங்கள், இறக்குமதி கார்கள், சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகைப்பொருட்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றை தவிர, மதுபானங்கள், நிலக்கரி, இரும்பு பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் விலை உயர்வை சந்திக்கவுள்ளன.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...