Friday, August 14, 2026

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்

Must read

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை போலீஸ் கைது!

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது...

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான அஜித் பவார், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் இன்று காலை தனது சொந்த தொகுதியான பாராமதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தனி விமானத்தில் பயணித்துள்ளார். 8 இருக்கைகள் கொண்ட லியார்ஜி என்ற சிறிய ரக விமானத்தில் அஜித் பவாருடன் விமானிகளான சுமித் கபூரும், சாம்பவி பதக்கும் இருந்துள்ளனர். இவர்களுடன் 2 உதவியாளர்கள் மற்றும் ஒரு நிர்வாகி பயணித்துள்ளனர்.காலை 8.45 மணியளவில் பாராமதி விமான நிலையம் அருகே சென்றபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டதால், விமானிகள் உடனடியாக தரையிறக்க முயன்றுள்ளனர். ஆனால் விமான நிலையத்தின் ஓடுபாதை நுழைவு பகுதியிலேயே விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 6 பேரையும் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து அஜித் பவார் உட்பட 6 பேரின் உடல் பாராமதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் 6 முறை துணை முதலமைச்சராக பணியாற்றி, அதிக முறை துணை முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர் அஜித் பவார். இவர் பலமுறை பாராமதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் மூத்த அரசியல்வாதியான சரத் பவாரின் மருமகன் ஆவார்.

அதிர்ச்சியாக உள்ளது – பிரதமர் மோடி

இதனிடையே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “அஜித்பவார் ஒரு மக்கள் தலைவர். மக்களிடம் நேரடி தொடர்பு வைத்திருந்தவர். மகாராஷ்டிரா மக்கள் நலனுக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர் என்ற பெயரை அவர் பெற்றிருந்தார். நிர்வாகத்தில் அவருக்கு இருந்த புரிதலும், ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் அவருக்கு இருந்த வேட்கையும் குறிப்பிடத்தக்கவை.

அவரது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் தந்துள்ளது. இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் உயிழந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் மன உறுதி அவர்களுக்கு கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கருப்பு பெட்டி மீட்பு

இதனிடையே, விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை போலீசார் மீட்டுள்ளனர். இந்த கருப்புப் பெட்டியில்தான் விமானத்தில் பயணம் செய்தவர்களின் பேச்சு பதிவாகியிருக்கும். இதனை ஆய்வு செய்தால், விபத்து நிகழ்வதற்கு முன்பு விமானிகள் என்ன பேசினார்கள், விபத்துக்கான காரணம் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை போலீஸ் கைது!

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது...

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...