Monday, July 13, 2026

பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்..!

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

2026 சட்டமன்ற தேர்தலில் தந்தையின் உடல் நிலை காரணமாக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பாஜகவில் அமைக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களில் அண்ணாமலையும் ஒருவர். ஆறு தொகுதிகளுக்கு அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்திருந்தது.இந்நிலையில், கட்சியின் தேர்தல் பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இது குறித்து இன்று (பிப்ரவரி 3) கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறுகையில்,“சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவேனா என்பது குறித்து யோசிக்க வேண்டும். எனது தந்தையின் உடல்நிலை குறித்து நான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே அடிப்படை வேலைகள் பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. பாரதிய ஜனதா கட்சி பிரச்சாரத்திற்கு தயாராக உள்ளேன்.

நான் இதுகுறித்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் பேசியுள்ளேன். இப்போதைக்கு அதிகம் என்னால் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.இதனால் கட்சிக்கு, கூட்டணி கட்சிகளுக்கு, போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என கட்சி சொல்லும் வேலையை செய்வோம். சம்பந்தப்பட்ட நேரத்தில் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை கட்சி சொன்ன பிறகு பேசுகிறேன்.சிங்காநல்லூர் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை கட்சித் தலைமை நியமிக்கும்.தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, அதற்கான காலமும் சூழ்நிலையும் நிறைய உள்ளது. கட்சி என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு உங்களிடம் பேசுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...