தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழாவில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் குறித்து விமர்சித்து பேசினார்.குறிப்பாக முதல்வரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். சட்டசபையில் விஜய் நடந்துகொண்டதை வைத்தும் கடுமையாக விமர்சித்து பேசினார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக ஆத்தூர் பகுதி நிர்வாகிகள் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், மரியாதைக் குறைவாகவும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளிக்கப்பட்டது இதையடுத்து போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குறிப்பாக விஜய் குறித்து மரியாதை குறைவாக அவதூறு பரப்பும் வகையில் பேசியது, மோதலை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதல்வர் மீது ஒருமையில் விமர்சனம்.. அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…


