Sunday, May 31, 2026

திமுகவிடம் எத்தனை தொகுதிகளை கேட்பீர்கள்..?சென்னையில் வைகோ பதில்

Must read

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்...

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள்...

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்....

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு...

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது, பெரும் ஏமாற்றத்தை தந்தது. அமெரிக்காவின் வரி கொடுமையிலிருந்து தப்பிக்க, ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் ஈடு கொடுக்கும் என தெரிவித்தார்கள். ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் 2027 ஏப்ரலுக்குப் பின்புதான் வரும். அதுவரை பொருளாதார மந்த நிலையை மத்திய அரசு எப்படிச் சமாளிக்கும்? பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை; கோவை, கரூர், திருப்பூர் நூற்பாலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் இல்லை.
ரூ. 11.7 லட்சம் கோடி கடன் வாங்க போகிறோம் என்கிறார்கள். அதே சமயத்தில், 7 சதவீத வளர்ச்சியையும் அடைவோம் என்கிறார்கள். இதை எப்படி ஏற்க முடியும்? கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் இல்லை. ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது” என வைகோ கூறினார்.

ஆட்சியில் பங்கு கேட்பீர்களா? என கேட்டதற்கு பதிலளித்த வைகோ, “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு போன்ற கோஷங்களை நாங்கள் என்றைக்குமே வைத்தது இல்லை. அப்படி கோரிக்கை வைக்கின்ற நோக்கமும் எங்களுக்கு இல்லை. திமுக நிச்சயம் தனிப் பெரும்பான்மை பெறும். மீண்டும் 2026-ல் ஸ்டாலின் முதல்வராக அமர்வார், திராவிட மாடல் ஆட்சி தொடரும்” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “பாலத்தீனம் தனி நாடாக உருவெடுக்க இந்தியா ஆதரவு அளித்திருப்பது நல்ல விஷயம். பாலஸ்தீனத்தை நேரு காலத்தில் இருந்தே இந்தியா ஆதரித்தது. இடைக்காலத்தில் நரேந்திர மோடி பொறுப்புக்கு வந்த பின்னர், இஸ்ரேல் உடனான உறவை நெருக்கமாக்கிக் கொண்டனர். பாலஸ்தீனத்திற்காக ஐ.நாவிலோ, மற்ற இடங்களிலோ இந்தியா குரல் கொடுக்காமல் இருந்தது. பாலஸ்தீனம் தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை ஆரம்பத்திலிருந்து நாங்கள் ஆதரித்து வந்திருக்கிறோம்” என்றார்.

பின்னர், தொகுதி பங்கீடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வைகோ, “தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த 3 மணிநேரத்திற்குள் மதிமுக சார்பில் குழு அமைக்கப்படும். எத்தனை இடங்களை கேட்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது. சிலர் தங்கள் வாய்க்கு வரும் எண்களை எல்லாம் சொல்கிறார்கள். நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்...

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள்...

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்....

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு...

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...