Thursday, April 16, 2026
Home Blog Page 23

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் புகையிலை பொருட்களை ஒழிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது..

0

தமிழக மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின் படி கோவை மாவட்டத்தில் புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், அவர்கள் தலைமையில் இன்று (28.11.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு பிரிவு மற்றும் மருந்து நிர்வாக துறையின் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர்களுடன் புகையிலைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடை செய்வதற்கும் மற்றும் விற்பவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல்முறை இக்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூபாய் 5000/- அபராதமும், மூன்று மாத காலத்திற்கு கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் புகையிலை பொருட்களை விற்பதில் முதல் முறை ஈடுபட்ட குற்றத்திற்கு 150 கடைகளுக்கு தலா ரூபாய் 5000 அபராதமும், இரண்டாம் முறை குற்றத்தில் ஈடுபட்ட 3 கடைகளுக்கு தலா ரூபாய் 10,000/- அபராதமும் மற்றும் மூன்றாம் முறை குற்றத்தில் ஈடுபட்ட 2 கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 , வாட்சப் எண் 77081-00100 மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9361638703 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (28.11.2023) கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான கோவில்பாளையம் கருவலூர் சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சரத் சேதி மகன் ராஜ்கிஷோர்சேதி(33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் 250 கிராம் கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 560 நபர்கள் மீது 426 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 710.411 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழங்கினார்…

0


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 352 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.


பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற்கடனுதவி, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.43,832 மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளையும், இன்று மனு அளித்த மாற்றுத் திறனாளி மீரான்கனி என்பவருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.2,960/- மதிப்பிலான காதொலிக் கருவியினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன் உட்பட அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார் அமைச்சர் கீதாஜீவன்…

0

தூத்துக்குடியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார்

திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் அனுபவித்தார் இவ்விழாவில் மருத்துவ கல்லூரி முதல்வர் சிவகுமார், ஆர். எம் .ஓ .சைலஸ் ஜெபமணி, ஜீவன் ஜேக்கப், கட்சி முக்கிய பிரமுகர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் லோகேஷ் கனகாரஜ்…

0

பிரபல திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் G Squad எனும் பெயரில் புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக தனது x தளத்தில் பதிவுட்டுள்ளார் ..

கோவை மாவட்டத்தில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் (26.11.2023) அன்று பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடமான CTC மேடு அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ராஜ ஜெமிஷா மகன் முகமது ஃபெரோஸ்(25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் இரண்டு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 554 நபர்கள் மீது 422 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 707.486 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன்

0

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன்

ஒடிசா முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்த வி.கே.பாண்டியன், கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.

அவர் ஓய்வு பெற்ற அடுத்த தினமே, 5T திட்டத்தின் தலைவர் எனும் அமைச்சர் அந்தஸ்துடைய அரசு பதவி வி.கே.பாண்டியனுக்கு வழங்கப்பட்டது

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனு…

0

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனுத் தாக்கல் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தள்ளிவைக்கக் கூடாது என கூறி எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை…

0

வி.பி.சிங் முயற்சியால்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவு முன்னேறி இருக்கிறார்கள்.

ஒன்றிய அரசின் துறை செயலாளர்கள் 89 பேரில் 85 பேரும், ஒன்றிய அரசின் கூடுதல் செயலாளர்கள் 93 பேரில் 88 பேரும் உயர்ஜாதியினர்.

மத்திய பல்கலைக் கழகங்களில் இதுவரை இடஒதுக்கீடே இல்லை.

நீதிமன்றங்களில் 2018 முதல் 2023 வரை நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 74 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள்.

அரசு துறைகளில் பதவி உயர்வின்போது இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும்.

வி.பி.சிங் மறையலாம். ஆனால் அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது, மறக்காது.

உடல்நிலை சரியில்லை நாளை ஆஜராகிறேன் -மன்சூர் அலிகான்….

0

நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்

மன்சூர் அலிகான் இன்று ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், ஆஜராகவில்லை

ஆஜராக அவகாசம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு கடிதம்

தொடர் இருமலால் பேசுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இன்று ஆஜராக இயலாது என கடிதம்

நாளை ஆஜராக அனுமதிக்குமாறு மன்சூர் அலிகான் கடிதம்…