Wednesday, July 22, 2026

கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி..!

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் சதீஷ்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து வரி வசூலர் சதீஷ்குமாரின் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஷீலா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த வியாபாரியான 53 வயதாகும் ஆனந்தவேல் இவர் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கியுள்ளார். இந்த வீட்டு மனையை வரன் முறைப்படுத்தக்கோரி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்தார்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் சதீஷ்குமார் என்பவர், அந்த மனையை உள்ளூர் திட்டக் குழுமத்தின் மூலமாக வரன்முறைப்படுத்த கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலவாகும் என்று கூறியுள்ளார். இதுதவிர வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் பணம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டாராம், இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தவேல் அவ்வளவு பணம் தர இயலாது என கூறியுள்ளார்.

இதனால் அவரது வீட்டு மனையை வரன்முறைப்படுத்தாமல் சதீஷ்குமார் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். ஆனால் அதன்பின்பும் ஆனந்தவேலின் வீட்டுமனை வரன்முறைப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது .

சிக்கியது எப்படி ?

இதையடுத்து ஆனந்தவேல் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் பில் கலெக்டரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதன்படி ரூ.40 ஆயிரத்திற்கான ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆனந்தவேலிடம் கொடுத்துள்ளனர். ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்ட ஆனந்தவேல் நேற்று பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற பின்பு அங்கு பணியில் இருந்த பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் கொடுத்திருக்கிறார். இதை மறைந்திருந்து கண்காணித்த கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி மற்றும் போலீசார், சதீஷ்குமாரை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஷீலா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டார்கள். சோதனையின் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இந்த பணத்தில் பங்கு வாங்கும் அதிகாரிகள் யார் யார் ..? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...