Saturday, June 6, 2026

கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக சிக்கிய அரசு அதிகாரி..!

Must read

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் சதீஷ்குமார் என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து வரி வசூலர் சதீஷ்குமாரின் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஷீலா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த வியாபாரியான 53 வயதாகும் ஆனந்தவேல் இவர் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கியுள்ளார். இந்த வீட்டு மனையை வரன் முறைப்படுத்தக்கோரி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்தார்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் சதீஷ்குமார் என்பவர், அந்த மனையை உள்ளூர் திட்டக் குழுமத்தின் மூலமாக வரன்முறைப்படுத்த கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலவாகும் என்று கூறியுள்ளார். இதுதவிர வீட்டுமனையை வரன்முறைப்படுத்த ரூ.40 ஆயிரம் பணம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டாராம், இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தவேல் அவ்வளவு பணம் தர இயலாது என கூறியுள்ளார்.

இதனால் அவரது வீட்டு மனையை வரன்முறைப்படுத்தாமல் சதீஷ்குமார் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். ஆனால் அதன்பின்பும் ஆனந்தவேலின் வீட்டுமனை வரன்முறைப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது .

சிக்கியது எப்படி ?

இதையடுத்து ஆனந்தவேல் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் பில் கலெக்டரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதன்படி ரூ.40 ஆயிரத்திற்கான ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆனந்தவேலிடம் கொடுத்துள்ளனர். ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்ட ஆனந்தவேல் நேற்று பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற பின்பு அங்கு பணியில் இருந்த பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் கொடுத்திருக்கிறார். இதை மறைந்திருந்து கண்காணித்த கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி மற்றும் போலீசார், சதீஷ்குமாரை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஷீலா மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டார்கள். சோதனையின் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த சம்பவம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு இந்த பணத்தில் பங்கு வாங்கும் அதிகாரிகள் யார் யார் ..? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஹார்டு டிஸ்க் திருட்டில் அதிகாரிகளுக்குப் பங்கா..?

அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் (TNEB) தலைமையகத்திலிருந்து, குறிப்பாக டெண்டர்கள் மற்றும் கொள்முதல்கள் மேலும் நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பான பதிவுகள் அடங்கிய, ரகசியத் தரவுகள் உள்ள சுமார்...