Friday, August 14, 2026

காவல் நிலையத்தில் ஒப்பந்ததாரரை தாக்கிய ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு தலா ஒரு மாதம் சிறை தண்டனை

Must read

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை போலீஸ் கைது!

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது...

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

திருச்சி: சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பசுபதி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவி, வளர்மதி ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

2016-ல் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, பசுபதி, அவரது மனைவி கலாவதி, மகன்கள் தென்னரசு, தமிழ்ச்செல்வன், ரமேஷ், விவேகானந்தன் ஆகியோர் மீது அப்போது விருகம்பாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த ஜெயராஜ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

முன்ஜாமீன் தொடர்ந்து, பசுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, நிபந்தனை முன்ஜாமீன் பெற்றனர். அதன்பின், திருச்சியில் குடும்பத்துடன் தங்கியிருந்து கன்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட திருச்சியில் தங்கியிருக்க தேவையில்லை என்ற தளர்வு பெற்றனர்.

இந்த உத்தரவு நகலை அளிப்பதற்காக பசுபதி தனது குடும்பத்தினருடன் கன்டோன்மென்ட் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெயராஜ் அவரது ஜீப் ஓட்டுநர் கண்ணன், வடபழனி காவல் உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன் ஆகியோர் சேர்ந்து பசுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக பசுபதி தரப்பினர் திருச்சி ஜே.எம்-2 நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பதால் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பசுபதி மனுத்தாக்கல் செய்தார். அதன்பின், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன் குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஜெயராஜ், உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன், ஜீப் ஓட்டுநர் கண்ணன் ஆகியோரின் ‘குற்றமுறு செயல்’ நிரூபிக்கப்பட்டுள்ளதால், 3 பேருக்கும் தலா ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை போலீஸ் கைது!

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது...

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...