Monday, July 13, 2026

மூன்று மாத வாடகை பாக்கிக்காக இரக்கமின்றி அரங்கேறிய அவலம் – கோவையில் குழந்தைகளுடன் தவிக்கும் வரும் பெண்..!

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

கோவையில் அட்வான்ஸ் பணத்தைப் பறித்துக் கொண்டு குடும்பத்தை நடுத்தெருவில் வீசிய வீட்டு உரிமையாளர் – மேம்பால அடியில் பள்ளி குழந்தைகளுடன் தவிக்கும் வரும் பெண்.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் வறுமையின் பிடியில் சிக்கிய ஒரு ஏழைக் குடும்பத்தை, வீட்டின் உரிமையாளர் இரக்கமின்றி நடுத்தெருவில் தூக்கி வீசியுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒட்டுமொத்த கோவையையும் உறைந்துபோகச் செய்து உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூபாய் 30,000 முன் தொகை கொடுத்து ஒரு குடும்பத்தினர் குடியேறி வசித்து வந்து உள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த வேலை முடங்கிப் போனதால், அவர்களால் வீட்டு வாடகையைச் சரியாகச் செலுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டின் உரிமையாளர், மனிதாபிமானமே இல்லாமல் அவர்கள் ஏற்கனவே கொடுத்து இருந்த முன்தொகை 30,000 ரூபாயையும் மொத்தமாகப் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.அதோடு நிறுத்தாமல், ‘இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது’ என மிரட்டி, அவர்களை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். வேறு வழியின்றி, நேற்று நள்ளிரவு முதல் பள்ளிக்குச் செல்லும் தங்களது பிஞ்சு குழந்தைகளுடன், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் அடியில் உள்ள குளிர்ந்த சாலையில் பரப்பி வைத்து விட்டு, அந்தப் பெண் தனித்து தவித்து வருகிறார். விடிந்தால் பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள், புத்தகப் பைகளுடன் சாலையோரப் புழுதியில் படுத்துறங்கும் இந்தக் கொடூரக் காட்சி பொதுமக்களைக் கண்ணீர் சிந்த வைத்து உள்ளது. ஏழைக் குடும்பத்தின் இயலாமையைப் பயன்படுத்தி அட்வான்ஸ் பணத்தையும் அள்ளிக் கொண்டு, குழந்தைகளைப் பனியில் தவிக்கவிட்ட அந்த வீட்டு உரிமையாளருக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த அவல நிலை குறித்துத் தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர், நடுத்தெருவில் தவிக்கும் அந்தப் பெண்ணிற்கும் அவரது குழந்தைகளுக்கும் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் தற்காலிக மறுவாழ்வு மற்றும் சட்ட ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...