Sunday, April 19, 2026
Home Blog Page 24

சினிமா படப்பாணியில் மத்திய அரசு ஊழல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….

0

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சினிமா படப்பாணியில் மத்திய அரசு ஊழல் செய்துள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி வரி பகிர்வை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை எனக் கூறிய அவர் இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் இருந்து பாசிசத்தை ஒழிக்க, சேலம் மண்ணிலிருந்து ஒரு மாபெரும் பயணத்தை துவக்க உள்ளோம் என சூளுரைத்தார்…

கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்- மாவட்ட ஆட்சியர் அறிக்கை…

0

கோவை மாவட்டத்தில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக் கூடும்.

காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகிறது. பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எழு நாட்களில் குணமடைந்து விடுவர். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

இக்காலகட்டத்தில் பொது மக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து பின் ஆறவைத்து குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு இருக்கும் பட்சத்தில் சமையல் கல் உப்பை வெந்நீரில் போட்டு, தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே சென்று வந்தபிறகு கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகே, வீட்டுக்குள் நுழைய வேண்டும், வைட்டமின் சி. புரத சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். மேற்கண்ட தொடர் செயல்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம். மேலும், காய்ச்சல் கண்டவர்கள் பதிவுபெற்ற மருத்துவரை நாடி உரிய அறிவுரைக்கு பின் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் காய்ச்சல் பாதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் விவரங்களை அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெற்று அவர்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

700 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (22.11.2023) சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூலூர் காவ‌ல்துறை‌யின‌ர் செங்கோடகவுண்டன் புதூர் பிரிவு அருகே வாகன தணிக்கை செய்த போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார்(45) மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் ராஜன்(47) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.5,97,973/- மதிப்புள்ள 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (22.11.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 71 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 3 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும்,2 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும் (CSR), 54 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 12 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (22.11.2023) அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான அன்னூர் கணேசபுரம் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுகதேவ் தலாய் மஹாதேபஸ்தா மகன் சுபாஷ் தலாய்(33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 544 நபர்கள் மீது 414 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 704.026 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

சூலூர் பகுதியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது….

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (17.11.2023) சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சூலூர் ரோந்து காவலர் அரசூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரளி பேனா மகன் சுரேந்திர பேனா(21) மற்றும் ஜெகபந்து பாண்டே மகன் துலாரம் பாண்டே(26) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 541 நபர்கள் மீது 411 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 699.926 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

ரூபாய் 1.50 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த நபர்களை கைது

0

கோவையைச் சேர்ந்த செந்தில்நாதன் (60) என்பவர் ரூபாய் 1.50 கோடி மதிப்புள்ள அவரது நில பத்திரத்தை கடந்த 2020-ம் வருடம் அவரது நண்பர் வெங்கடேசனுக்கு கொடுத்து உதவியுள்ளார். வெங்கடேசன் அப்பத்திரத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்த செந்தில்நாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களிடம் புகார் அளித்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழக்கில் மோசடி செய்த நபர்களான திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் கண்ணன் (52), சின்னையன் மகன் மணி (55) மற்றும் அப்துல் ஜாஃபர் மகன் பாய்@முகமத் இத்ரீஸ் (39) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 4,80,000/- பணத்தை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் மேற்படி வழக்கில் ஆறு குற்றவாளிகள் நீதிமன்ற காவலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்களை கைது

0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சிவதாசன் (39) கடந்த 07.11.2023 அன்று பொள்ளாச்சி சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் சிவதாசனின் செல்போனில் போன் பேசி விட்டு தருவதாக கூறி சிவதாசனின் செல்போனை கேட்டு வாங்கி திருடிச் சென்றனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் இன்று (09.11.2023) தங்கம் தியேட்டர் அருகே வாகன சோதனை மேற்கண்ட போது இரு சக்கர வாகனத்தில் வந்த வள்ளி@பிரவீன் குமார் (22), தாகிர் உசேன் (22) மற்றும் மோகன்(24) ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இந்நிலையில் மேற்படி நபர்களை நிலையம் அழைத்து விசாரணை செய்வதில் மேற்படி குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் என தெரியவந்தது. இந்நிலையில் மேற்படி பொள்ளாச்சி பகுதியில் கண்ணன் மகன் வள்ளி@பிரவீன் குமார் (22), ஜான் பாஷா மகன் தாகிர் உசேன் (22) மற்றும் ஈஸ்வரன் மகன் மோகன் (24) ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

சூலூர் பகுதியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்… விற்பனைக்கு கொண்டு வந்த நபர் கைது…

0

இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (09.11.2023) சூலூர் பகுதியில் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினர் சம்பவ இடமான நடுஅரசூர் அருகே கண்காணித்து வந்த போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த நடு அரசூர் பகுதியை சேர்ந்த கார்த்திசன் மகன் பாலகிருஷ்ணன்(24) என்பவரை கைது செய்தும், அவரிடமிருந்து 71½ கிலோகிராம் எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 552 நபர்கள் மீது 539 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 4714.33 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதைப் பொருட்கள் இளைஞர்களின் சிந்தனையை அளித்து அவர்களின் வளர்ச்சியை தடுத்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு போதை பொருள் விற்பனையாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

2024 ம் தேர்தல் தான் முதலில் முக்கியம் – வானதி சீனிவாசன்…

0

நடிகர் கமல் ஹாசன் தேர்தலின் போது டார்ச்லைட்டை வைத்து என்ன சொல்லி டி.வி-யை உடைத்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும் எனவும் தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக வானதி சீனிவாசன் பேட்டி

கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் இதம் திட்டம் எனும் இளம் பெண்களுக்கான இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் துவக்க விழா பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

இன்று ஐந்து இயந்திரங்கள் ஒப்படைத்து உள்ளோம் எனவும் எந்தெந்த பகுதிகளில் பொருளாதாரத்தி பின் தங்கி உள்ள பெண்கள் உள்ளனரோ அங்கு கொடுந்து உள்ளோம். மேலும் 150 பெண்களுக்கு கொடுத்து உள்ளோம் என்றனர். மாதத்திற்கு 8 நாப்கின்களை எடுத்து கொள்ளலாம். இதற்கு முன் மாதா மாதம் நான்காயிரம் பெண்களுக்கு நாப்கின் கொடுத்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த இயந்திரத்தை கொடுத்து உள்ளோம் என்றார். மாதவிடாய் காலத்தில் அவர்கள் சுகாதாரமாக இருக்க பெண் எம்.எல்.ஏ என்ற முறையில் கொடுத்து உள்ளோம்.
இன்னும் ஆறு மாத காலத்தில் வார்டுக்கு மூன்று இயந்திரம் அமைக்க உள்ளோம்.
தனது தொகுதியில் உள்ள இளம் பெண்களுக்கு தீபாவளி பரிசாக இதனை கொடுத்து உள்ளோம் என்றார். மழை பெய்தால் தண்ணீர் தேங்காதுவாறு இருக்க தான் எம்.எல்.ஏ ஆனது முதல் வலியுறுத்தி வருகிறேன். அப்போதைய அமைச்சர் இன்று சிறையில் இருக்கிறார்.
லங்கா கார்னர் பகுதியில் தண்ணீர் தேங்கிய இடத்தில் விரைவாக பணி முடிக்க வலியுறுத்தினேன். தாமதமாக பணி செய்வதால் இப்பிரச்சிணை தொடர்கிறது. ஆணையரை மாற்றி கொண்டிருப்பதால் எந்த பணியும் கோவையில் சீராக நடைபெறுவதில்லை எனவும் தனியார் மருத்துவமனையில் இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து உள்ளது.


சிறப்பு முகாம் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதம் தவிர்த்து மற்ற மதங்களை பற்றி பேசினால் இந்து தர்ம சனாதனத்தில் மட்டுமே கடவுளே இல்லை என்பவர்களை கூட அரவணைக்கும் தன்மை உண்டு. மதங்கள் தாண்டி மனிதர்களை அரவணைக்கும் பக்குவம் இந்து மதத்தில் மட்டுமே உள்ளது. தி.மு.க சமூக நீதி ஆட்சி செய்து கொண்டு சருக்கிறேன் என்று சொல்லி கொண்டு இருப்பதாக சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர அமைச்சர்கள் பட்டியல் இனத்தவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது தெரியும் என்றார். முழுக்க முழுக்க பட்டியலினத்தவர்களும்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் நடிகர் கமல் ஹாசன் தேர்தலின் போது டார்ச்லைட்டை வைத்து என்ன சொல்லி டி.வி யை உடைத்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும் என்றார். கோவைக்கு முதலில் போட்டியிடட்டும் , அவருக்கு எதிரான வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்கும் என்றார். மேலும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துகள் அனைத்துமே கட்சியின் கொள்கை தான் என்றார்.