Wednesday, April 22, 2026
Home Blog Page 15

பயிர் உற்பத்தியில் தமிழ்நாடு தான் முதலிடம்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

0

பயிர் உற்பத்தித் திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் வணிகத் திருவிழா -2025’-ஐ சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக செயல்பாடுகள் குறித்த கண்காட்சி அரங்குகள் மற்றும் கருத்தரங்கம் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வேளாண் விளைபொருட்களை, நேரடியாக சந்தைப்படுத்த இந்த கண்காட்சியும், கருத்தரங்குகளும் விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த முன்னெடுப்பு விவசாயிகளுக்கு புதிய சாகுபடி முறைகள் மற்றும் வேளாண் வணிக வாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்வதற்கான முக்கிய தளமாக அமைந்திருக்கிறது. இதனால், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் உருவாகுவதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்பு இன்னும் அதிகளவில் ஏற்படும். வேளாண் வணிகம் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளால், விவசாயிகளின் வணிகத்திறன் மேம்படும்.
திமுக அரசு அமைந்த பிறகு, வேளாண்மைத் துறை என்று இருந்த பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றி, நம்முடைய அரசின் நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் அறிவித்தோம். அப்படித்தான், நம்முடைய அரசின் ஒவ்வொரு திட்டங்கள் மூலமாகவும், வேளாண்மையும் அதிகரிக்க வேண்டும்; உழவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படவேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம். உழவர்களின் கருத்துக்களை விருப்பத்தை கேட்டு, செயல்படும் அரசாக இருந்து கொண்டிருக்கிறோம்.தமிழ்நாடு முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, அதனடிப்படையில் திட்டங்களை, வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்தோம். அதன் பலனாக இப்போது வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறப்பதற்கு எப்படி லேட் ஆகும் என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, மேட்டூர் அணையை குறித்த நாளில் திறந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு, 5.66 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 494 ஏக்கர் கூடுதல் நெல் சாகுபடி ஆகும். இதற்கு தேவையான உரங்களை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இப்படி, தமிழ்நாட்டில் உழவர்களுக்கோ, வேளாண்மைக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.தமிழ்நாடு முதலிடம், இந்த 4 ஆண்டு கால சாதனைகளையெல்லாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பயிர் உற்பத்தித் திறனில், இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதலிடம்; மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பில் இரண்டாம் இடம்; குறு தானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாம் இடம். இதிலும், நாம் முதலிடம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

திமுகவின் சில சாதனைகள்

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 130 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் பொருளீட்டுக் கடனை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.
டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் பருத்தி விற்பனை
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ரூ.5.17 கோடி மதிப்பில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஏற்றுமதி மையம்
ரூ.285 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகள், 14 புதிய உழவர் சந்தைகள்
ஏற்கனவே இருந்த 125 உழவர் சந்தைகளில் புனரமைப்பு பணிகள், மாநகராட்சிப் பகுதிகளில் 30 நடமாடும் காய்கனி அங்காடிகள்
நீலகிரியில் சிறுதானியங்கள் பதப்படுத்தும் நிலையம்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வணிகம் செய்வதற்கு ரூ.73 கோடி நிதியுதவி
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு ரூ.53 கோடி மானியம்
விலை வீழ்ச்சி காலங்களில் விவசாயிகளை பாதுகாக்க குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா; கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, மதுரையில் சிறிய உணவுப் பூங்கா
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,720 கோடி இழப்பீட்டு தொகை வேளாண் பணிகள் எவ்விதத் தொய்வுமில்லாமல் நடைபெற, வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் திட்டம்
வேளாண்மை கல்வியை மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 3 புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள். இதன் தொடர்ச்சியாக, தற்போது வேளாண் வணிகத் திருவிழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

விவசாயிகளைத் தொழில் முனைவோர்களாக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களாக அவர்களை உருவாக்குவோம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. இதை உழவர் பெருமக்கள் எல்லோரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த வேளாண் வணிகத் திருவிழா விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், உணவு பதப்படுத்துபவர்கள், வேளாண் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக நிச்சயமாக இருக்கும். உழவுத் தொழிலுக்கும், வேளாண் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஊக்கமளிக்க வேண்டும்” என உரையாற்றினார்.

டிஐஜி வருண்குமார் வழக்கில் சீமானுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது சென்னை உயர் நீதிமன்றம்…

0

டிஐஜி வருண்குமாருக்கு எதிராக சீமான் அவதூறு கருத்து தெரிவிக்க இடைக்கால தடையை அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டிஐஜி வருண்குமார் இடையே அண்மையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இரு தரப்பும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்தனர். அதிலும் நாம் தமிழர் கட்சியினர், வருண்குமார் ஐபிஎஸ் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியிருந்தனர். இது தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிராக பொதுவெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இரண்டு கோடியே பத்து லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிஐஜி வருண்குமாருக்கு எதிராக சீமான் பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் சீமான் தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் வழக்கை அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி தண்டபாணி, அதுவரை வருண்குமாருக்கு எதிராக சீமான் பேச தடையையும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

0

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் (தேசிய/மாநில/பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்(RUPP) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 29A இன் விதிகளின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்ட விதிகளின் கீழ்,அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட எந்தவொரு சங்கமும், சின்னம், வரி விலக்குகள் உள்ளிட்ட சில சலுகைகள் மற்றும் சலுகைகளைப் பெறுகிறது. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அக்கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். 2019ம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறிய பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPP) அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்கும் நாடு தழுவிய நடவடிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கையின் முதல் கட்டத்தில், ஆகஸ்ட் 9, 2025 அன்று 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டத்தில், 6 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய தேர்தல்களில் போட்டியிடாததன் அடிப்படையில், செப்டம்பர் 18, 2025ல் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இவ்வாறு, கடந்த 2 மாதங்களில் 808 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகைய மேலும் முன்னெடுக்க, கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் (அதாவது 2021/-22, 2022/-23, 2023/-24) நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தங்கள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்காததற்காகவும், தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் தேர்தல் செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யாததற்காகவும் 359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் உள்ள 23 வெவ்வேறு மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை. எந்தவொரு கட்சியும் தேவையற்ற முறையில் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, அந்தந்த மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் இந்த பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு (RUPP) நோட்டீஸ் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முதன்மை செயல் அதிகாரிகளால் விசாரணை மூலம் கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
முதன்மை செயல் அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியையும் (RUPP) பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கிறது என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எந்தெந்த மாநிலங்களின் எத்தனை கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கையும் வெளியிட்டுள்ளது. அதில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 121 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள மஹாராஷ்டிராவில் 44 கட்சிகளின் அங்கீகாரமும், 3 ஆம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 42 கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நான்காம் இடத்தில் உள்ள டெல்லியில் 40 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPP) தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்த பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்சிகள்

தமிழகத்தில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், எழுச்சி தேசம் கட்சி, கோகுலம் மக்கள் கட்சி பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, விடுதலை மக்கள் முன்னேற்றக் கழகம், திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட 42 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

நடிகர் மோகன்லாலுக்கு “தாதாசாகேப் பால்கே விருது”

0

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

மலையாளத் திரையுலகின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் மோகன்லால். லாலேட்டா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்லால் தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போடுபவர். 1978-ம் ஆண்டு திறநோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அடியெடுத்து வைத்தாலும், 1980-ம் ஆண்டு வெளியான மஞ்சில் விரிஞ்ச பூக்கம் படம் இவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்ததுசிறந்த நடிகருக்கான 2 விருதுகள் உட்பட 6 தேசிய திரைப்பட விருதுகள், 9 கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2001-ம் ஆண்டு மத்திய அரசின் பத்ம ஶ்ரீ, 2019-ல் பதம் பூஷண் விருது என திரையுலகினராலும், மத்திய மாநில அரசுகளாலும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
நடிகர், தயாரிப்பாளர், பிண்ணனிப் பாடகர் எனப் பலத் துறையில் தொடர்ந்து இயங்கிவருகிறார். இந்த நிலையில்தான் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறதுஇது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், இந்திய அரசு மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் பல தலைமுறைகளை ஊக்குவிக்கிறது!
புகழ்பெற்ற நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்படுகிறார்.
அவரது ஒப்பிடமுடியாத திறமை, பல்துறை திறன் மற்றும் இடைவிடாத கடின உழைப்பு இந்திய திரைப்பட வரலாற்றில் உயரிய தரத்தை அமைத்துள்ளன. இந்த விருது செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நடிகர் மோகன்லாலுக்கு “தாதாசாகேப் பால்கே விருது”

0

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

மலையாளத் திரையுலகின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் மோகன்லால். லாலேட்டா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்லால் தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போடுபவர். 1978-ம் ஆண்டு திறநோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அடியெடுத்து வைத்தாலும், 1980-ம் ஆண்டு வெளியான மஞ்சில் விரிஞ்ச பூக்கம் படம் இவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்ததுசிறந்த நடிகருக்கான 2 விருதுகள் உட்பட 6 தேசிய திரைப்பட விருதுகள், 9 கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2001-ம் ஆண்டு மத்திய அரசின் பத்ம ஶ்ரீ, 2019-ல் பதம் பூஷண் விருது என திரையுலகினராலும், மத்திய மாநில அரசுகளாலும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
நடிகர், தயாரிப்பாளர், பிண்ணனிப் பாடகர் எனப் பலத் துறையில் தொடர்ந்து இயங்கிவருகிறார். இந்த நிலையில்தான் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறதுஇது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், இந்திய அரசு மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் பல தலைமுறைகளை ஊக்குவிக்கிறது!
புகழ்பெற்ற நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்படுகிறார்.
அவரது ஒப்பிடமுடியாத திறமை, பல்துறை திறன் மற்றும் இடைவிடாத கடின உழைப்பு இந்திய திரைப்பட வரலாற்றில் உயரிய தரத்தை அமைத்துள்ளன. இந்த விருது செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இபிஎஸ் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி வழக்கு: மீண்டும் மனு அளிக்க உத்தரவு..!

0

கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்பியிடம் மீண்டும் மனு அளிக்க அதிமுகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருவிக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் – கோவை சாலையில் செப். 25-ம் தேதி மாலை 06.30 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், மனுதாரர் கோரும் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க இயலாது. இதனால் மாற்று இடத்தை பரிந்துரைக்குமாறு மனுதாரருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார். மனுதாரர் தரப்பில், அனுமதி கோரும் இடத்தில் 2022 முதல் பல அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் பொதுக்கூட்டதுக்கு அனுமதி கோரும் இடத்தில், ஏற்கெனவே பல்வேறு கட்சிகளுக்கு பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களுடன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி மனு அளிக்க வேண்டும். அந்த மனு அடிப்படையில் செப். 22ம் தேதி மாலைக்குள் காவல் கண்காணிப்பாளர் உரிய முடிவெடுக்க வேண்டும். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம்..!

0

தவெக தலைவர் விஜய் தனது தமிழக சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) அன்று திருச்சியில் தொடங்கினார்.
அந்த சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இன்று  (செப்.20) நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக தவெக தலைமை நிலையக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, இன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஐகோட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், ‘‘தவெக  தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் முழுவதும் அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை எந்தவொரு பாரபட் சமும் பார்க்காமல் உடனுக்குடன் அனுமதி வழங்க டிஜிபிக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொண்டர்கள் வரவேண்டும் என்றும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக் கக்கூடாது என்றும் நிபந்தனை களை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அதேபோல அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும்போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையிலான விதிமுறைகளை வகுக்க வேண்டும். அரசியல் கட்சியினருக் கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது.
பொது சொத்துகள் அல்லது பொதுமக்களின் தனிப்பட்ட உடமைகள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும்’’ எனக்கூறி, இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தவெக தரப்பில்  சுற்றுப்பயணம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகே காலை 11.00 மணிக்கும், திருவாரூர் மாவட்டம், நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதியில் மாலை 3.00 மணிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் – அரசாணை வெளியீடு

0

பனை மரங்கள் வெட்டப்படுத்தவதை தடுக்க ஆட்சியர் தலைமையிலான மாவட்டம் மற்றும் வட்டார அளவிலான குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில், பனை மரங்களை வேரோடு வெட்டி விற்கவும் செங்கல் சூழல்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க மாவட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட மாவட்ட குழுவில் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, கதர் கிராம தொழில் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இதே போல தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தலைமையேற்ற வட்டார குழுவில் வேளாண் துறை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வட்டார அளவிலான குழு வயல் ஆய்வு மேற்கொண்டு பனை மரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு பயிர் சாகுபடி பதிவேட்டில் பதிவேற்றம் செய்யும். இதன் பின்னர், தவிர்க்க முடியாத காரணங்களால், பனை மரங்களை வெட்ட வேண்டி வந்தால், மாவட்ட அளவிலான குழுவிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
பனை மரத்தை வெட்டும் போது, அதனை ஆய்வு செய்ய குழுவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் வெட்டப்பட்ட மரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி கட்டாயம் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கு இணையாக 10 மரங்களை நட்டு வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவையில் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்

0

அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் குறித்து கவலைப்படாமல், மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதையே தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு அவர் செயல்படுகிறார். இதன் ஒருபகுதியாக, இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அவர் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி , “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோவை நகரம் உலகத்தரத்துக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், “இந்த பிரச்சினைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில்தான் தீர்க்கப்படும். தற்போது திமுக அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை” என குற்றம்சாட்டினார். திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். “அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட பல திட்டங்கள், திமுக ஆட்சி அமைந்ததும் நிறுத்தப்பட்டன. அதில் அவிநாசி திட்டமும், கோவை மெட்ரோ ரயில் திட்டமும் அடங்கும். திமுக அரசின் அலட்சியத்தால் வளர்ச்சித் திட்டங்கள் தடைபட்டுள்ளன. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக நாங்கள் செய்த பணிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பெண்களுக்கு தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப், விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு – இவை அனைத்தும் அதிமுக ஆட்சியில்தான் சாத்தியமானது. கோவை நகரம் உலகளவில் முன்னேற்றம் அடைய வேண்டிய அனைத்து சாத்தியங்களும் உள்ளதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் இருந்தால் கோவைக்கு தொழிற்துறை வளர்ச்சி, அடிப்படை வசதி மேம்பாடு, போக்குவரத்து வசதிகள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். ஆனால், தற்போதைய திமுக அரசு எந்தக் கண்ணோட்டமும் இன்றி செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.
உங்கள் பிரச்சினைகள் எங்களின் பிரச்சினைகளே. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உங்களுக்கு தேவையான அனைத்து தீர்வுகளும் உடனடியாக வழங்கப்படும்” என்று உறுதியளித்து பேசினார்.

இந்த பிரசாரப் பயணத்தின் போது, எடப்பாடி பழனிசாமி மீது பொதுமக்களிடமிருந்து அதிக வரவேற்பு காணப்படுகிறது. பெண்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என பல தரப்பினரும் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஒவ்வொரு கோரிக்கையையும் கவனமாகக் கேட்ட அவர், “அதிமுக ஆட்சியே உங்களுக்கான உண்மையான தீர்வு” என கூறினார். இதன் மூலம், வரும் தேர்தலை முன்னிட்டு அதிமுக வலுவான அடித்தளத்தை கோவையில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது தெரிய வருகிறது. கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் ஒரு பக்கம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்து வருவது அதிமுக தொண்டர்களிடையே தைரியத்தை ஏற்படுத்துகிறது.

கம்பம் நகராட்சியில் பரபரப்பு : தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

0

கம்பம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் 18 திமுக நகர மன்ற உறுப்பினர்கள், 6 அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நகராட்சி ஆணையாளரிடம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து தீர்மானம் மனுவை கம்பம் நகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர். கடந்த சில மாதங்களாகவே நகர்மன்ற தலைவருக்கும், நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றுவதிலும், கூட்டங்கள் நடத்துவதிலும் ஒற்றுமை இல்லாததால் பிரச்சனைகள் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்மன்ற கூட்டம் நடைபெறும் பொழுது எதிர்ப்பில் உள்ள 18 திராவிட முன்னேற்றக் கழக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் 24 நகரமன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதற்குரிய மனுவை நகரமன்ற ஆணையாளரிடம் அளித்தனர். மனு அளிக்கும் பொழுது 18 திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் நகர்மன்ற உறுப்பினர்களும், 6 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகர் மன்ற உறுப்பினர்களும் தனித்தனியாக மனு அளித்தனர். அனைவரும் ஒன்றாக இணைந்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இது குறித்த மனு அளிக்க சென்றனர்.

அந்த மனுவில் நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வார்டு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நடத்துவதற்கு நகர் மன்ற தலைவர் ஏற்க மறுப்பதாகவும் மேலும் நகர் மன்ற தலைவரின் கணவர் தன்னிச்சையாக செயல்பட்டு நகராட்சி பணியாளர்களை கையில் வைத்துக் கொண்டு நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி அந்த மனுவில் கூறியுள்ளனர். நகராட்சியின் முன்பு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.