Wednesday, March 11, 2026

வனப்பகுதியில் விடப்பட்ட ‘ரோலக்ஸ் காட்டு யானை உயிரிழப்பு…

Must read

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை வன பகுதியில் விடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், கெம்பனூர் பகுதிகளில் விவசாய பயிர்களை ரோலக்ஸ் காட்டு யானை சேதப்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி ரோலக்ஸ் காட்டு யானையினை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

ரோலக்ஸ் யானை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வரகளியார் முகாமில் மரக்கூண்டில் ஒரு மாதம் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு மந்திரி மட்டம் வனப் பகுதியில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி விடப்பட்டது. ஆனாலும் ரேடியோ சிக்னல் பொருத்தி ரோலக்ஸ் காட்டு யானை கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் மந்திரி மட்டம் பகுதியில் இன்று இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வெங்கடேஷ் கூறுகையில், ”தொண்டாமுத்தூர் பகுதியில் அக்டோபர் 17 ஆம் தேதி யானை பிடிக்கப்பட்டு மரக்கூண்டில் வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் பராமரிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 12ம் தேதி மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.ரோலக்ஸ் காட்டு யானையை தினமும் ரேடியோ சிக்னல் வைத்து, நேரில் பார்த்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர். யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இன்று காலை 11.45 மணிக்கு ரேடியோ சிக்னல் கிடைத்த நிலையில் யானை இருக்கும் பகுதியை வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வந்தனர்.பிற்பகல் 2 மணி வரை யானை ஊழியர்களின் கண்காணிப்பில் இருந்தது. 2 மணி அளவில் அங்கிருந்த ஓடையின் அருகில் தண்ணீர் குடிக்க சென்றபோது வழுக்கி விழுந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் உடனடியாக அங்கு செல்ல முடியாத நிலையில் அரை மணி நேரத்திற்கு பின்பு ரோலக்ஸ் யானையின் அருகில் சென்று பார்த்தபோது யானை இறந்து இருப்பது தெரிய வந்தது.

இதனால் யானையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வனத்துறை ஊழியர்கள் எடுத்து அனுப்புவதற்கு தாமதமாகிவிட்டது. யானையின் இறப்பு குறித்து விசாரிக்க தனிக்குழுவை தலைமை வனப்பாதுகாவலர். நாளை இந்த குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இறக்கத்தில் வழுக்கி விழுந்து யானை உயிரிழந்துள்ளது. யானையின் வாயில் சாப்பிட்ட புல் உள்ளிட்டவை இருந்துள்ளது. அந்த பகுதி பெரிய அளவிலான சரிவு கிடையாது. சிறிய குன்றுகள் இருக்கும் இடம். ஆனால் அந்த பகுதி மண் வழுக்கும் தன்மை கொண்டதால் யானை வழுக்கி விழுந்து இறந்துள்ளது. யானைக்கு மயக்க மருத்து கொடுத்து 12 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதன் தாக்கம் இருக்க வாய்ப்பில்லை. கூடலூர் அருகே பிடிக்கப்பட்டு நெல்லை வனப்பகுதியில் உயிரிழந்த ராதாகிருஷ்ணன் யானை பாறையில் இருந்த புற்களை சாப்பிட சென்றபோது இடறி விழுந்து இறந்தது. ரோலக்ஸ் காட்டு யானை விடுவிக்கபட்ட மந்திரிமட்டம் பகுதி நல்ல தண்ணீர், தீவனங்கள் அதிகம் இருக்கும் பகுதி. அந்நிய தாவரங்கள் எதுவும் இருக்காது. யானை கழுத்தில் அரை மணி நேரத்திற்கு ஒரு சிக்னல் கிடைக்கும் வகையில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு இருந்தது. ரோலக்ஸ் யானை நலமுடன் இருந்தது. உணவும் நல்ல முறையில் எடுத்துக்கொண்டு இருந்தது.இதுவரை இடமாற்றம் செய்யப்பட்ட யானைகளில் 10 சதவீதம் மட்டுமே மாற்று இடங்களில் தங்கி இருக்கின்றன. மற்ற யானைகளை மீண்டும் மீண்டும் பிடிக்கும் சூழல் இருந்துள்ளது. 23 யானைகள் இதுவரை இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பான சரியான தகவல்களை நாளை தெரிவிக்கின்றேன்.” என்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பார்க்க வேண்டும்: ஆணையாளர் பேட்டி

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாகக் கருதிப் பார்த்தால் இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் வராது என கோவை மாநகரக்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவரது...

அதிமுக கூட்டணி கலகலத்து போய் விட்டது – வைகோ

தேமுதிக, திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே வலுவாக இருந்த திமுக கூட்டணி, இன்னும் பலம்பெற்றது. அதிமுக கலகலத்துப் போனது என...

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு...

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....