Monday, September 14, 2026

SIR பணியில் முறைகேடு.. கலெக்டர், தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

ஆத்தூர் தொகுதியில் எஸ்.ஐ.ஆர் பணியில் முறைகேடு நடந்துள்ளதால் கலெக்டர், தாசில்தார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று (நவம்பர் 30) திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சேர்க்கைப் பணியின்போது ஏறக்குறைய 7227 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். சுமார் 26 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளது. இதன் பின்னணியில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரை உள்ளனர்.

சின்னாளபட்டி பேரூராட்சியில் மொத்த வாக்குகளில் சுமார் 7227 வாக்காளர்களின் பெயர்கள் ‘இடம்பெயர்ந்துவிட்டார்கள்’ (Shifted) என குறிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நேற்று காலை முதலே ஆத்தூர் வட்டாட்சியர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நேரடியாகச் சென்று அங்கிருந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை (BLO) வற்புறுத்தி, “இனி சேரும் வாக்குகளை ‘Shifted’ என்று போடுங்கள்” எனக் கூறி வாக்காளர் சேர்க்கைப் பணியை முடித்துவைக்கச் சொல்லி இருக்கிறார்.

ஆத்தூர் தொகுதியில் மொத்தம் 21800 முதல் 22000 வாக்குகள் வரை ‘Shifted’ என பதிவு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிறப்பு சேர்க்கை பணி தொடர வேண்டிய நிலையில் இரவோடு இரவாக பணியை வட்டாட்சியர் முடித்து விட்டார். 2016 ஆம் ஆண்டு தேர்தலில் சின்னாளப்பட்டியில் 17000க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவான நிலையில் தற்போது நடைபெற்ற சிறப்புச் சேர்க்கையில் 16800 வாக்குகளே சேர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுப்பட்டியில் இருந்தும் சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சின்னாளபட்டி பகுதியில் பலர் வியாபாரம் நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்று திரும்புபவர்கள். எனவே சேர்க்கைக்கான கடைசி நாள் வரை பொறுமையாக இருந்து சேர்க்கை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சேர்க்கை பணிகள் அவசரமாக நிறுத்தப்பட்டதால் இன்று வந்த பலரும் வாக்காளராக சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெரிய தவறு நடந்துள்ளதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

குறைகளை சரி செய்ய சூப்பர்வைசர் நியமிக்கப்பட்டுள்ளார் – மாவட்ட ஆட்சியர்

அமைச்சர் ஐ. பெரியசாமியின் குற்றச்சாட்டு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”ஆத்தூர் தொகுதியை பொறுத்தவரையில் 2, 3 குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 11 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், விடுபட்டவர்களை சேர்ப்பதற்கு எடிட் செய்யும் வசதி (Edit option) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தங்களது பதிவு விடுபட்டவர்கள் மீண்டும் 11 ஆம் தேதி வரை வந்து தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து கட்சியினரும் பல்வேறு குறைகளை தெரிவித்துள்ளனர். அதனை சரி செய்வதற்கு சூப்பர்வைசர் நியமிக்கப்பட்டுள்ளார்.” என்றார்.

எந்த குளறுபடியும் நடைபெறவில்லை – தாசில்தார்

ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் கூறுகையில், ”ஆத்தூர் தொகுதி முழுவதும் தொடர்ந்து எஸ்ஐஆர் படிவம் வாங்கப்பட்டு வருகிறது. இதில் எந்த ஒரு குளறுபடியும் நடைபெறவில்லை. குறிப்பாக வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு உதவும் வகையில் கடந்த இரண்டு வாரங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்குச்சாவடிகளில் SIR படிவம் பூர்த்தி செய்யவும், பெற்றுக்கொள்ளவும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.
சரியான முறையில் SIR நடைபெற்று வருகிறது. ஒருவேளை விடுபட்டு இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் சேர்ப்பதற்கான கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...