Sunday, July 26, 2026

மாணவியின் கையில் படுகாயம் -அரசுப் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் ஶ்ரீராம் (43). இவரது மனைவி பரிமளா (34). இருவரும் விசைத்தறி கூடத்தில் தறி ஓட்டும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 12 மற்றும் 9 வயதில் இரு மகன்களும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இச்சிறுமி எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த நவம்பர் 7-ம் தேதி மதியம் 11.30 மணிக்கு, சிறுமி தனது வகுப்பு தோழிகளுடன் பள்ளியில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆசிரியை பெரியநாயகி, சிறுமியின் இடதுகை முட்டிக்குக் கீழ் பிரம்பால்அடித்ததாக கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி இடதுகையை மடக்கிப் பிடித்தவாறு இருந்துள்ளார். அதை கண்ட தாய் பரிமளா, கையில் ரத்தம் கட்டிய வீக்கத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மகளிடம் கேட்டதும், “ஆசிரியை குச்சியால் அடித்தார்” என்று கூறியுள்ளார்.மறுநாள் (நவ. 8) பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் கேட்டபோது, “மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறுங்கள், செலவு நான் ஏற்கிறேன்” என்று கூறியதால், பரிமளா வீட்டுக்கு திரும்பினார். ஆனால், சிறுமியின் நிலை மோசமானதால், நவம்பர் 13-ம் தேதி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள சிஎன்எஸ் தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு வந்து பரிமளாவிடம் விசாரித்தபோது, “ஆசிரியை செலவு ஏற்கிறார், வழக்கு வேண்டாம்” என்று வாக்குமூலம் அளித்தார். அதனை தொடர்ந்து சிகிச்சை முடிந்து நவ. 17 அன்று சிறுமி வீடு திரும்பினார். அப்போது, மருத்துவச் செலவாக ரூ.41,000-ஐ ஆசிரியை பெரியநாயகி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமிக்கு மீண்டும் கையில் வலி ஏற்பட்டதால், நவம்பர் 21 அன்று கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும், போலீசார் தாய் பரிமளாவிடம் விசாரித்தனர். இம்முறை அவர் ஆசிரியை பெரியநாயகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்தார்.

அதனை தொடர்ந்து சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் அனுமதி பெற்று, ஆசிரியை பெரியநாயகி மீது கருமத்தம்பட்டி போலீசார் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில், சிறுமிக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...