Saturday, June 13, 2026

கோவையில் சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழப்பு..!

Must read

அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக மையக்குழு கூட்டம்…

தமிழ்நாடு பாஜகவில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தேர்தல் தோல்விக்கான காரணங்களையும் ஆராய்ந்தனர்

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் (நவ.28) இந்தக் குடியிருப்பின் A-பிளாக்கில் 3 வீடுகள், C-பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளிலிருந்து 42 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப் (48), இர்பான் (45), கல்லூ ஆரிப் (60) ஆகிய 3 பேர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதையும், அவர்கள் குனியமுத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதையும் கண்டறிந்தனர்.

நேற்று (நவ. 29) அந்த பகுதிக்குச் சென்ற போலீசார் திருடர்களை பிடிக்க முற்பட்டபோது அவர்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். இதில் பார்த்திபன் என்ற காவலருக்கு பலத்த காயம் ஏற்படவே, தப்பி செல்ல முயன்ற 3 பேரையும் அவர்களுடைய காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். பின்னர் காயமடைந்தவர்களை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மூவரையும் சுட்டு பிடித்தது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்த விசாரணையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் ரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.3 பேரையும் கவுண்டம்பாளையம் பகுதிக்கு அழைத்துவந்த ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கு பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

இதனிடையே மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆசிப் என்பவருக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மருத்துவமனையில் விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக கொள்ளையன் ஆசிப்பின் உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக மையக்குழு கூட்டம்…

தமிழ்நாடு பாஜகவில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தேர்தல் தோல்விக்கான காரணங்களையும் ஆராய்ந்தனர்

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...