Saturday, April 18, 2026
Home Blog Page 34

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை..! மாதம் மாதம் எந்த தேதியில் வரும் தெரியுமா…?

0

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.6 கோடி மகளிருக்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது…

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அளிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் மிகமுக்கிய திட்டமாகும். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1.6 கோடிபேரின் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டன. தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை செல்கிறதா என பணம் அனுப்பி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், பயனாளிகளுக்கு உரிமைத் தொகைக்கான ஏடிஎம் அட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் . உரிமை தொகை பெற்ற பெண்கள் தேவையான பொருட்களை வாங்க உதவிகரமாக இருக்கும் என்று நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னை ஹோட்டலில் கள்ளத் துப்பாக்கி விற்பனை. வெளியான திடுக்கிடும் தகவல்…

0

சென்னையில் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்து வந்தது ஹோட்டல் உரிமையாளர் வெளியான அதிர்ச்சி தகவல்…

சென்னை புழல், மற்றும் காவாங்கரை பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக கொளத்தூர் உதவி ஆணையர் தனிப்படை பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் சம்மந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்த யோகேஷ் தலைமறைவானதால் தனிப்படை போலீசார் அருகில் உள்ள பொதுமக்களிடம் யோகேஷ் வந்தால் தகவல் தெரிவிக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை யோகேஷ் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் தனிப்படை போலீஸார் விரைந்து சென்று யோகேஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.மேலும், அவரது செல்போனை போலீஸார் ஆய்வு செய்த போது அதில் யோகேஷ் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

புழல் அம்மா நினைவு நகர் முதல் தெருவில் வசித்து வரும் யோகேஷ் (35) புழல், காவாங்கரை, பகுதியில் சொந்தமாக தாதா ஓட்டல் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருவது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்று வந்த யோகேஷ், சட்டவிரோதமாக கள்ளத் துப்பாக்கி வாங்கி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.கடந்த 9 மாதங்களுக்கு முன்பு யோகேஷ் உத்திர பிரதேசத்தில் இருந்து இரண்டு கள்ளத் துப்பாக்கியை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வாங்கி வந்த துப்பாக்கியை சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அபுதாகீர் என்பவருக்கும், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது.

2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம்பிடித்த பெண்.. கணவர் அதிர்ச்சி.

0

கணவன் கொடுத்த புகாரை படித்த காவல்துறையினர் புகார் கொடுத்த கணவனுடன் வந்த தாயின்றி தவிக்கும் இரு குழந்தைகளையும் பார்த்து மனம் உடைந்தனர்…

ஒடிசா இளைஞருடன் சென்ற மனைவியை கண்டுபிடித்து தரும்படி இரு குழந்தைகளுடன் கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

ஜார்கண்ட் மாநிலம் மகேஷ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நஜிபுல் ஷேக் இவரது மனைவி சஹினா, இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக கடந்த வாரம் சென்னை வந்துள்ளனர்…

அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அப்டேட்.

0

சென்னையில் அடுத்த அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (14.09.2023) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (15.09.2023) காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 3- 4 தினங்களில் மேற்கு திசையில் நகரக்கூடும்.

பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு தி.மு.க சார்பாக மாலை அணிவித்து மரியாதை..

0

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  நிகழ்ச்சியில் பொங்கலூர் பழனிச்சாமி,  மாநகர் மாவட்ட நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிலை குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கிளைச் செயலாளர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மார்க் ஆண்டனி வெற்றியடைய ஏழுமலையானிடம் சரணடைந்தேன் – நடிகர் விஷால்…!

0

டைம் மெஷின் மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், விஷால் – எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் என கூறப்படுகிறது.

நாளை திரையரங்குகளில் வெளியாகும் மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றியடைய வேண்டி திருப்பதி ஏழுமலையானிடம் சரணடைந்தேன் என நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும் டைம் மெஷின் மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், விஷால் – எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் என கூறப்படுகிறது. அதற்கான தனித்தனி தோற்றங்களும் அவர்களுக்கு உள்ளன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து நாளை திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இன்று திருப்பதி கோவிலில் விஷால் ஏழுமலையானை வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட விஷாலுக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன…

₹1000 மகளிர் உரிமைத் தொகைக்கு வழங்கப்படும் ஏடிஎம் கார்டு…!

0

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான பிரத்யேக ஏடிஎம் கார்டு படம் வெளியாகியுள்ளது…

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உதவித் தொகைத் திட்டம், அண்ணா பிறந்தநாளான நாளை முதல் செயல்படுத்தப்படவுள்ளது…

இத்திட்டத்திற்காக சுமார் ஒரு கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்…

திருப்பதி செல்லும் பக்தர்கள் இனி பயம் இல்லாமல் பாதயாத்திரை போகலாம்… தேவஸ்தானம் எடுத்த ஆக்‌ஷன்…!

0

திருப்பதி பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவஸ்தான நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது…

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆந்திர தலைமை வன காவலர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்…

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளார்களுக்கு பேட்டி அளித்த ஆந்திர மாநில தலைமை வன காவலர் மதுசூதன் ரெட்டி, ” லக்ஷிதா என்ற ஆறு வயது சிறுமி பெற்றோருடன் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக சென்று கொண்டிருந்தபோது சிறுத்தை புலி தாக்கி மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன…

இதன் ஒரு பகுதியாக தேவஸ்தானத்தின் நிதி உதவியுடன் நடைபாதை அருகில் உள்ள பகுதிகளில் 500 ட்ராப் கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டு 300 கேமராக்கள் இதுவரை பொருத்தப்பட்டுள்ளன. தானியங்கி முறையில் செயல்படும் இந்த கேமராக்கள் மூலம் சிறுத்தை புலி, கரடி ஆகியவை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அந்த பகுதியில் இருக்கிறதா என்று உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் இதுவரை ஐந்து சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று அடைத்து வைத்திருக்கிறோம்…

பிற மொழிகளை இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்…

0

இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒட்டு மொத்த இந்தியாவையும் இந்தி மொழி ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்…

முன்னதாக, இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ” உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருவதாக தெரிவித்தார். அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் அதிகாரமளிக்கும் ஊடகமாக இந்தி மாறும் என்றும் தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், வளமான ஆட்சி மொழியாக இந்தி உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது என்று தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…

₹1000 பணம் வங்கி கணக்கில் டெபாசிட் ஆகிவிட்டது… இல்லத்தரசிகள் ஹேப்பி…!

0

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50ஆயிரம் பயணாளர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், அநேக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ₹1,000 -ஐ செலுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்…

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதற் கட்டமாகவும் மற்றும் 05.08.2023 முதல் 16.08.2023 வரை இரண்டாம் கட்டமாகவும் நடத்திட அட்டவணை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், ஆகஸ்ட் மாதம் 18, 19,20 ஆகிய மூன்று நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50ஆயிரம் பயணாளர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். நாளை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.