Saturday, April 18, 2026
Home Blog Page 33

₹90,00,00,00,000 பணம் இப்படிதான் வந்தது… தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி விளக்கம்…

0

கார் டிரைவர் வங்கி கணக்கில் ரூ.9000 கோடி பற்று வைத்ததால் வங்கிக்கு இழப்பு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது…

டிரைவர் வங்கி கணக்கில் விழுந்த ரூ.9000 கோடி பணம் இந்த செய்திதான் சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது. ராஜ்குமார் என்ற கார் டிரைவரின் அக்கவுண்டில் தான் இந்த 9000 கோடி விழுந்துள்ளது. பழனியை சேர்ந்த ராஜ்குமார் பிழைப்புக்காக சென்னைக்கு வந்து நண்பன் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளார். செப்டம்பர் 9-ம் தேதி மாலை 3 மணிக்கு இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. ரூ.9000 கோடி உங்க வங்கி கணக்கில் டெபாசிட் ஆகியுள்ளது என வந்துள்ளது. அக்கவுண்டில் வந்திருப்பது 9,000 கோடியா என்பதை அறிவதே முதலில் அவருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.

நம்ம அக்கவுண்டில் ரூ.15 தான் இருக்கும் நமக்கு யார் இத்தனை கோடி போடப்போறாங்க. யாரோ நம்மை ஏமாற்ற இப்படி மெசேஜ் அனுப்பியிருக்காங்க. இது ஒரு மோசடி மெசேஜ் என்று தான் முதலில் நினைத்துள்ளார். அதன்பின் போன் ஆப்பில் செக் செய்தபோது அக்கவுண்டில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது உண்மை தானா என சோதிக்க தனது நண்பன் வங்கி கணக்குக்கு ரூ. 21,000 அனுப்பியுள்ளார். இந்த பணப்பரிவர்த்தனை நடந்த சிறிது நேரத்தில் வங்கியானது மீதமுள்ள பணம் அனைத்தையும் திரும்ப பெற்றுள்ளது.

இதனையடுத்து தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமையை அலுவலத்தில் இருந்து ராஜ்குமாருக்கு போன் செய்துள்ளனர். தவறுதலாக ரூ.9000 கோடியை உங்க அக்கவுண்டில் டெபாசிட் செய்துவிட்டோம். நீங்க ஷேர் செய்த பணத்தை செலவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள கிளை அலுவலகத்துக்கு அவரை நேரில் வருமாறு அழைத்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகை என் அக்கவுண்டுக்கு வந்துள்ளது. இதனால் எனக்கு பிரச்னை எதாவது வந்துவிடும் நான் எதற்கும் காவல்நிலையத்தில் ஒரு புகாரை பதிவு செய்துவிடுகிறேன் என கூறியுள்ளார்.

பருவமழை – அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை.

0

வடகிழக்கு பருவமழையின் பலன்களை அதிகம் பெறுவதும், சேதங்களை தவிர்ப்பதும் அவசியம்.

பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க பாதுகாப்பான இடங்களை கண்டறிந்து வைத்திருக்க வேண்டும்.

நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் போது முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும்

தமிழகமெங்கும் அவசர கால கட்டுப்பாட்டு மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

கன்னத்தில் திடீர் முத்தம்… சிறுமியின் செயலால் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

0

13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் 19 முகாம்களில் 79 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் 1, 591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.

புதிதாக கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வேலூர் முகாமில் 11 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 220 வீடுகளை வீடுகளை திறந்து வைத்தார். 5 பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை அவர் வழங்கினார்.

ரூ.1000 கிடைப்பதில் இப்படி ஒரு சிக்கலா? பிடித்தம் செய்யும் வங்கிகள்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை..!

0

Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகையில் இருந்து வங்கிகள் பணம் பிடித்தம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.065 கோடி மகளிருக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்தார்.

இந்த திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும். தமிழ்நாட்டின் இத்திட்டத்தைப் பற்றி மற்ற மாநிலங்களும் வியந்து பாராட்டி வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும் என்று தெரிவித்துள்ளார்.

2 முறை தலைகீழாக சுத்திய பைக்.. பயங்கர விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் படுகாயம்! பதற வைக்கும் வீடியோ…

0

சென்னை: சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். இவர் நடத்திய நிகழ்ச்சிக்கு யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பல ஆயிரம் பேர் திரண்டனர்.

இவர் இந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் இருப்பவர். அதேநேரம் இவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இதற்காக இவர் நீதிமன்ற படிக்கட்டிற்கும் ஏற வேண்டி இருந்தது.

தொடர்ந்து சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுவது, அபாயகரமான பைக் ஸ்டன்ட்களை செய்வதை இவர் வாடிக்கையாகவே வைத்துள்ளார். இதற்கிடையே இன்று அவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வழக்கம் போல பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.



சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் பயணம் செய்த நிலையில், மாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பைக் விபத்து குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் வீலிங் செய்ய முயன்ற போது அவர் நிலைதடுமாறிய பள்ளத்தில் விழுகிறார்.

இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் இப்போது அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா : திமுக எம்.பிக்களுக்கு கட்சி தலைமை முக்கிய உத்தரவு…!

0

One nation one election | நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்த்து வாக்களிக்க திமுக எம்.பிக்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அறிவுறுத்துதல், விஸ்வகர்மா யோஜனா திட்ட கைவிடுதல் ஆகியவற்றை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தவும், மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்னையை எழுப்பவும் திமுக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றார் நடிகை விஜயலட்சுமி…!

0

சீமான் பேசும் வார்த்தைகள் கூட தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது – நடிகை விஜயலட்சுமி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நியாயம் கிடைக்கும் என வந்த தன்னை பயன்படுத்திக் கொண்டதால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் கூறினார்.வீரலட்சுமி தன்னை தவறாக வழிநடத்துகிறார் என்பதை அறிந்து கொண்டேன் இதன் காரணமாகத்தான் நான் கண்டித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டும் இருந்தேன்.யாரும் தன்னை கட்டாய படுத்தியோ, மிரட்டியோ இந்த வழக்கை வாபஸ் பெற வில்லை.

நானாக தான் வாபஸ் பெறுகிறேன்.சீமானிடம் இது குறித்து பேசினேன் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை நான் தொடர்வதாக இல்லை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இந்த வழக்கு தனக்கு திருப்திகரமாக இல்லை. புகார் அளித்த தன்னை மட்டுமே அசிங்கப்படுத்தி வந்தனர்.சீமான் மீது காவல்துறையிடம் அளித்த புகார் குறித்து விசாரணை தொய்வாகவே இருந்தது. சீமான் பேசும் வார்த்தைகள் கூட தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது .தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன்.”என்றார்

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 14 வரை நீட்டிப்பு…!

0

10 ஆண்டுகளில் வீடு அல்லது வேறு ஊருக்கு குடிபெயர்ந்து இருந்தால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய விலாசத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

செப்டம்பர் 2010 இல் இந்திய அரசு தனது குடிமக்களுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டையை வழங்கும் யோசனையில் ஆதார் அட்டை முறையை கொண்டுவந்தது. கொண்டு வந்து 13 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் அதில் உள்ள தரவுகளை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள 2023 ஆண்டின் தொடக்கத்தில், குடிமக்களுக்கு UIDAI அனுமதி வழங்கியது.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அட்டையில் தேவையான தகவல்களை புதுப்பித்துக்கொள்ள இது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. முதலில், இலவச புதுப்பிப்பு காலக்கெடு ஜூன் 14 என நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், அரசாங்கம் இந்த காலக்கெடுவை செப்டம்பர் 14 வரை நீட்டித்தது. இப்போது, ​​இரண்டாவது முறையாக, இலவச ஆன்லைன் ஆதார் அட்டை புதுப்பிப்பு காலக்கெடுவை அரசாங்கம் மேலும் நீட்டித்துள்ளது . குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை டிசம்பர் 14 வரை இலவசமாகப் புதுப்பிக்க வாய்ப்பளித்துள்ளது.

UIDAI ஆனது myAadhaar போர்ட்டலில் இலவச ஆவண புதுப்பிப்பு வசதியின் பலனைப் பெற குடியிருப்பாளர்களை வலியுறுத்துகிறது. இந்தச் சேவையைப் பயன்படுத்த, தனிநபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். பொதுவாக, ஆதார் அட்டையில் ஒவ்வொரு விவரத்தையும் புதுப்பிப்பதற்கு ரூ. 50 செலவாகும்.ஆன்லைன் மாற்றங்கள் கட்டணமில்லா அப்டேட்களுக்கு மட்டுமே பொருந்தும்.மற்ற தரவுகளை ஆதார் மையங்களில் காசு கொடுத்து தான் செய்யவேண்டும்.

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்…

0

ஒரே நேரத்தில் கோயம்பேட்டில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துகள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விடுமுறையோ அல்லது விழாக்காலமோ எதுவாக இருந்தாலும் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்ககளுக்கு செல்வது வழக்கம், இதன் காரணமாக விடுமுறை, பண்டிகை என்றாலே கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்து போகும். ஊர்களுக்கு செல்பவர்கள் கூட்டம் கூட்டமாக கோயம்பேடைநோக்கி செல்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அவ்வாறு வரும் சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகளின் வசதிகளுக்காக, சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவு இயக்கப்பட்டன.

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்…. ஒரே வாரத்தில் 113 பேருக்கு பாதிப்பு உறுதி…

0

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கு 35 படுக்கை வசதி கொண்ட தனி வார்டும், பெரியவர்களுக்கு 45 படுக்கை வசதிக்கொண்ட தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் அண்மையில் பெய்த மழையால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னையில் உள்ள மதுரவாயலில் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.திருவாரூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி உட்பட நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி காணப்பட்டுள்ளது.

அவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் தனி வார்டு அமைக்கப்பட்டு , 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.