Thursday, April 16, 2026
Home Blog Page 30

உலகின் 8-வது கண்டம் கண்டுபிடிப்பு… 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்.

0

பாறை மாதிரிகள் சிலவற்றை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு உலக நாடுகள் பலவற்றில் முக்கிய செய்தியாக மாறியுள்து. கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என்று அழைக்கிறார்கள். இது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது.

சென்னை தியாகராயநகரில் சாலையில் திடீர் பள்ளம்… பொதுமக்கள் அதிர்ச்சி.

0

பாண்டிபஜார் அருகே டாக்டர் நாயர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது…

சென்னையில் நாள்தோறும் மழை பெய்துவரும் நிலையில், சாலைகளில் உள்ள மேடு, பள்ளங்களால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகளுக்காக சென்னை மாநகரில் தோண்டப்பட்ட ஏராளமான சாலைகள் மீண்டும் புதிதாக போடப்படாததால் நகரின் பெரும்பாலான உட்புற சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.

இதனால், மழை பெய்யும் போது வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வரும் நிலையில், சென்னையின் மிக முக்கியமான இடமும், லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமுமான தியாகராயநகரில் உள்ள சாலை திடீரென பள்ளம் ஏற்பட்டிருப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தியாகராயநகரில் உள்ள முக்கிய சாலைகளான கோபதி நாராயணா சாலை மற்றும் சர் தியாகராய சாலைகளை இணைக்கும் வகையில் டாக்டர் நாயர் சாலை உள்ளது. இந்த சாலையுடன் கோபாலகிருஷ்ணா சாலை மற்றும் ராம தெரு சந்திக்கும் இடத்தின் அருகே இன்று(28.09.2023) காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது.

சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ..!

0

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது…

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு தற்போது இயக்கியுள்ளார். அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கங்கனா சந்திரமுகியா நடித்துள்ளார் இவர்களுடன் ராதிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

’லியோ’படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது..

0

‘லியோ’ படத்தின் 2வது பாடலான ‘BADASS’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு…!

லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரத்து – கொந்தளித்த சீமான்…

0

“தமிழக மக்கள் அமைதியாக இருப்பது கோழைத்தனம் என நினைத்து விடாதீர்கள். கர்நாடகாவில் தமிழக முதல்வருக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் மானுட அவமானம்”-சீமான்

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்காதது கண்டிக்கத்தக்கது என கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வந்திருந்த சீமான், சிவந்தி ஆதித்தனாரின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேசுகையில், “காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் கர்நாடகாவில் தமிழக முதல்வரை அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர் தனிப்பட்ட முறையில் அவருக்காக தண்ணீர் கேட்கவில்லை, தமிழக மக்களுக்காக கேட்கிறார். காவிரி நதி நீர் பிரச்சினையில் அனைவரும் தமிழக முதல்வரின் பின் நிற்க வேண்டும்…

காலாண்டு விடுமுறை… தனியார் பள்ளிகள் புதிய அறிவிப்பு…

0

அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது…

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கிழ் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3ஆம் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 2 வாரங்கள் நடந்த தேர்வு இன்றுடன் (27.09.2023) நிறைவடைந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன் அதிரடி…

0

பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கவியரசு மற்றும் வடவள்ளி பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர்கள் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலம் பார்த்த போது அந்நிய நபரிடமிருந்து வாட்ஸ்-அப்-ல் (WhatsApp) வந்த குறுஞ்செய்தியை நம்பி அதன் மூலம் கிடைக்கப்பெற்ற Telegram ID link-னுள் சென்ற பொழுது சிறிய Task-கள் செய்து கொடுத்து அதன் மூலம் சிறுதொகை முதலீடாக பெற்றுள்ளனர். பின்னர் இதனை உண்மை என நம்பியவர்கள் மேலும் முதலீடு செய்து Task-யில் செல்வதற்காக பல பரிவர்த்தனைகள் மூலம் கவியரசு ரூ.3,74,400/- பணமும், சிவராம கிருஷ்ணன் ரூ.10,65,968/- பணமும், செலுத்தி அதிக வருமானம் பெறலாம் என்று நம்பி பணம் செலுத்தியுள்ளனர். பின்னர் தாங்கள் தவறான வழிகாட்டுதலில் சென்று மோசடி அடைந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கவியரசு மற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முறையான நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தபட்ட நபர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும், கவியரசு என்பவரது மொத்தத் தொகையான ரூ.3,74,400/- மீட்கப்பட்டது. அதேபோல் சிவராம கிருஷ்ணன் என்பவரது பணம் ரூ.5,63,118/- மீட்கப்பட்டது. மேலும் மீதமுள்ள பணத்திற்கு வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டும், நீதிமன்ற உத்தரவு பெற்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளது.

மேற்படி மீட்கப்பட்ட ரூ.9,37,518/- பணத்திற்கான காசோலைகளை இன்று (27.09.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இருவரிடமும் வழங்கினார். பணத்தை திரும்ப பெற்ற இருவரும் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (27.09.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி மக்கள் குறை தீர்ப்பு முகாமினை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி. பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு மனுதாரர்களை விசாரித்தார்.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 84 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும், 72 மனுக்கள் மீது சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது.

197.500 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (26.09.2023) கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை மளிகை கடைக்கு பின்புறம் உள்ள பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த எட்டிமடை பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் அருள்ராஜ்(40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.1,50,000/- மதிப்புள்ள 197.500 கிலோகிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 404 நபர்கள் மீது 391 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 3151.818 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.