Saturday, April 18, 2026
Home Blog Page 31

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

0

TN Rain Update | தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது…

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பாக மனு..

0

கோயமுத்தூர் மாவட்டத்தில் 143 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் விவசாய உள்கட்டமைப்பு நிதி (MSC / AIF) திட்டத்தின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமுல்படுத்த வேண்டும் என கூட்டுறவுதுறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது ,ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறது ,இதனால் சங்கங்கள் மேலும் நட்டத்திற்கு உள்ளாகி நிதி நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதினை கைவிடக்கோரி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்பியா சங்கத்தை சேர்ந்த கோவை மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் ,கோவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலையிலும் கோவை மண்டல இணைபதிவாளர் அவர்களுக்கு மனு அளித்தனர் ,

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட இணை பதிவாளர்களுக்கும் கோரிக்கை மனு டாக்பியா தொழிற்சங்கம் மூலம் தரப்பட்டுள்ளது ,இதில் டாக்பியா மாவட்ட பொருளாளர் துரைசாமி,மேற்கு மண்டல தலைவர் ரமணி,மற்றும் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கப் பணியாளர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்,
மேற்கண்ட கோரிக்கை பரிசிலித்து நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற 03/10/2023-ம் தேதியன்று ஏற்கனவே வாங்கியுள்ள உபகரணங்களை ஒப்படைத்துவிட்டு அனைத்துப் பணியாளர்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர் .

I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

0

I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள்; அதிமுக-பாஜக கூட்டணி முறிவு அரசியல் நாடகம். வாக்குறுதி அளித்தபடி ரூ.1000 கொடுத்தோம். பிரதமர் வாக்குறுதி அளித்த ரூ.15 லட்சம் எங்கே? என்று தருமபுரியில் நடந்த திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு உள்ளார்..

அண்ணாமலை கூறிய ஒற்றை வரியில் பதில்.

0

இன்று சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவையில் இன்று நடைபெற்று வரும் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்தான கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
இது குறித்து ஒற்றை வரிகள் பதில் அளிக்க வேண்டும் என்றால் நம்முடைய தேசிய தலைமை இது குறித்து பேசுவார்கள். ஏனென்றால் பாஜக ஒரு அகில இந்திய கட்சி தேசிய தலைவர்கள் உள்ளார்கள் அவர்களுடைய கவனத்திற்கு தற்பொழுது இது சென்றுள்ளது. எனவே அவர்கள் பேசுவார்கள் என தெரிவித்தார்.

தேசிய தலைமை கூறும் வரை எந்த கருத்தையும் வெளியிட மாட்டோம் – வானதி சீனிவாசன்…

0

இன்று சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இது குறித்து ஏற்கனவே பாஜக மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தேசிய தலைமை அறிவிக்கின்ற வரை நாங்கள் கருத்தையும் வெளியிடுவதாக இல்லை. இது குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள் அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம். அதிமுக வினர் கூறிய கருத்துக்களும் அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

விற்பனைக்காக குட்கா எடுத்து சென்ற மூவர் கைது

0

திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனகுப்பம் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு எதிரே ஆய்வாளர் திரு.செல்வராஜ் உதவியாளர் திரு.மணிகண்டன் மற்றும் காவலர்கள் தலைமையில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது

அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டறிந்து

காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பொறக்கன்தாங்கள் பிள்ளையார் கோவில் தெரு, செல்வம் என்பவரின் மகன் கிரண் குமார் வயது 22 மற்றும் திருக்கோவிலூர் தாலுகா எம்.குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் செல்வம் வயது 47, கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் யுவராஜ் வயது 36 ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 168 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், cool lip, vimal, tobbaco போன்றவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம்..

0

கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம் ,தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தல்

காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் உத்தரவு.

வடமாநிலங்களுக்குச் சென்று திரும்பும் லாரிகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க வேண்டும்

தமிழ்நாடு லாரி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை..

கல்லூரி மாணவி கொடூர கொலை… காதல் கணவன் வெறிச்செயல்… வெளியான பகீர் தகவல்…

0

Murder | சேலத்தில் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள ஜோடுகுளி பகுதியை சேர்ந்த சிலர் ஆடு மேய்ப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தின் அருகே கிடந்த உடைகள், செருப்பு, தாலிக்கொடி ஆகியவற்றை வைத்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கோகிலவாணி (வயது 20) என்பதும் அரியலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் பாராமெடிக்கல் நான்காவது ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை சேர்ந்த பொறியாளர் முரளி கிருஷ்ணா (வயது 24) என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முரளி கிருஷ்ணாவின் தாயும் கோகிலவாணியின் சித்தியும் பெங்களூருவில் ஒரே இடத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது கோகிலவனிக்கும் முரளி கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அவ்வப்போது முரளி கிருஷ்ணா பெங்களூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சேலத்துக்கு வந்து கோகிலவாணியை பார்த்துச் சென்றுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் டிரோன்கள் கண்காட்சி… வித விதமான டிரோன்களை கண்டு வியந்த பொதுமக்கள்…

0

Drone Exhibition | உத்தரபிரதேச டிரோன்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட டிரோன்களை கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர்.

இந்தியாவிலேயே தயாரான டிரோன்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாரத் டிரோன் சக்தி 2023 என்ற பெயரில் உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் டிரோன்கள் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை தொடங்கிவைத்தார். ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியில் வகை வகையான டிரோன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. குறிப்பாக, விவசாயத் துறை, மருத்துவப் பயன்பாடு, நில அளவை உள்ளிட்ட துறைகளுக்கான டிரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என தீர்மானம்?…

0

கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு. புதிய கட்சிகளை இணைத்து கூட்டணி உருவாக்கவும் அதிமுக திட்டம்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்த அண்ணாமலையின் கருத்து அதிமுகவில் புயலை கிளப்பியதால், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், அதிமுகவுடன் எந்த பிரச்னையும் இல்லை என்ற அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க தாம் வரவில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர், டெல்லியில் பாஜக தலைவர் நட்டாவை சந்தித்து அண்ணாமலை மீது புகாரளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அக்கட்சி அவசர அழைப்பு விடுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை சென்னையில் கூட்டம் நடைபெற உள்ளது.