Saturday, April 18, 2026
Home Blog Page 29

தூய்மை பணியில் ஈடுபட்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

0

கோவையில் தூய்மை பணியில் ஈடுபட்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று  அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தூய்மைக்காக திட மற்றும் திரவ கழிவுகளை அகற்ற தூய்மை பணிகளின் முக்கியத்துவம் உணர்த்தும் விதமாக தூய்மை பணியாளர்களுடன் இணைந்து அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ,

பாரதப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுக்க தூய்மை பணிகள் கோடிக் கணக்கானோர் ஈடுபடுவதாகவும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பா.ஜ.க வினர் உடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டதாகவும், மேலும் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களிடம் அவர்கள் குறைகளை கேட்டு அறிந்ததாகவும், தெரிவித்தவர். அதனை அரசாங்கத்திடம் கொண்டு சென்று தீர்வு காணும் என்று வாக்குறுதி அளித்து உள்ளதாகவும் கூறினார்.

கோயமுத்தூர் மாநகராட்சியில் தூய்மை பணிகள் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கைகளை முன் வைத்து உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் ஒரு வாரம் சென்ற பின்பு தான் தூய்மை பணியில் செய்வதாகவும் மேலும் தூய்மை பணியாளர்கள் குறைவாகத் தான் உள்ளதாகவும், அவர்களுக்கு பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் இல்லாமல் ஆயிரக் கணக்கான தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணி இல்லாமல், தற்காலிகமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருவதாகவும் மேலும் குறைவான ஊதியத்தில் பணி செய்து வருவதாகவும் இதனை தமிழக சட்டமன்றத்தில் பேச உள்ளதாகவும், மேலும் தமிழக முதல்வரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் கூறியவர், கோவையை பொறுத்தவரை தூய்மை பணியில் ஆயிரக் கணக்கான தன்னார்வலர்களை கொண்ட மாநகரம் இது. மற்ற மாவட்டங்களை விட தன்னார்வ தொண்டர்கள் இங்கு பணியாற்றுவதை பார்க்கலாம், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

காவிரி நதி நீர் விவகாரம்- கோவையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0

: “எங்கள் காவிரி. எங்கள் உரிமை” என்பதை வலியுறுத்தி கோவையில் நாம் தமிழர் கட்சியினர் கர்நாடக அரசை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கான காவிரி நீரை தருவதற்கு கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையில், தமிழக விவசாயிகள் உட்பட பல்வேறு கட்சியினர் தமிழக அரசு காவிரி நீரை பெற்று தர கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென தெரிவித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை கர்நாடக அரசு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும்  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒரு பகுதியாக கோவை டாடாபாத் பகுதியில்  கோவை மண்டல செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் “எங்கள் காவிரி எங்கள் உரிமை, காவிரியில் வேண்டும் தண்ணீர் மக்களுக்கு அதுவே குடிநீர், தண்ணீரை கொடு அல்லது தனியாக விடு, காவிரி உனக்கு அரசியல் எங்களுக்கு வாழ்வியல்” உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் தண்ணீர் கேட்பது பிச்சை இல்லை எங்கள் உரிமை என்றும், காவிரி நமது குருதி ஓட்டம் என்றும், கன்னடனே ஒழிய வேண்டும் என்றும், நீரை தர மறுத்தால் மின்சாரத்தை தர மறுப்போம் என்றும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

அரண்மனை 4′ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியானது…

0

‘அரண்மனை 4’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு..!

சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘அரண்மனை 4’ திரைப்படம், 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

தொண்டாமுத்தூர் பகுதியில் 5 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (29.09.2023) தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், அவர்களின் உத்தரவின்பேரில், தொண்டாமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொண்டாமுத்தூர் கிழ‌க்கு தெருவில் உள்ள தனியார் பாக்கு செட்டில் சோதனை செய்த போது சுமார் 18 முதல் 20 மில்லி கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 175 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேற்கொண்டு விசாரணை செய்ததில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சாதிக் அலி மகன் ஜாகிர் உசேன் (36) என்பவர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மேற்படி போதை பொருளை கடத்தி வந்து மேற்படி பாக்கு செட்டில் வேலை செய்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நூர்கல் இஸ்லாம் மனைவி அஸ்மா (40) என்பவர் மூலம் விற்பனை செய்வது தெரிய வந்தது. பி‌ன்ன‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் மேற்படி ஜாகிர் உசேன் (36) மற்றும் அஸ்மா (40) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 5 லட்சம் மதிப்புள்ள சுமார் 25 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள், பிளாஸ்டிக் குப்பிகள் மற்றும் 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 474 நபர்கள் மீது 353 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 661.676 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் இடைநீக்கம்..

0

கோவை மாநகராட்சி 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் இடைநீக்கம்..

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற உறுப்பினர் கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது கோவை மாநகராட்சியில் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு மேல் தாமதமாக வரி செலுத்துபவர்களுக்கு ஒரு சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்ததை ரத்து செய்ய கோரி அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா,பிரபாகரன் மற்றும் ரமேஷ்   ஆகியோர் பதாகைகளுடன் மாமன்ற கூட்டம் நடக்கும் விக்டோரியா ஹாலுக்குள் சென்று வலியுறுத்தினர். இதனால் மூவரையும் வெளியேறுமாறு மேயர் கூறியதை அடுத்து மூவரும் விக்டோரியா ஹாலிக்கு வெளியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் 47 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை இடைநீக்கம் செய்தும் அடுத்த இரண்டு கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்தும் மேயர் கல்பனா  உத்தரவிட்டுள்ளார்.

5 கிலோ தங்கம் கொள்ளை.. கார் பறிமுதல்…

0

தருமபுரியில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…

கோவை ராஜவீதியில் பிரசன்னா (வயது 40) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் புதன்கிழமை இரவு தனது கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள புதிய நகைகளை பெங்களூருவில் இருந்து வாங்கிக்கொண்டு காரில் கோவை திரும்பினார். அவருடன் கடையில் பணியாற்றும் விஜயகுமார், சுரேஷ்குமார், ஜெய்சன் ஆகியோரும் பயணித்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பூலாம்பட்டி என்ற பகுதியில் அவர்கள் சென்றபோது, 2 கார்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அத்துடன், திடீரென பிரசன்னாவின் காரை வழிமறித்து அந்த கும்பல் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை அடித்து கீழே தள்ளி விட்டனர். பின்னர், அவர்களிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததுடன் காரையும் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து காரிமங்கலம் காவல்நிலையத்தில் பிரசன்னா புகார் அளித்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் விசாரணை நடைபெற்றது. மேலும், சம்பவ இடத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த இடத்தில் கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்புக் கம்பி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

இணையத்தில் அதிக பார்வைகளை பெற்றது ‘லியோ’ 2-வது சிங்கிள்!

0

குலசாமிய வேண்டிக்க மாமே… மொரைக்காத நீ – இணையத்தில் அதிக பார்வைகளை பெற்றது ‘லியோ’ 2-வது சிங்கிள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் லலித் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் லியோ. இதில் விஜயுடன் திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தமிழ் நடிகர் அர்ஜுன், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இரண்டாவது பாடலை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS’ பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் தற்போது 8 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தை கலக்கி வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

0

சுற்றுச்சூழல் வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பசிப்பிணி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய குறிக்கோளுக்கு முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றியவர். கலைஞர் முதல்வராக இருந்தபோது மாநிலத் திட்டக் குழுவில் இடம்பெற்று ஆலோசனைகளை வழங்கினார். நீடித்த உணவுப்பாதுகாப்புக்கு ஆற்றிய பங்களிப்பால் பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்பட்டவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழச்சி உருவாகக்கூடும்…

0

மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழச்சி உருவாகக்கூடும்;

அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடலில், மியான்மர் கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் 30ம் தேதி நடைபெறவிருந்த LEO இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது.

0

இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கோரி கடந்த 20ம் தேதி கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..!