Saturday, April 18, 2026
Home Blog Page 28

லியோ அப்டேட்…

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 5ம் தேதி சன் டிவி யூடியூப் தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது..

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்அன்புமணி ராமதாஸ்..

0

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை காக்க வேண்டும் எனில் அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று அவர் தெரிவித்தார்..

தூய்மை பணியில் ஈடுப்பட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

0


கோவையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சாலையகளில் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்..

குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

0

அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான 2 நாள் ஆலோசனை மாநாடு இன்று நடைபெற்றது.

மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது நமது முதல் இலக்கு. அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது. கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பொய்ச்செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் உள்நோக்கத்தோடு சிலர் அமைதியை கெடுக்க செயல்படுவர்; அதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். சாலை விபத்துகளால் அதிக மரணம் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது வேதனையளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை ஒருங்கிணைந்து விபத்துகளை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.

சென்னை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு திட்டம் ஏற்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் சமரசம் இருக்கக் கூடாது. குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்று தர வேண்டும். சமூக ஊடகங்களை கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் தொடர்ந்து கண்காணித்து பொய் செய்திகளை தடுக்க வேண்டும் என்று பேசியுள்ளார்..

லியோ டிரெய்லர் அப்டேட்..

0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் அக்டோபர் 5 வெளியாகிறது, அதை தொடர்ந்து அக்டோபர் 19 திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது…

வானிலை இன்று.. 7 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை… வானிலை அலெர்ட்!

0

TN Rain Update | கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவாஜி கணேசனின் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை…

0

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிவாஜி கனேசனின் குடும்ப உறுப்பினர்கள் ராம்குமார், பிரபு மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை..!

லால் சலாம்’ படம், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும்..

0

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றது, இதனை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சாலம் என்ற படத்தில் நடித்து வந்தார் .இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள் தற்போது இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு.

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுங்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்..

0

டெங்கு அச்சுறுத்தல்… 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுங்கள்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!
Dengue Fever | 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 363 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் பொதுமக்கள் மருத்துவர்களை அணுகுமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர், தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் மழை கால தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.’