அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்களிடம் மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கவும், முகாமில் உள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு..
அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்களிடம் மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கவும், முகாமில் உள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு..
மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை மற்றும் காற்று இன்று இரவு வரை தொடர வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
மிக கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை. சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கும் விடுமுறை.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை பொறுத்தவரை அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் அர்ஜுன் @ சின்ன கருப்புசாமி (25) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி திருட்டு வழக்கு குற்றவாளியான அர்ஜுன் @ சின்ன கருப்புசாமி (25)- யை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
காமாரெட்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் வெங்கட ரமணா ரெட்டி 6692 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இரு தொகுதிகளில் போட்டியிட்ட ரேவந்த் ரெட்டி மற்றும் சந்திரசேகர ராவ், காமாரெட்டி தொகுதியில் நேருக்கு நேர் மோதி தோல்வியை தழுவியுள்ளனர்.
இந்நிலையில் கொடங்கல் தொகுதியில் ரேவந்த் ரெட்டியும், காஜ்வெல் தொகுதியில் சந்திரசேகர ராவ்வும் வெற்றிப் பெற்றுள்ளனர்.
அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும் அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும் என்று தனது X தளத்தில் பதிவு செய்து உள்ளார்..
அடர்ந்த மேகங்கள் சென்னைக்கு மிக அருகில் உள்ளன. அடுத்த சில நிமிடங்களில் அவை சென்னை மீது விழுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இதனால், அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னையில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை விட்டு விட்டு பெய்து வந்த மழை, இனி தொடர்ந்து 1 மணி நேரம் அல்லது அதற்கு மேலாக கூட பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
சென்னை மீது 150 கி.மீட்டர் அகலத்துக்கு விரிந்துள்ள அடர்ந்த மேகங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விழுவதற்கும் ரொம்ப ரொம்ப வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
நாளை ஒரு நாள் மட்டும் இந்த புயலின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருக்கும். நாளை இரவு அல்லது 5ம் தேதி காலையில் இருந்தே புயலின் தாக்கம் குறைந்துவிடும்
இந்தியாவில் பாஜக முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 9ல் இருந்து 12 ஆக உயர்ந்தது.
காங்கிரஸ் முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 4லிருந்து 3ஆக குறைந்தது.
தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
அனைத்து தரப்பு மக்களும் வளமுடன் திகழ, வளர்ச்சியை முன்னெடுக்கும் நல்லதொரு மாற்றமாக செயல்பட வாழ்த்துக்கள்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அஷோக் கெலாட்
ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.