Wednesday, April 22, 2026
Home Blog Page 19

விபத்தில் சிக்கிய மேயர் பிரியா கார்..!

0

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார். ஓட்டுநருக்கு மட்டும் லேசான உள்காயம்!

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த மேயர் காரின் முன்னால் சென்ற கார், திடீரென திரும்பியதால் அதன் மீது மோதியது. இதனால் பின்னால் வந்த லாரி மேயர் பிரியா காரின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

0

தடகளப்  போட்டியில் கலந்து பரிசுகளை வென்ற காவலர்கள்..

கோவை மேற்கு மண்டல காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் பிப்ரவரி 13 முதல்16 வரை நடைபெற்ற 63-வது தமிழ்நாடு காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளப் போட்டி (63-rd TAMILNADU STATE POLICE INTER-ZONAL ATHELTIC CLUSTER-2023) போட்டியில் பங்கேற்றனர். மேற்படி தடகள போட்டியில் பங்கேற்ற 42 காவலர்கள் தங்கப்பதக்கம்-6, வெள்ளி-16 மற்றும் வெண்கலம்-20 பரிசுகளை வென்றுள்ளார். மேற்படி பரிசுகளை வென்ற காவலர்களை பாராட்டும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்  இன்று (19.02.2024) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார்.

2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு இரு மாநிலங்களின் காவல் உயர் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்…

0

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் கே.பவானிஸ்வரி  தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (19.02.2024) வருகின்ற 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய உயர் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற 2024 லோக்சபா தேர்தலை சுமூகமான முறையில் நடத்திடுவது பற்றியும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் பற்றியும், இரு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்தல்கள் நடமாட்டத்தை குறைப்பது பற்றியும், தேர்தலில் போது குழப்பம் ஏற்படுத்தி வன்முறையை தூண்டி தேர்தலை சீர் குலைக்கும் எண்ணத்தை உடையவர்களை கண்காணிப்பது பற்றியும், மாநிலங்களுக்கிடையான நுண்ணறிவு தகவல்களை பகிர்வது பற்றியும், தேர்தலின் போது மாநில எல்லைகளில் நடைபெறும் குற்றங்களை தடுத்திட சோதனை சாவடிகள் மற்றும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைப்பது பற்றியும், வாக்காளர்களை அச்சுறுத்தும் இயக்கங்கள் பற்றியும், தேர்தலின் போது ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணசுந்தர்,  கேரளா மாநில திருச்சூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அஜுதா பேகம், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்,  திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆனந்த்  மற்றும் திருச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நவநீத ஷர்மா, கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி கலால் ஆணையர் ஆகியோர் மேற்படி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திமுகவின் 33 மாத ஆட்சியில்! இத்தனை கோடி முதலீடா?

0

கடந்த 33 மாதங்களில், தமிழக அரசு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் மூலம், சுமார் 8.65 லட்சம் கோடி ரூபாயை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக, சுமார் 30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மக்களுக்கு உருவாக்கியுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:-

2021க்கு பிறகு 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல், 27 தொழிற்சாலைகள் திறப்பு காரணமாகவும் 74,757 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. 2030க்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்திற்கு மிக முக்கிய பங்களிக்கும் மாநிலமாக தமிழகத்தை உயர்த்த, திமுக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்று மாநாடு மூலம், ரூ.1,90,803 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாட்டு பயணங்கள் மூலம் ரூ.7,441 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

ஜனவரி 7,8-ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணம் மூலம் ரூ.3,440 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு…

0

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாகாளி மகன் ஆறுமுகம்(48) கடந்த 2020-ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் காவல் நிலையத்தில் ஆறுமுகம் (48) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று (31.01.2024) முடிவு பெற்று குற்றவாளி ஆறுமுகத்திற்கு ஆயுள் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் திரு. பிரபு (Gr1 1950) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் பாராட்டினார்.

கொலை குற்றவாளிக்கு 5½ வருட சிறை…

0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாணிக்கம் மகன் சக்திவேல்(32) கடந்த 2019-ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலையத்தில் சக்திவேல் (32) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று (31.01.2024) முடிவு பெற்று குற்றவாளி சக்திவேலுக்கு 5½ வருட சிறைதண்டனை மற்றும் ரூபாய் 2,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் திரு. ஹரி (PC 853) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் பாராட்டினார்.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (31.01.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 78 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 6 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும் (FIR), 63 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 15 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (27.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 73 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 1 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும்,4 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும் (CSR), 66 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 07 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

பாஜக விவசாயி அணி கோவையில் ஆர்ப்பாட்டம்…

0

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேங்காய் எண்ணெய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி தென்னை விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தென்னை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு தேங்காய் எண்ணையை ரேஷன் கடைகளில் வழங்க வலியுறுத்தி கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக கோவை மாவட்ட விவசாயி அணி தலைவர் வசந்தசேனன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் பலரும் கலந்து கொண்டு கைகளில் தேங்காய்களை ஏந்திய படி  மாநில அரசு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா?– முதல்வர் மு.க ஸ்டாலின்..

0



குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் என்று எல்லா சட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தவர் பழனிசாமி.

கூட்டணி தர்மத்திற்காக ஆதரிக்க வேண்டியதாக இருந்தது என்று சப்பைக்கட்டு கட்டினார்.

இப்போதுதான் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று ஒரு கபட நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறாரே! பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? இல்லையே!

இவரின் நாடகத்தை எல்லாம் பார்த்து மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள்.

இந்தியா கூட்டணிதான் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய அளவில் ஆட்சியை அமைக்கும் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைய நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்