Sunday, September 13, 2026

கரூர் சம்பவம்… நிதியுதவி செய்த கமல்..!

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்.27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது விஜய் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிதி வழங்கியது.

அதே போல, தவெக சார்பில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பிலும் தலா ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு மொத்தமாக 1 கோடி நிவாரண நிதி நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை சந்தித்து வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்பி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க இன்று கரூர் வருகை தந்தார். அதன் பின்னர் ஏமூர் புதூர், வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் 41 லட்சம் ரூபாய் நிதி உதவியை நேரடியாக வழங்கினார்.இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது. சதி திட்டம் குறித்து நாம் பேச வேண்டியது இல்லை. சட்டமும், நீதியும் அதை பார்த்துக் கொள்ளும். விரைவாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து உயிர் பலி குறைவுக்கு காரணமான செந்தில் பாலாஜியை பாராட்ட வேண்டும். கட்சி பேதமை பார்க்காமல், சட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தும் ஒரு முதலமைச்சராக செயல்பட்ட திமுக தலைவரை இந்த நேரத்தில் எண்ணி பெருமை கொள்கிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழக முதல்வருக்கு ஒரே ஒரு வேண்டுகோள். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் ஒதுக்குப்புறமாக தனி இடம் ஒன்றை ஒதுக்கி தர வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றேன். தமிழ்நாடு எப்படி முன்னுதாரணமாக மற்ற மாநிலங்களுக்கு உள்ளதோ? அது போல, அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த தனியிடம் மேற்கொண்டால் அனைத்திலும் தமிழகம் முன்னுதாரணமாக திகழும்.தமிழக வெற்றிக் கழகம் கூட்டம் நடத்த கோரிய லைட் ஹவுஸ் கார்னர் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே உள்ளது. அந்த இடத்தில் வழங்கியிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என கூற முடியாது. இனிவரும் காலங்களில் இது போன்று எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறக்கூடாது.” என்றார்.

கரூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியுமே என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை குறித்து கேட்டதற்கு, ” இது அரசியல் பேசும் நேரம் அல்ல, மனிதாபிமானம் குறித்து பேசும் நேரம். அதிமுக பேசுவது அரசியல். அனைத்து கட்சிகளும் அமர்ந்து இதில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியது குறித்து கேட்டதற்கு,  எவ்வளவு நிதி உதவி கொடுத்தாலும் இழந்த உயிரை மீட்டு தர முடியாது. அவர்களுக்கு நாம் பெற்று தர வேண்டியது நீதி மட்டும் தான்” என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...