Monday, September 14, 2026

அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் (தேசிய/மாநில/பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்(RUPP) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 29A இன் விதிகளின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்ட விதிகளின் கீழ்,அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட எந்தவொரு சங்கமும், சின்னம், வரி விலக்குகள் உள்ளிட்ட சில சலுகைகள் மற்றும் சலுகைகளைப் பெறுகிறது. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அக்கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். 2019ம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறிய பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPP) அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்கும் நாடு தழுவிய நடவடிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கையின் முதல் கட்டத்தில், ஆகஸ்ட் 9, 2025 அன்று 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டத்தில், 6 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய தேர்தல்களில் போட்டியிடாததன் அடிப்படையில், செப்டம்பர் 18, 2025ல் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இவ்வாறு, கடந்த 2 மாதங்களில் 808 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகைய மேலும் முன்னெடுக்க, கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் (அதாவது 2021/-22, 2022/-23, 2023/-24) நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தங்கள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்காததற்காகவும், தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் தேர்தல் செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யாததற்காகவும் 359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் உள்ள 23 வெவ்வேறு மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை. எந்தவொரு கட்சியும் தேவையற்ற முறையில் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, அந்தந்த மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் இந்த பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு (RUPP) நோட்டீஸ் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முதன்மை செயல் அதிகாரிகளால் விசாரணை மூலம் கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
முதன்மை செயல் அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியையும் (RUPP) பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கிறது என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எந்தெந்த மாநிலங்களின் எத்தனை கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கையும் வெளியிட்டுள்ளது. அதில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 121 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள மஹாராஷ்டிராவில் 44 கட்சிகளின் அங்கீகாரமும், 3 ஆம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 42 கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நான்காம் இடத்தில் உள்ள டெல்லியில் 40 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPP) தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்த பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்சிகள்

தமிழகத்தில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், எழுச்சி தேசம் கட்சி, கோகுலம் மக்கள் கட்சி பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, விடுதலை மக்கள் முன்னேற்றக் கழகம், திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட 42 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...