Thursday, April 16, 2026
Home Blog Page 36

இறுதியான பட்டியல்: 1.06 கோடி பேருக்கு ரூ.1000 உரிமைத்தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

0

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்…

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இன்று (11.9.2023) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான 15.9.2023 அன்று தொடங்கப்படவுள்ளதையொட்டி அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டார்…

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் சந்திப்பு

0

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் சந்திப்பு

ஆசிய மற்றும் சர்வதேச கலையுலகில் புகழ் பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

முன்னாள் அமைச்சர் ஆர். எம் வீரப்பன் பிறந்தநாள் முதலமைச்சர் நேரில் சென்று வாழ்த்து

0

முன்னாள் அமைச்சர், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பனின் 98வது பிறந்தநாள் வாழ்த்துகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்

மன்னிக்க கற்று தந்தவர் எனது தந்தை- ராகுல் காந்தி

0

எனக்கும், பிரியங்காவிற்கும் மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை ராஜீவ்காந்தி.

ராஜீவ் காந்தி நினைவு நாளில் அவரது மகன் ராகுல்காந்தி உருக்கமான பதிவு.

பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து வரும் நிலையில் ராகுல் ட்வீட்.

உயர் கல்வியில் பொற்காலமாக திகழும் முதல்வர்.

0

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேசுகையில் அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கியத் திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம்-

எனது தலைமையிலான இந்த அரசு உயர்கல்வியின் பொற்காலமாக திகழும்;இது மாணவர்களுக்கான அரசு என்பதில் பெருமைகொள்கிறேன்.

இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.

மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலை. உருவாக்கி உள்ளது.

தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை, என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறினார்

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

0

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கோதுமை விலை ஏறி வருகிறது.

இதை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருப்பினும் பிற நாடுகள் ஏற்கெனவே ஏற்றுமதி செய்யப்படும் கோதுமைக்கான தொகையை செலுத்தியதற்கான கடிதம் இருந்தால், அந்த நாடுகளுக்கு மத்திய அரசின் அனுமதியுடன் கோதுமையை ஏற்றுமதி செய்யலாம் என கூறியுள்ளது.

இன்று சபரிமலையில் நடை திறப்பு

0

வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று (மே 14) திறக்கப்படுகிறது.

மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார்.

வேறு பூஜைகள் எதுவும் இல்லை.

இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை முதல் மே 19ம் தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

ஆன்லைன்’ முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

மாநகர பேருந்துகளில் சிசிடிவி பொருத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

0

போக்குவரத்துத் துறை சார்பில் பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், 2500 மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தும் பணியின் முதற்கட்டமாக 500 பேருந்துகளில்

சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர அழைப்பு பொத்தான்கள் (Panic Button) பொருத்தப்பட்டு அதன் முன்னோட்ட செயல்பாட்டினை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

17வது ரோஜா கண்காட்சி துவங்கியது!

0

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி மற்றும் பழ கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த வாரம் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் பல வாசனை திரவிய பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் இன்று 17வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் அம்ரித், அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்ர்வையிட்டனர்.

வேளாண்மையை பாதுகாக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

0

வளமான தமிழகத்தை உருவாக்க வேளாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த கூட்டத்தில் பேசிய முதல்வர், காவிரி டெல்டா மிகவும் செழிப்பான பகுதி. மிகப்பெரிய வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி திகழ்கிறது. காவிரி நீரை பெற சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து போராடி வருகிறோம் என்று குறிப்பிட்டார்.


மேலும் அவர் பேசுகையில் விவசாயத்தை பாதிக்கும் எந்த ஆலைக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.