Sunday, April 19, 2026
Home Blog Page 25

கொள்ளையடித்த நபர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை..

0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கல்யாணசுந்தரம் (38) மற்றும் கார்த்திக்@கார்த்திக் குமார் (33) ஆகியோர்கள் கடந்த 2014-ம் ஆண்டு பொள்ளாச்சி தாலுக்கா பகுதியில் கதிர்வேல் (53) என்பவரது வீட்டிற்குள் புகுந்து மரணம் விளைவிக்கக் கூடிய கொடுங்காயத்தை ஏற்படுத்தி கொள்ளையடித்த குற்றத்திற்காக பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலையத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் கல்யாணசுந்தரம் (38) மற்றும் தங்கராஜ் மகன் கார்த்திக்@கார்த்திக் குமார்(33) ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று (08.11.2023) முடிவு பெற்று எதிரிகளான கல்யாணசுந்தரம் மற்றும் கார்த்திக்@கார்த்திக் குமார் ஆகியோர்களுக்கு தலா 7 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 7,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் திரு. நாட்டுதுறை (PC 1358) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் பாராட்டினார்.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (08.11.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 69 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 1 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும்,1 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும் (CSR), 62 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 5 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கண்டித்து கோவையில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0

சட்ட சபையில் பீகார் முதலமைச்சர் நித்திஷ் குமார் பேசும் போது மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்து அவர் பேசி இருந்தது தற்பொழுது சர்ச்சை கூறியதாகி இருக்கும் நிலையில், அவர் தனது பேச்சை திரும்பி பெற்றுக் கொள்வதாக தெரிவித்து உள்ளார். எனினும் அவர் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிதிஷ் குமாருக்கும் அவரின் பேச்சிற்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

‘பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பெண்கள் குறித்தும், மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்தும் அறுவருக்க தகவல் வகையில் பேசி உள்ளார். அவரது பேச்சைக் கண்டித்து பா.ஜ.க வினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து நாடு முழுவதும் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, தனது வார்த்தைகளை திரும்ப பெறுவதாக நிதீஷ்குமார் கூறி உள்ளார்.

ஒருபுறம் இந்த நாட்டில் உள்ள பெண்களின் கல்வி, உடல் நிலை, பாதுகாப்பு, பெருமை மற்றும் கண்ணியத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மேடையிலும் பெண்களை உயர்வுபடுத்தும் வேலையை செய்து வருகிறார்.

ஆனால், இந்தியா கூட்டணியில் இருக்கக் கூடிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் முன்னேற்றக் கழகம் கட்சியினர் யாரும் நிதீஷ் குமார் பேச்சுக்கு கருத்து தெரிவிக்காமல் மௌனமாக பார்த்து வருகின்றனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க நித்தீஷ்குமார் பேச்சுக்கு சற்றும் குறையாத வகையில் பேசி உள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சி தலைவர்களுடைய பெண்கள் குறித்த பார்வையை இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது. இவர்கள் சேர்ந்து இந்த நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்ய முடியும் என்பதை இவர்களது பேச்சு காட்டுகிறது. இதை மகளிர் மத்தியில் பா.ஜ.க மகளிர் அணியினர் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பேசிய பிரதமர், பெண்களை அவ மரியாதை செய்கின்ற வார்த்தையை கூட பயன்படுத்தக் கூடாது என பேசினார். உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண்களை அவமானப்படுத்தும் வார்த்தைகளை மாற்ற வேண்டும் என கூறி உள்ளது.

ஆனால் நாட்டின் மூத்த அரசியல்வாதி என பார்க்கக் கூடிய, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர், பலமுறை முதலமைச்சராக இருந்து அனுபவம் பெற்ற ஒருவர் இது போன்ற கேவலமான கருத்துக்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. ஆணாதிக்க மனநிலையை இந்த பேச்சுக்கள் காட்டுகிறது.

இந்தியா கூட்டணி என்பது பெண்களின் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் எதிரான கூட்டணி என்பதை பா.ஜ.க மகளிர் அணி பிரச்சாரத்தில் முன்னிறுத்தும்.

ராகிங் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,

ஒரு சில கல்லூரியில் ராகிங் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கோவையில் நடந்து உள்ள இந்த சம்பவத்தை பொறுத்த வரை அவர்கள் நடந்த பின்பு நடவடிக்கை எடுப்பதை தாண்டி, தவறுகள் நடப்பதற்கு முன்பு கல்லூரி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த விதத்திலும் புதிதாக வரும் கல்லூரி மாணவர்களின் உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் ராகிங் போன்ற செயல்களை பா.ஜ.க ஆதரிக்காது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத் துறை சார்பாக கூடுதலாக காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தற்போது தேவைக்கு ஏற்ப அளவில் முகாம்கள் நடத்தப்படவில்லை. மருத்துவமனையில் நாள்பட்ட காய்ச்சல் சிகிச்சைக்காக பொதுமக்கள் பலர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பலருக்கும் கொரோனா ஏற்பட்டு வருகிறது. எனவே மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தொடங்க வேண்டும்.

வருமான வரித் துறையினர் சோதனையை பொறுத்த வரை நாடு முழுவதும் எங்கெல்லாம் ஆதாரங்கள் கிடைக்கிறதோ அதன் அடிப்படையில் சோதனைகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

ஆழியார் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது…

0

கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் வசிக்கும் அமிர்த கௌரி கடந்த (28.08.2023) அன்று அவரது வீட்டினை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 15 சவரன் தங்க நகை திருடிச் சென்றுள்ளனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் ஆழியார் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படை அமைக்கப்பட்ட மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 26.10.2023 அன்று கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஜெயராஜ் (33), கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் முருகவேல் (37) மற்றும் ராமச்சந்திரன் மகன் கவின் குமார் (21) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், மேலும் விசாரணையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. எனவே, மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருடிய 15 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார்.

‘அம்மா’ என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் அவர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார்.

கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் அவர்களின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத் தக்கது.

அவரது ஆன்மீக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த திரு. பங்காரு அடிகளார் அவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் அவர்கள் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

திருட்டு வழக்கில் தங்க நகை பறிமுதல்…

0

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த (10.10.2023) அன்று நடைபெற்ற வீடு புகுந்து திருடிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தனிப்படையினர் விரைந்து கைது செய்து அவர்களிடமிருந்து மேற்படி வழக்கின் சொத்துக்கள் மற்றும் 6 குற்ற வழக்குகளின் சொத்துக்களான 105.5 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இத்தனிப்படையினரை

பாராட்டும் வகையில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் அவர்கள் இன்று (18.10.2023) கோவை சரக காவல் அலுவலகத்தில் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல்கண்காணிப்பாளர் திரு.நமச்சிவாயம் அவர்கள், காவல் ஆய்வாளர் திரு.தாமோதரன் அவர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள்-2, காவல் சிறப்பு உதவியாளர்-2 மற்றும் காவலர்கள்-3 ஆகியோரை பாராட்டி, பணவெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மாற்றம்…

0

கோவை மாநகராட்சி ஆணையாளர் மாற்றம் புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் நியமனம்.

இவர் சென்னை வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியாற்றி வந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளராக பதவி உயர்வுடன் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

0

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அருணாச்சல மகன் கிருஷ்ணகுமார்(39) என்பவர் கடந்த 05.12.2020 -ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் நந்தகுமார் (29) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரால், கிருஷ்ணகுமார் (39) என்பவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் Bomb Blast Court-ல் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று (17.10.2023) எதிரி கிருஷ்ணகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் மற்றும் காவலர் திரு. முத்துராஜா (982) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்., அவர்கள் பாராட்டினார்கள்.

தடாகம் பகுதியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (17.10.2023) தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் பெரிய தடாகம் பிரிவு அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த
ராஜ்குமார் மகன் மீனாட்சி சுந்தரம் (19), அடைக்கலம் மகன் சரத்குமார் (20), சக்தி மகன் சந்தோஷ்குமார் (19) மற்றும் முத்துராமலிங்கம் மகன் முத்துகிருஷ்ணன் (20) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 507 நபர்கள் மீது 381 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 680.891 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

தெருநாய்கள் கருத்தடை மையம் மூடல்…

0

கோவை மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தெருநாய்களை  கட்டுப்படுத்த சீரநாயக்கன் பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் ஆகிய இடங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கு தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒண்டிப்புதூர் மையத்தில் சமீபத்தில் ஆய்வு
செய்யப்பட்டது. அதில் போதிய சுகாதாரமின்றி இருந்ததாக தெரிகிறது. இதனால் அந்த கருத்தடை மையம் மூடப்பட்டு உள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியதாவது ஒண்டிப்புதூரில் உள்ள கருத்தடை மையத்தில் விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டது. அதில் கருத்தடை மையம் சுகாதாரமின்றி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அந்த கருத்தடை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு சுகாதாரத்தை உறுதி செய்த பிறகே அந்த மையம் மீண்டும் செயல்படும். வெள்ளலூரில் புதிதாக தெருநாய் கருத்தடை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.