புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.
பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் பயணம்.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார். இன்று காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுவார்.
அங்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்களை நெருக்கமாகக் கொண்டுவர உதவுகின்ற பனிஹால் க்வாசிகண்ட் சாலையில் சுரங்கப்பாதையை பிரதமர் திறந்துவைப்பார்.
மேலும், தில்லி – அமிர்தசரஸ் – கோத்ரா விரைவு ப் பாதைக்கான மூன்று சாலைத் திட்டங்களுக்கும் ராட்லே & க்வார் புனல்மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்குதல் அல்லது புனரமைத்தலை நோக்கமாகக் கொண்ட அம்ரித் சரோவர் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைப்பார்…
ஓரிரு நாட்களில் மின் தடை இருக்காது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார். 2 மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய 2 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இன்றை பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பிரதமர் மோடியுடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை
டெல்லி: டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இரு நாட்டு உறவு, பொருளாதாரம், உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரம் உள்ளிட்டவை பற்றி இருவரும் பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி தினம் நவம்பர் 1 முதல்வர் அறிவிப்பு
சென்னை: இனி ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் மீண்டும் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். மேலும் தமிழகத்தில் இனி ஆண்டுதோறும் 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம்
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ.500 அபராதம் வசூலிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்க சுகாதாரதறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
மூககவசம் கட்டாயம்
பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை
அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்
முதன் முறையாக இந்தியா வரும் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்
மக்கள் தொடர்பு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்
கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக டாக்டர் G.S.சமீரன் IAS அவர்கள் நியமனம்
கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக டாக்டர் G.S.சமீரன் IAS அவர்கள் நியமனம் திரு சமீரன் ஐஎஸ் அவர்கள் இதற்கு முன்பு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வந்தார்











