Monday, July 13, 2026

விரைவில் பத்திரப்பதிவு துறையில் வெள்ளை அறிக்கை..!

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவி ஏற்றது. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை மாதமாகும் நிலையில், இப்போது வரை நிதித் துறை மற்றும் மின்சார துறையில் வெள்ளை அறிக்கைகளை அமைச்சர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதுதவிர விரைவில் வேளாண் துறைக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேவைப்பட்டால் பத்திரப்பதிவுத் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 25-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் யாரும் கூடுதல் கட்டணத்தை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது வெள்ளை அறிக்கை வெளியாகவும் வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சில தினங்களுக்கு முன்பு நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் மீதும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடன் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். அதேபோல் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின்சார துறைக்கு ரூ.2 லட்சம் கோடிக்கும் மேலாக கடன் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பத்திரப்பதிவுத் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால், அது தமிழ்நாட்டில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறுகையில், “முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் சர்வர் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இந்நிலையில் முகூர்த்த நாட்களில் பத்திரப் பதிவின் போது சர்வர் கௌளாறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி பத்திரப்பதிவு செயல்முறையை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை இறங்கியுள்ளதுஒரு குறிப்பிட்ட வகையான சொத்து ஆவணங்களுக்கு எங்கிருந்து வேண்டாமானாலும் பதிவு செய்யும் வசதியை கட்டாயமாக்க உள்ளது. ஒரு சில வாரங்களில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த டிஜிட்டல் ஆவணப்பதிவு முறையின் மூலம், இனி பொது மக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது. எங்கிருந்தாலும் 24 மணி நேரமும் இணையதளத்தின் வழியாக இணையவழியிலேயே தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...