Thursday, July 23, 2026

அடுத்து எஸ்.பி.வேலுமணி..? திடீர் பரபரப்பு..!

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய சென்னை புறப்படுவதாக கோவையில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை, சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் விராலிமலை சி.விஜயபாஸ்கர், தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கையோடு அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துவிட்டார். மற்றொரு அதிமுக முன்னாள் அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே கோவையில் நேற்று முன்தினம் தமது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று ஜூன் 30-ந் தேதி காலை முதல் கோவையில் எஸ்.பி.வேலுமணி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போகிறார், தவெகவில் இணையப் போகிறார் என்கிற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தரப்பில் நாம் விசாரித்த போது, இன்று சென்னைக்கு செல்வது உறுதி. எடப்பாடி பழனிசாமியிடம் திரும்ப வந்த போது பறிக்கப்பட்ட மா.செ. பதவியை கொடுக்க வேண்டும் என கேட்டார் எஸ்பி வேலுமணி. அதை தராமல் துணைப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தார் எடப்பாடி. இதை எஸ்பி வேலுமணியால் ஏற்க முடியவில்லை என்கின்றனர்.
மேலும், ”எஸ்பி வேலுமணி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் தவெகவில்தான் இணைவார், விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், சென்னை புறநகர் மா.செ. கேபி கந்தன் ஆகியோருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தவெகவில் இணைய வாய்ப்புகள் அதிகம்” என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுக தரப்பில் நாம் கேட்ட போது, “எஸ்.பி.வேலுமணி எந்த முடிவையும் அறிவிக்கவும் இல்லை; எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவும் இல்லை.. அதனால் நாங்கள் எந்த கருத்தும் சொல்ல முடியாது” என்கின்றனர்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...