கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.6 கோடி மகளிருக்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது…

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அளிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் மிகமுக்கிய திட்டமாகும். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1.6 கோடிபேரின் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டன. தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை செல்கிறதா என பணம் அனுப்பி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், பயனாளிகளுக்கு உரிமைத் தொகைக்கான ஏடிஎம் அட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் . உரிமை தொகை பெற்ற பெண்கள் தேவையான பொருட்களை வாங்க உதவிகரமாக இருக்கும் என்று நெகிழ்ச்சி தெரிவித்தனர்.


