Sunday, July 26, 2026

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

தவெக-வுக்கு தாவிய மூத்த தலைவர்கள் – உடைகிறதா அதிமுகவின்  கோட்டை..?


2026 சட்டப் பேரவை தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், அக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். மே 13-ந் தேதி சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், இந்த அணியைச் சேர்ந்த 25 பேர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையும் மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையை (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 பேரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத் ஆகிய மூவரும் தவெகவில் இணைந்தனர்.சட்டப் பேரவையில் கட்சி தாவல் தடைச் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி கையிலெடுக்க, எதிர்ப்பு அணியினர் அவருடன் சமாதானமாகினர். ஆனால், சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மட்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானமாக செல்லவில்லை. இந்த நிலையில், சி.விஜயபாஸ்கர் ஜூன் 16-ந் தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், எடப்பாடி அணிக்கு சென்றாலும், மீண்டும் கட்சிப் பதவி கிடைக்காததால் சிலர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதன் வெளிப்பாடாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ஜூன் 29- ந்தேதி ராஜிநாமா செய்தார்.



சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நேற்று அவர்களே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே திருப்பூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி ஆகியோரும் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.இந்நிலையில், சென்னை மாமல்லபுரத்தை அடுத்து பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் அதிமுகவினர் தவெகவில் இணையும் விழா இன்று (ஜூலை 2) பிரமாண்டமாக நடைபெற்றது.

களம் மாறிய முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்

தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ஆகிய 4 பேரும், தங்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் தவெகவில் இணைந்தனர்.

மேலும், முன்னாள் எம்எல்ஏக்களான ஈ.எம். மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), எம். ராம்குமார் (கும்பகோணம்), எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் (திருச்சுழி), சதன் பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி), சுந்தரராஜன் (சங்ககிரி), ராமச்சந்திரன் (சிவகங்கை) ஆகியோரும் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர்.இதே போல் வைரமுத்து (புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்), இளமை தமிழ்செல்வன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்), சேகர் (ஒரத்தநாடு செயலாளர்) மற்றும் சீனிவாசன் (திருச்சி முன்னாள் துணை மேயர்) உள்ளிட்டோரும் தங்களது ஆதரவாளர்களோடு தவெகவில் இணைந்தனர்.
மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட, கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் 35 பேரும், புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவின் பல்வேறு ஒன்றிய செயலாளர்கள் 11 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர்.தவெகவில் இணைந்தவர்கள் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி, பின்னர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

துரோகம் செய்தது யார்?

அதிமுக தொண்டர்களை அதிர செய்துள்ள இந்த நிகழ்வில் தவெக செயற்குழுத் தலைவரும் அமைச்சருமான செங்கோட்டையன் பேசியபோது, “தவெக தலைவரும், நமது நீண்டகால முதலமைச்சராக இருக்கப் போகும் விஜய்யுடன் கைகோர்க்க அனைவரும் இன்று இங்கு வந்துள்ளனர். பலர் துரோகம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், மக்களின் தீர்ப்புக்குத் துரோகம் இழைத்துவிட்டு திமுகவுடன் கைகோர்க்கத் திட்டமிட்டது அதிமுகதான். அதனால்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எங்களுடன் இணைகிறார்கள். உண்மையில் யார் துரோகம் இழைக்கிறார்கள் என்று நீங்களே சொல்லுங்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியத் துணைக்கண்டமே நமது முதலமைச்சரின் செயல்பாடுகளை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு, இப்போது நான் புரட்சித் தளபதி முதலமைச்சர் விஜய்யுடன் பயணிக்கிறேன். அதிமுகவின் துரோகத்தை முறியடிக்கவே அதிமுக தலைவர்கள் இன்று எங்களுடன் இணைந்துள்ளனர். தவெக தலைமை அனைவரையும் வரவேற்கிறது,” என்றார்.

மேலும், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த பெண்களை வைத்து மகளிர் அணி கூட்டத்தை நடத்தினார். ஆனால் தவெகவில் நாங்கள் ஏராளமான இளைஞர்களைக் காண்கிறோம். எடப்பாடி பழனிசாமி ஒரு நிறுவனத்தை நடத்த முயற்சிக்கிறார்; அவர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருக்கிறார,” என்று செங்கோட்டையன் விமர்சித்தார்.

அதிமுக என்ற கட்சியே இல்லை

அதிமுக முன்னாள் நிர்வாகி உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ” அதிமுகவை திமுகவுடன் இணைந்து செயல்பட பொதுச் செயலாளர் முயற்சி செய்தார். அதன் விளைவு தான் இது. அதிமுக என்கிற கட்சியே கிடையாது. எல்லோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் வந்து சேர்ந்துவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களும் வந்துவிடார்கள் அம்மாவுடன் (ஜெயலலிதா) அதிமுக என்பது முடிந்துவிட்டது” என்றார்.

இன்று முதல் நான் தவெக

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியபோது,”தமிழ்நாடு ஒரு போதை மாநிலமாக மாறிக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாட்டைக் காப்பாற்ற ஒரு நல்ல தலைவன் கிடைத்திட மாட்டாரா? என்ற ஏக்கத்தில் மக்கள் இருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் தான் தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், போதைப்பொருள் மற்றும் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்கவும் மக்களின் பெரும் ஆதரவோடு விஜய் அவர்கள் வெற்றி பெற்றார். அவரது வழியில் நல்லாட்சி நடத்திட இன்று முதல் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளே” என்றார்.

எங்கள் கோரிக்கைக்கு இபிஎஸ் செவிசாய்க்கவில்லை

தவெகவில் இணைந்தது குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவுமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறுகையில், “தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன் நாங்கள் வற்புறுத்தினோம். ஆனால், அதற்கு எங்கள் தலைவர் (இபிஎஸ்) செவிசாய்க்கவில்லை. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த பின்பு அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று, 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினோம். அதற்கு இபிஎஸ் செவிசாய்க்கவில்லை.

ஆனால் திரைக்குப் பின்னால் அவர்கள் திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றனர். இது அதிமுக நிறுவனரான எம்ஜிஆரின் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே, நாங்கள் எங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்தும் வெளியேறிவிட்டோம். இப்போது நாங்கள் தவெகவில் இணைகிறோம். இதில் எந்த குதிரை பேரமும் இல்லை” என்றார்.

பொதுக்குழு உறுப்பினர்களின் பலம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தவிர அக்கட்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு இன்று தவெகவில் இணைந்துள்ளனர். பிரம்மாண்டமான இந்த அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் தவெகவை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றும் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்க வேண்டியுள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Previous articleமீண்டும் போர்க்கொடி… எஸ்பி வேலுமணி தரப்பு 9 சீனியர்கள் அறிக்கை..!
Next article2 கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபர் கடத்தல்,ஆள் மாறிப்போனதால் எஸ்கேப்..!



கோவையில் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு காங்கிரஸ் கட்சியின் ஓ பி சி அணி மாவட்ட தலைவரும்  தொழிலதிபருமான காட்டூர் தனசேகரன் என்பவர் காரில் கடத்தப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கி காட்டுப் பகுதியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…….

கோவை, சிங்காநல்லூர்  அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். காந்திபுரம் அடுத்த காட்டூர் பகுதியில் பழைய கார் விற்பனை மையம் ஒன்றை நடத்தி வரும் இவர் காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் எஸ.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் புதிதாக வீடு ஒன்றை அவர் கட்டி வரும் நிலையில் இன்று காலை வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த தனது ஃபார்ச்சூனர் காரை கழுவிக் கொண்டு இருந்த போது அங்கு எர்டிகா காரில் வந்த டிப் டாப் உடை அணிந்த ஐந்து பேர் காரைக்கழுவி கொண்டு இருந்த தனசேகரனிடம் உனது பெயர் தனசேகரனா என கேட்டு உள்ளனர். அதற்கு தனசேகரன் ஆமாம் என்று கூறவே உடனடியாக தாங்கள்  வைத்து இருந்த கை விலங்கு ஒன்றை வைத்து தனசேகரனின் கையை பூட்ட முயற்சித்து உள்ளனர். அதற்கு தனசேகரன் நான் என்ன அக்யூஸ்டா என கேட்டு கையை உதறி அங்கு இருந்து நகர முற்பட்ட பொழுது ஐந்து பேரும் சேர்த்து தனசேகரனை மடக்கி பிடித்து தாங்கள் வந்த காரில் கீழே தள்ளி கடுமையாக தாக்கி உடனடியாக காரை அங்கு இருந்து கிளப்பி தனசேகரனை கடத்தி உள்ளனர். அப்போது தனசேகரன் கூக்குறலிடவே அவரது வாயில் துணியை வைத்து அடைத்து முகம் வயிறு இடுப்பு பகுதி என சரமாரியாக தாக்கியப்படியே கோவை பாலக்காடு புறவழிச் சாலையில் காரை இயக்கி உள்ளனர். இதற்கு இடையே காரில் வந்த ஒருவர் 2 கோடி ரூபாய் கொடுத்தால் உன்னை விட்டு விடுவோம் என கூறவே தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தனசேகரன் கூறியுள்ளார். மீண்டும் தனசேகரனை தாக்கிய அவர்கள் அவரது முகத்தை தங்கள் செல்போனில் படம் பிடித்து யாரோ ஒருவருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதனைக் கண்ட எதிர்முனையில் இருந்த நபர் இவர் இல்லை ஆள் மாறிவிட்டது என்று கூறவே தனசேகரனை ஆட்கள் இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் கீழே தள்ளிவிட்டு காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான தனசேகரன் அங்கு இருந்து நடந்து வந்து பாலக்காடு சாலை வழியே வந்த ஒருவரிடம் நடந்த சம்பவங்களை கூறி உதவி கேட்டு உள்ளார். அந்த நபர் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து தனசேகரனை இறக்கி விட்ட நிலையில் சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தனசேகரனின் வீடு மற்றும் திருச்சி சாலை பாலக்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான தனசேகரன் முதுலுதவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காந்திபுரம் அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேசிய தனசேகரன் தன்னை கடத்தி அவர்கள் யார் என்ற விபரம் தற்போது வரை தெரியவில்லை என்றும் தொழில் போட்டி காரணமாக கடத்தினார்களா என்பது குறித்து கூட தனக்கு அறியவில்லை என்றும் காரில் வந்த நபர்கள் ரௌடிகள் போல காணப்பட்டதாகவும் காரின் பின் பகுதியில் நம்பர் பிளேட் கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் தன்னை கடத்தியவர்கள் தன்னிடம் இருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான எஸ் 23 அல்ட்ரா செல்போன், ஃபார்ச்சூனர் கார் சாவி மற்றும் புதிய வீட்டின் சாவி ஆகியவற்றை பறித்து சென்றதாகவும் தனது செல்போனில் இருந்தே தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை தங்கள் கணக்கிற்கு பரிமாற முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...