Sunday, September 13, 2026

மீண்டும் போர்க்கொடி… எஸ்பி வேலுமணி தரப்பு 9 சீனியர்கள் அறிக்கை..!

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி தங்களுக்கு வேண்டாம் என்று அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுகவின் அடிப்படை தொண்டர்களாக நாங்கள் தொடர்கிறோம் என்று கூறியிருக்கும் நிலையில், உங்கள் விருப்பப்படி நியமித்துள்ள பொறுப்புகள் எங்களுக்கு வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 22 எம்எல்ஏ-க்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 27 மாவட்டச் செயலாளர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதையடுத்து 4 அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.இதன்பின் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்து எடப்பாடி பழனிசாமியுடன் சுமூக உடன்பாட்டை எட்டினர். ஆனால் விஜயபாஸ்கர் மற்றும் சிவி சண்முகம் மட்டும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இருப்பினும் இவர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி மீண்டும் வழங்கவில்லை. இதனால் அனைவரும் அதிருப்தி அடைந்தனர்.சில நாட்களுக்கு முன்பாக எஸ்பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தலைமை நிலைய செயலாளராக அருணாசலம் நியமிக்கப்பட்டார். தங்கமணி, கே.சி.கருப்பணன், சண்முகநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், கே.சி.வீரமணி, பி.பாலகிருஷ்ண ரெட்டி, மாஃபா பாண்டியராஜன், திருத்தணி கோ.அரி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.மணிகண்டன், எம்எல்ஏக்கள் அருண்மொழித்தேவன், என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்டோருக்கு கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாளை தவெகவில் ஐக்கியமாகிறார். இந்த நிலையில் அதிமுகவின் 9 மூத்த நிர்வாகிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுகவில் மீண்டும் இணையும் போது அவரவர் வகித்து வந்த பதவிகளையே மீண்டும் வழங்க வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தோம். ஆனால் தற்போது தாங்கள் அறிவித்துள்ள பொறுப்பு பட்டியலை பார்க்கும் போது கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டடது போல் தெரியவில்லை. ஏற்கனவே நாங்கள் வகித்த பதவிகளை நீங்கள் திரும்ப தரவில்லை. கால தாமதம் செய்கிறீர்கள். அதிமுக வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்களின் போது, பல முறை அவர்கள் வகித்த பதவிகளே வழங்கப்பட்ட போதிலும், நீங்கள் அவ்வாறு பதவிகளை மீண்டும் வழங்கவில்லை. இதனால் ஏராளமான அதிமுகவினர் தவெகவில் இணைந்து வருகின்றனர். பொதுச்செயலாளராக நீங்கள் எடுத்த தவறான முடிவால் தான் 2021, 2024 மற்றும் 2026 ஆகிய தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வி அடைந்து கட்சி கரைந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், தற்போது நீங்கள் அறிவித்த பொறுப்புகள் இதுபோல் உள்ளது. நீங்கள் அளித்த பதவிகள் வேண்டாம்.. கட்சித் தொண்டர்களாகவே செயல்படுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, கேபி அன்பழகன், கேசி வீரமணி, அருண்மொழி தேவன், பாலகிருஷ்ணரெட்டி, கோ. அரி உள்ளிட்ட 9 பேரின் கையெழுத்து போடப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...