Wednesday, June 24, 2026

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், விஜயதரணி…!

Must read

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது ச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 22) திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ....

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்

வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் - மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...

மேகதாது அணை கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் – நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், "அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி...

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. விழாவில், அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, இளவரசன் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால், திருநெல்வேலி முன்னாள் மேயர் விஜயலட்சுமி, அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ஜான் மகேந்திரன், ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி உள்ளிட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களை அமைச்சர் ஆனந்த், கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் தமிழன் பார்த்திபன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.விஜயதரணி, “தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை அன்போடு அரவணைத்துச் சேர்த்துக் கொண்டனர். தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும், நேர்மையான ஆட்சியைத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கில் இக்கட்சி செயல்படுகிறது. போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற சபதத்தை ஏற்று, பெண்களின் பாதுகாப்பை உயர்த்திப் பிடிக்கும் ஒரு சிறந்த தலைவராக விஜய் விளங்குகிறார். தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி தவெகவிற்கு முழுமையாக உள்ளது. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவை வழிநடத்தக்கூடிய முக்கிய இடத்தில் தலைவர் விஜய் இருப்பார் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த இரண்டரை ஆண்டு காலம் பாஜகவில் எனக்கு எந்தப் பணியும் இல்லாமல் இருந்தது. அரசியலில் உழைப்பும், மக்கள் பணியும் மிக முக்கியம். என்னைப் போன்ற உழைக்கக் கூடியவர்களுக்கு தவெக ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. எங்கள் உழைப்பு மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து எங்களை அழைத்திருக்கிறார்கள். நிச்சயமாக தவெக ஆட்சி, இந்திய நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த ஆட்சியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணி, கடந்த 2024- ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த ஆல் இந்தியா சிந்தாரிக் பெந்தோகஸ் சபைகளின் தலைவர் பேராயர் ஜோஸ்வா இமானுவேல் அளித்த பேட்டியில், “கடந்த 21 ஆண்டுகளாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் பிரிவில் பயணித்து பல்வேறு பணிகளைச் செய்து வந்தேன். ஆனால், தற்போதைய சூழலில் மக்களின் நலனுக்காகவும், திருச்சபைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காகவும் ஒரு மாற்றுப்பாதை தேவைப்படுகிறது. சிறுபான்மையினருக்கான ஆட்சி என்று சொன்னதால்தான் இத்தனை காலம் திமுகவோடு பயணித்தோம். ஆனால், சிறுபான்மையினரின் நலன் மற்றும் உரிமைகளுக்காக எப்போது அணுகினாலும், உரிமைகள் பறிக்கப்படும் சூழலே நிலவுகிறது. திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதே கசப்பான உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்த நகைச்சுவை நடிகர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி இனி தமிழ்நாட்டில் தொடரும். உச்ச வருமானத்தை விட்டுவிட்டு சேவை செய்யும் மனப்பான்மை இனி தலைவர் வழியில் ஒவ்வொரு வரும் பின்பற்ற வேண்டும்; தமிழ்நாடு சிங்கப்பூராக விரைவில் ஆக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது ச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 22) திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ....

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்

வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் - மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...

மேகதாது அணை கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் – நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், "அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி...

மகன் மிதுனுக்கு அதிமுகவில் எந்த பதவியும் கொடுக்க மாட்டோம்- எடப்பாடி பழனிசாமி

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தவெகவுக்கு ஆதரவாகவும் முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனி...