Sunday, September 13, 2026

தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று (மே 4) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், தவெக 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் 1977இல் எம்.ஜி.ஆர் பெற்ற 33.5% வாக்குகளே அதிகபட்சமாக இருந்த நிலையில், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 34% வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வரலாற்று படைத்திருக்கிறது தவெக.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்துகள் – மோடி

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மிகச் சிறப்பாக செயல்பட்ட தவெக கட்சிக்கு எனது வாழ்த்துகள். தமிழக மக்களின் வளர்ச்சிக்கான அனைத்து செயல்பாடுகளையும் பாஜக அரசு செய்யும். என்.டி.ஏக்கு வாக்களித்த மக்களுக்கும் எனது வாழ்த்துகள் ” என்று தெரிவித்துள்ளார்இனிமேல் வாரிசு அரசியல் இல்லை – அண்ணாமலை

பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தமிழக மக்களின் தீர்ப்புக்கு தான் தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “வாக்குகளை விலைக்கு வாங்க முடியாது, வாரிசு அரசியல் இனிமேல் இல்லை என்ற கருத்தை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளிப்படுத்தி இருப்பதை பார்ப்பதில் மகிழ்ச்சி.மக்கள் அனைவரும் அடுத்த தலைமுறை அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். தமிழக அரசியலில் மிக சிறப்பான அறிமுகத்தை பெற்றதற்காக தவெக மற்றும் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என்.டி.ஏ கூட்டணியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார் – தமிழிசை சௌந்திரராஜன்

பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் அளித்த பேட்டியில், “மக்களின் நம்பிக்கையை விஜய் காப்பாற்றுவார் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அதே நேரத்தில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் யாரும் கவலையடைய வேண்டாம். அரசியலில் சிலர் வெற்றி பெறலாம், சிலர் தோற்கலாம்.

ஆனால், அவர்கள் என்ன பணிக்காக அரசியலில் இருக்கிறார்களோ அந்த பணியை தொடர்வது தான் இயற்கை. என் அரசியல் பணி இன்னும் தீவிரமாக தொடரும். மக்களுக்காக நல்லது செய்தால் புதிய ஆட்சி பாராட்டு பெறும்” என்றார்.தமிழகத்தில் அமைதி புரட்சி – கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “உலக வரலாற்றில் மக்கள் எழுச்சியால் ஏற்பட்ட நிகழ்வுகளுடன் ஒப்பிடும் வகையில், தமிழக மக்கள் தேர்தல் வாயிலாக அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் உரிமையை அசைத்து பார்க்கும் விதமாக தவெக ஆட்சி அமைக்கவுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.முதல் தேர்தலிலேயே ஈர்க்கக்கூடிய சாதனை – ஜெகன் மோகன் ரெட்டி

தவெக தலைவர் விஜய்க்கு ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது பதிவில், “என் அன்பு சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது ஈர்க்கக்கூடிய சாதனை. மக்கள் பணிக்காக புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...