Monday, September 14, 2026

தேர்தலில் போட்டியிட போவதில்லை – டிடிவி தினகரன் பேட்டி

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கங்காரு குட்டி போல சுற்றிக்கொண்டு வரும் ஒருவருக்கு (உதயநிதி ஸ்டாலின்) முதலமைச்சர் பட்டம் சூட்ட திமுக காத்திருக்கிறது. ஊழல் என்றாலே திமுக தான் நியாபகத்திற்கு வரும். அறிவியல் பூர்வமாக ஊழல் செய்பவர்கள் எங்களை குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண் குழந்தை முதல் மூதாட்டி வரைக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் கடத்தலில் தமிழ்நாடு முக்கிய மாநிலமாக மாறியுள்ளது” என்றார்.

தே.ஜ., கூட்டணியில் இணைந்ததை குறித்து பேசிய அவர்  வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. என்னுடன் பல ஆண்டுகளாக ஆதரவாக இருந்தவர்களை அமைச்சர்களாக ஆக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. தமிழ்நாட்டை ஊழல் ஆட்சியில் இருந்து மீட்டெடுத்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடி எங்களுக்கு உறுதி அளித்துள்ளார். அம்மாவின் இடத்தில் எங்களுக்கு மோடி தான் இருக்கிறார். பங்காளி சண்டை இல்லாத குடும்பங்களே இல்லை. எங்கள் வீட்டு குடும்ப விஷயங்களை நான் மனம் விட்டு பேசினேன், தற்போது அம்மாவின் ஆட்சி அமைய ஒன்றிணைந்துள்ளோம். நாங்கள் பிரிந்து தேர்தலை சந்தித்ததால் தான் 2019 எம்.பி தேர்தல், 2024 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. நாங்கள் ஒன்றாக போட்டியிட்டு இருந்தால் மேலும் 20- 25 தொகுதியில் வெற்றிப் பெற்று இருப்போம். என தெரிவித்தார்.தே.ஜ., கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ” அதுகுறித்து அவர் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ் மீண்டும் இணைய அவருக்கு தேனியில் இருந்து நான் அழைப்பு விடுக்கிறேன் ஓபிஎஸ் வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கு உள்ளது. அவர் சென்ற உயரங்களுக்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஆனால், யார் பேச்சையோ கேட்டு தர்ம யுத்தம் நடத்தினர். அது மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் 2024 இல் மீண்டும் முதலமைச்சராகி இருப்பார்.

அதிமுகவை ஊழல் கட்சி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்திருப்பது குறித்து பேசிய டிடிவி தினகரன்  எங்கள் தலைவர் எம்ஜிஆர் படத்தை வைத்துக்கொண்டு எங்களின் கட்சியை ஊழல் கட்சி என விஜய் சொல்கிறார். முதலில் அவரது திரைப்படங்களுக்கான கள்ள டிக்கெட் விற்பனை ஊழல்களை விஜய் தடுத்து நிறுத்த வேண்டும். நாங்கள் அமைதியாக இருப்பதால் அவர் எதுவேண்டுமானாலும் பேசலாமா? நாங்கள் வெகுண்டெழுந்தால் என்ன ஆவது? விஜயகாந்த் போல தேர்தலில் தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என்று நான் கூறி இருந்தேன். ஆனால், அவர் எம்.ஜி.ஆர் போல வருவார் என்று நான் சொல்லவில்லை என தெரிவித்தார்

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...