Wednesday, June 24, 2026

நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..

Must read

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது ச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 22) திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ....

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்

வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் - மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...

மேகதாது அணை கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் – நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், "அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி...

கோவை சித்ரா பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு 65அடி உயர தீரன்சின்னமலை நினைவு கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய சீமான். நாம் தமிழர் கட்சியின் கொடிக்கு வரலாறு இருக்கின்றது. பிற கொடிகளுக்கு என்ன வரலாறு இருக்கிறது? மக்களவைத் தேர்தலுக்கு தயாராக இருப்பது நாங்கள் தான். மற்றவர்கள் தான் கூட்டணியை முடிவு செய்ய வேண்டும். யார் யாருக்கு எவ்வளவு சீட், யாருடன் கூட்டணி பிறர்தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்பே தேர்தல் பயணத்தை துவங்கி விட்டோம். என்னுடைய கனவு இந்திய பாராளுமன்றத்தில் செல்ல வேண்டும் என்பது கிடையாது. என்னுடைய தம்பி தங்கைகள் அனுப்புவேன். தமிழ் தேசியத்தில் உரிமை என்ற கனவு தான் என்னுடைய கனவு. மக்களவை தேர்தலில்  நான் போட்டியிடவில்லை. மோடி இங்கு போட்டியிட்டால், ராகுல் காந்திக்கு போட்டியிட்டால்  அவர்களை எதிர்த்து போட்டியிடுவேன். ஏன் அவர்களை எதிர்க்கிறேன் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா. விஜயலட்சுமி, வீரலட்சுமி விவகாரம் குறித்த கேள்விக்கு, எனக்கு அனைவரும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் வாயை மூடிக்கொண்டு இருக்க சொல்லி இருக்கின்றனர்.
நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா? தேவையில்லாதது. என்னை எதிர்த்து பேசுவது அவர்களுக்கு ஒரு அடையாளம். என்னை எதிர்க்க வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறது. உங்களை எதிர்க்க, விமர்சிக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கிறதா? என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரி கிடையாது. நான் யாரை எதிர்க்ககின்றேனோ  அவர்கள் தான் எதிரி.  என் எதிரியார் ? என் இலக்கு,  என் பயணம், எவ்வளவு தூரம் என்பது எனக்குத் தெரியும். என்னோடு   ஒப்பிட்டுப் பேசுவது எனக்கும் சிறுமை, உங்களுக்கும் சிறுமை, நான் செய்யும் வேலைக்கும் சிறுமை.இதை விட்டு விடுங்கள் இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. தேச நலன் என வரும் பொழுது சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும்.  மேற்கு வங்கத்தில் காங்கிரசும் கம்யூனிஸ்ட் மம்தாவை எதிர்பார்ப்பார்கள். கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் மாறி மாறி  வாக்கு செலுத்துவார்களா? மாநிலத்திற்கு ஒரு கொள்கை முடிவு எடுப்பது எப்படி சரியாக இருக்கும். பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய  விவகாரத்தில் அண்ணா துவங்கிய கட்சி எதிர்வினையாற்ற வில்லை.  அண்ணாவை கொடியில் மட்டும் வைத்திருக்கும்  அதிமுக, அது குறித்து எதிர்விணையாற்றி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி முறிந்தாலும்  பரவாயில்லை என குரல் கொடுத்து இருக்கின்றது. இதில் அதிமுகவின் செயல்பாடு பாராட்டுக்குரியது. திமுகவின் ஆர் எஸ் பாரதி எதிர்வினையாற்றி இருக்கிறார். இதில் முதல்வரின் கருத்து என்ன ? உதயநிதி , கருணாநிதி ஆகியோரை விமர்சித்து இருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். அண்ணா என்பதால் கண்டு கொல்லவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பேசவில்லை என்றாலும் அவரது கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், செய்தி தொடர்பாளர்கள் பேசியிருக்கின்றனர். இரண்டாம் கட்ட தலைவர் அனைவரும் பேசுகிறார்கள். மன்னன் எப்பொழுதுமே தளபதிகளை சண்டைக்கு அனுப்புவார். தோற்கும் பொழுது தான் அவர் களத்திற்கு வருவார். தளபதிகளை எடப்பாடியார் களத்திற்கு அனுப்பி இருக்கின்றார் என தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது ச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 22) திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ....

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்

வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் - மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த...

மேகதாது அணை கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் – நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், "அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி...

மகன் மிதுனுக்கு அதிமுகவில் எந்த பதவியும் கொடுக்க மாட்டோம்- எடப்பாடி பழனிசாமி

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தவெகவுக்கு ஆதரவாகவும் முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனி...