Monday, July 13, 2026

தமிழ்நாட்டில் 4 நாள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும்; தேர்தல் அதிகாரி தகவல்

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பால், 4 நாள் மட்டுமே வேட்புனுத் தாக்கல் செய்ய முடியும் என தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்ரல் 6 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

8 நாட்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்று வேட்பாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் திடீரென்று இன்று (மார்ச் 25) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மொத்தமுள்ள 8 நாட்களில் 4 நாட்கள் விடுமுறை வருவதால் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல், மார்ச் 30ஆம் தேதி தொடங்கி, கடைசி நாளான ஏப்ரல் 06ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம்.

மேலும், மார்ச் 31 (செவ்வாய்), ஏப்ரல் 01 (புதன்), ஏப்ரல் 03 (வெள்ளி), ஏப்ரல் 05 (ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் அரசின் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 4 விடுமுறை நாட்களிலும் வேட்புமனுக்கள் பெறப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், மார்ச் 30, ஏப்ரல் 02, ஏப்ரல் 04, ஏப்ரல் 06 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, அவசர அவசியம் கருதி, தேர்தல் ஆணையம் 4 நாள்கள் விடுமுறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...