Monday, July 13, 2026

மார்ச் 28 முதல் பிரச்சாரம்…

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அதிமுக சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில், மார்ச் 28 ஆம் தேதி முதல் அங்கு விஜய் பிரச்சாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுசட்டமன்ற தேர்தாலுக்காக தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மார்ச் 30 ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ளது. அதனால் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று துகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் விஜய் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மும்பை சென்றது சர்ச்சையானது.234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடும் என்று விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் தவெக சார்பில் மார்ச் 27 ஆம் தேதி (நாளை மறுநாள்) மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. தவெக வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.இதற்காக பெரம்பூரில் ஏசியுடன் கூடிய தவெக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை நாளை மறுநாள்.. அதாவது 27 ஆம் தேதி விஜய் திறந்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பிரச்சாரம் செய்வது தொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், உள்துறை செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.மொத்தம் 20 நாட்கள் பிரச்சாரம் செய்யும் விஜய், தினசரி 5-6 இடங்களில் பிரச்சாரம் செய்து பேசவுள்ளதாக சொல்லப்படுகிறது. தவெகவின் நட்சத்தி பேச்சாளர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது. விஜய், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் உள்ளிட்ட 20 நிர்வாகிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெரம்பூரில் இருந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது .

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...