Monday, July 13, 2026

பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் தவெக தலைவர் விஜய்

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தேர்தலில் போட்டிடும் 243 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று வெளியான நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார் விஜய்.

தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்த கையோடு, பெரம்பூரிலிருந்து பரப்புரை பயணத்தை தொடங்கியுள்ளார். அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியதால் அந்த பகுதியில் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே, ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று வெளிப்படையாகவே கூட்டணிக்காக பிற கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்த போதிலும், தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை. இருப்பினும், ‘மக்களின் துணையோடு தேர்தல் களம் காண்போம்’ என்று விஜய் கூறியிருந்த நிலையில், நேற்று 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை ஒரே கட்டமாக வெளியிட்டார். அதன்படி, சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தான் போட்டியிடுவதாக அறிவித்தார்.1952-ம் ஆண்டு முதல் 16 சட்டமன்ற தேர்தல் மற்றும் ஒரு இடைத்தேர்தல் என இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ள பெரம்பூர் தொகுதி இந்த ஆண்டு தனது 18-வது தேர்தலை சந்திக்கிறது. இதில் 9 முறை திமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், அதிமுக 2 முறையும், சுயேட்சை 2 முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதால், அவருக்கு எதிராக ஏற்கனவே இந்த தொகுதியில் இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆர்.டி சேகரை திமுக களம் இறக்கியுள்ளது. அதிமுகவில் அதன் கூட்டணி கட்சியான பாமகவிற்கு சீட் வழங்கப்பட்டிருப்பதால் விஜயை எதிர்கொள்ளும் வகையில் திலகபாமாவை பாமக களம் இறக்கியுள்ளது. அதே போல், 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி அந்த தொகுதிவாசியான வெற்றித்தமிழனை களம் இறக்கியுள்ளது. இவை மட்டுமல்லாமல் எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சி சார்பில் சுயேட்சையாக செபாஸ்டின் களமிறங்குகிறார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...