Sunday, May 24, 2026

வேட்புமனுவை தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

Must read

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவி மற்றும் தாயுடன் சென்று இன்று (மார்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளுக்கும் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பு மனு தாக்கல் செய்யும் முதல் நாளான இன்று காரைக்குடி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் இன்று அவர் அவர் பகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் மாங்குடி எம்எல்ஏ மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள அமமுகவை சேர்ந்த தேர் போகி பாண்டி, தவெக சார்பில் டாக்டர் பிரபு ஆகியோர் களத்தில் உள்ளனர். போட்டி கடுமையாக இருக்கும் சூழலில், நேற்று பரப்புரையை தொடங்கிய சீமான் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக தனது சொந்த ஊர் மற்றும் எல்லா சமுதாய மக்களும் காரைக்குடியில் இருப்பதால் தான் இங்கு போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் கேட்டது இலவசம்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “எம் மண்ணின் வளத்தை, மக்களின் நலத்தை அடமானமாக வைத்து கடன் பெறுகிறீர்கள். கடனில் மட்டும் வளர்ச்சி என்று காட்டினால் எப்படி? கல்வி, மருத்துவம், குடிநீர், தடையற்ற மின்சாரம், தரமான போக்குவரத்து, நல்ல சாலை போன்றவை தரமானதாக உள்ளதா? ஒவ்வொரு ஆண்டும் மக்களை வெள்ளத்தில் மிதக்க விட்டு வெள்ள நிவாரணம் கொடுப்பது நல்ல ஆட்சியா? வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு மழை நீர், கழிவு நீர் வழிந்தோட வசதி ஏற்படுத்திக் கொடுத்து மக்களைப் பாதுகாப்பது தான் ஆட்சி.யார் கேட்டது இலவசம்.. ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்தபோது ‘இலவசங்களை மக்கள் விரும்பவில்லை, அதை எதிர்பார்க்கவில்லை, அவர்கள் வேலை தான் கேட்கிறார்கள்’ என்று பேசியது உண்டு. இப்போது திருப்பி நீங்கள் அதையே செய்கிறீர்கள். ஒரு இனத்தின் மகனாக, இலவசத்திற்கு ஆயிரம், ஐநூறுக்கு கையேந்துவதை தன்மான இழப்பாக, இனமான இழப்பாகப் பார்க்கிறேன். அவமதிப்பாகப் பார்க்கிறேன். இது எந்த மாதிரி ஆட்சி முறை?இப்படியே சென்றால் எங்கு போய் நிறுத்துவீர்கள்?
இப்போது பத்தரை லட்சம் கோடி கடன் உள்ளது. அடுத்த ஐந்தாண்டு யாராவது வந்தால்.. கொடுமை! இதை எப்படி இந்த அறிவுச் சமூகம் ஏற்கிறது? மக்களை ‘இலவசம் கொடுக்கிறோம்’ என்று சொல்லி ஏன் ஏமாற்ற வேண்டும்?மிக்சி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், வேட்டி, சேலை, ஒரு லிட்டர் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு – இதை எல்லாம் கூட வாங்கிக் கொள்ள முடியாதா? ஒரு அடிப்படை தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஏழ்மை, வறுமை – அந்த அளவுக்குக் கூட வருமானம் இல்லை. என்ன கொடுமை இது?எங்கே கொண்டு போய் நிறுத்துவீர்கள் என்று சொல்லுங்கள். மலை, மணல், மரங்கள் இல்லை.. கொடுமை!” என தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து,...