Monday, May 25, 2026

இரட்டை கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை!

Must read

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

இறைச்சி கடையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய கோயம்புத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் .

கோவை திருமால் வீதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்தவர் மொய்தீன் பாஷா. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி இவரது கடையில் வேலை செய்யும் சிறுவன் இருந்த போது, உக்கடம் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்த சாதிக் அலி என்பவர் நான்கு கிலோ மாட்டு ஈரல் மற்றும் எலும்பு துண்டுகளை எடுத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் கடையில் இல்லாத போது எப்படி இறைச்சி மற்றும் எலும்புகளை எடுத்துச் செல்லலாம்? என உக்கடம் பகுதிக்கு சென்று சாதிக் அலி கடையின் முன் நின்று மொய்தீன் பாஷா கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அன்றைய தினம் இரவு சமரசம் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பை சேர்ந்தவர்களும் இடையர் வீதியில் உள்ள பேக்கரி அருகே அன்று இரவு சந்தித்தனர். அப்போது இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் மொய்தீன் பாஷா மற்றும் அவரது நண்பர் அபிப் முகமது ஆகியோரை சாதிக் அலி தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக சாதிக் அலி, ஷேக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகிர் உசேன், அசாருதீன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஷேக் அலி 2019 ஆம் ஆண்டு வழக்கு விசாரணை நடைபெறும் போது உயரிழந்தார். இந்த கொலை வழக்கு கோயம்புத்தூர் ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்கள் மற்றும் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட சாதிக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகிர் உசேன் மற்றும் அசாருதீன் ஆகிய ஐந்து பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டணை மற்றும் தலா 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோயம்புத்தூர் 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் தீர்ப்பளித்தார். இரட்டை கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...