Saturday, May 16, 2026

கோட்டூர் அரசு பள்ளியில் இருக்கை உடைந்து விழுந்து 3 மாணவிகள் காயம்!

Must read

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில்...

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில்...

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து...

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்து, பிரார்த்தனை முடிந்தவுடன் அவரவர் வகுப்பறைகளுக்குச் சென்றனர். அதில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள், தங்களது வகுப்பறைக்குச் சென்று இரும்பால் ஆன இருக்கையில் அமர்ந்தனர். ஏற்கனவே வெல்டிங் விட்டிருந்த அந்த இருக்கை மாணவிகள் அமந்தவுடன் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 3 மாணவிகள் கீழே விழுந்தனர். இதனை பார்த்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக மாணவிகளை கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அந்த மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவியின் தந்தை சதீஷ் கூறுகையில், “இன்று காலையில் பள்ளிக்கு சென்ற எனது மகள் கீழே விழுந்ததாக பள்ளி ஆசிரியர்கள் மூலமாக தகவல் தெரிய வந்தது. அதன் பேரில் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றோம். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எனது மகளை அழைத்து வந்துள்ளோம். காலுக்கு கீழ்ப்புறம் அடிபட்டதால் எக்ஸ்ரே எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த வெள்ளை நடராஜ் கூறுகையில், “தமிழக அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் அமரும் இருக்கைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் அமரும் இருக்கை முறையாக பராமரிக்கப்படாததே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்…

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 17-வது சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக வெளிநடப்பு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வாக்கெடுப்பில்...

பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் விஜய்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 13) முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அவையில்...

தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு…!

தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இரண்டு வாரத்திற்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள், பள்ளிக் கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு ஆலோசித்து...

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடைசியாக இசைக்கப்பட்ட விவகாரம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் கடைசியாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடல் இசைக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில்...