Monday, May 25, 2026

கோட்டூர் அரசு பள்ளியில் இருக்கை உடைந்து விழுந்து 3 மாணவிகள் காயம்!

Must read

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்து, பிரார்த்தனை முடிந்தவுடன் அவரவர் வகுப்பறைகளுக்குச் சென்றனர். அதில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள், தங்களது வகுப்பறைக்குச் சென்று இரும்பால் ஆன இருக்கையில் அமர்ந்தனர். ஏற்கனவே வெல்டிங் விட்டிருந்த அந்த இருக்கை மாணவிகள் அமந்தவுடன் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 3 மாணவிகள் கீழே விழுந்தனர். இதனை பார்த்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக மாணவிகளை கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அந்த மாணவிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து பள்ளி மாணவியின் தந்தை சதீஷ் கூறுகையில், “இன்று காலையில் பள்ளிக்கு சென்ற எனது மகள் கீழே விழுந்ததாக பள்ளி ஆசிரியர்கள் மூலமாக தகவல் தெரிய வந்தது. அதன் பேரில் கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றோம். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எனது மகளை அழைத்து வந்துள்ளோம். காலுக்கு கீழ்ப்புறம் அடிபட்டதால் எக்ஸ்ரே எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த வெள்ளை நடராஜ் கூறுகையில், “தமிழக அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகள் அமரும் இருக்கைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் அமரும் இருக்கை முறையாக பராமரிக்கப்படாததே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...