Friday, August 14, 2026

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

Must read

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை போலீஸ் கைது!

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது...

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...


கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இந்த கேள்வியை எழுப்பி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு முக்கிய கோவில்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 3,084.95 ஏக்கர் நிலங்கள் (471 சர்வே எண்கள்) மீதான பத்திரப்பதிவு தடையை நீக்கி, மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் உத்தரவிட்டன. கடந்த 1963 ஆம் ஆண்டு சட்டத்தின் படி ரயத்துவாரி பட்டா பெற்று, பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் வசித்து வரும் மற்றும் விவசாயம் செய்துவரும் சுமார் 3,390 பேருக்கு இந்த உத்தரவு மூலம் பத்திரப்பதிவு செய்யும் உரிமை மீண்டும் கிடைத்தது.
இந்த நிலங்களின் மதிப்பு சுமார் 25 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுவதால், இந்த உத்தரவு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கும் செயல் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் திமுக மற்றும் தவெக அரசுகள், இது புதிய நில ஒப்படைப்பு அல்ல என்றும், நீண்ட காலமாக பட்டா வைத்திருக்கும் மக்களுக்கு ஏற்பட்ட நிர்வாக சிக்கலைத் தீர்க்கும் நடவடிக்கை என்றும் விளக்கம் அளித்தன. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கரூர் மாவட்டம் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில், அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கான 15 கிராமங்களில் உள்ள 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு பதிவுத்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலங்களை ஆக்கிரமித்த சுமார் 3,390 நபர்கள் அளித்திருந்த மனுக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.இது முன் அனுமதி பெறாமல் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய வழிவகை செய்கிறது. இது செல்லத்தக்கது அல்ல. எனவே பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கரூரில் இனாம் நிலங்களை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன என்பது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு தரப்பில் ஜூலை 29ஆம் தேதி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை போலீஸ் கைது!

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது...

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...