Thursday, July 23, 2026

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய், எழும்பூர் குழந்தைகள் நல அரசு பொது மருத்துவமனையில் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, அங்கிருந்த தாய்மார்களிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய், அவர்களின் பச்சிளம் குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். தொடர்ந்து, மகப்பேறு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி, தாய் மற்றும் குழந்தைகள் நல சேவைகள், மகப்பேறு சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், பொதுமக்களுக்கு தரமான மற்றும் விரைவான மருத்துவ சேவைகளை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதேபோல, மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், நேற்று வந்தது போல எந்த ஒரு புகாரும் இனிமேல் வரக்கூடாது என மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். தான் பிறந்த எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு முன்னறிவிப்பின்றி விஜய் சென்றதால், அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜிடம் சமூக வலைதளங்களில் அரசு மருத்துவமனை குறித்த புகார்கள் வந்த நிலையில், முதல்வர் இங்கு வந்துள்ளாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த அவர், “புகார் வந்தவுடன் அது எங்கள் கவனத்திற்கும் வந்தது. உடனடியாக இங்குள்ள மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்து, மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை நேரில் ஆய்வு செய்தோம். முதலமைச்சர் நீண்ட நாட்களாகவே மருத்துவமனையை பார்வையிட வேண்டும் என்று கூறி வந்தார். இதற்கிடையே, இந்த புகாரைத் தொடர்ந்து நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் பணம் கேட்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை மறுக்க முடியாது, ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். முடிந்தவரை இதுபோன்ற செயல்கள் நடைபெறக் கூடாது என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். யார் நோயாளிகளிடம் பணம் கேட்டாலும், அவர்கள் பணியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் உத்தரவு. முதலமைச்சர் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார். நேர்மையான அரசாங்கத்தையும், வெளிப்படையான நிர்வாகத்தையும் வழங்க வேண்டும் என்பதே தவெக அரசின் நோக்கம். அரசு மருத்துவமனைகளுக்கு பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள்தான் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களிடம் எந்த சூழலிலும் பணம் வாங்கக் கூடாது. பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் எந்த அரசு மருத்துவமனையாக இருந்தாலும், அங்கு எந்த ஊழியர் பணம் கேட்டாலோ அல்லது வற்புறுத்தினாலோ, தயவுசெய்து 104 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும். உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பணம் வாங்கிய ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தால், குற்றச்சாட்டு உறுதியானவுடன் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மருத்துவமனைகளில் சுத்தமான கழிவறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களின் உரிமை. அவற்றை மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். படிப்படியாக மேம்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம் காப்பீட்டு அட்டை தொடர்பாகவும் சில சந்தேகங்கள் எழுகின்றன. இங்கு மருத்துவ சேவையைப் பெறுவதற்கு காப்பீட்டு அட்டை கட்டாயமல்ல. காப்பீட்டு அட்டை இல்லையென்றாலும், மருத்துவச் சேவை பெறுவது மக்களின் உரிமை. காப்பீட்டு அட்டை இல்லை என்ற காரணத்தால் யாருக்கும் சிகிச்சை மறுக்கப்பட முடியாது.” என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

Previous articleகேரளாவில்  ஓராண்டாகத் தனிமையில் வாடிய குடும்பம்  – உடற்கூறு ஆய்வு முடிந்து சூலூர் போலீஸார்  விசாரணை


கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காங்கேயம்பாளையம் அருகே, நீலாம்பூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கண்ணடி கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (54). இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நீலாம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக இவரது மனைவியும் இரண்டு மகன்களும் கேரளாவில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

இதனால், கடந்த ஓராண்டாக மனோஜ் மட்டும் காங்கேயம்பாளையம் அருகே உள்ள ராயல் அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்து உள்ளார். தனிமையின் காரணமாக அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. இந்நிலையில், ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை சுமார் 5.00 மணி அளவில், தனது மூத்த மகனுக்கு மனோஜ் வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தனக்கு கடுமையான உடல் வலி, மன அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், இதனால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போவதாகவும், குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் அவர் உருக்கமாகத் தெரிவித்து இருந்தார். இதை அடுத்து, வழக்கம் போல் காலை மனோஜ் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர், காலை 9.30 மணி அளவில் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் காவல் நிலையப் போலீசார், நிகழ்விடத்தைப் பாதுகாத்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த அவரது மூத்த மகன், தனது தந்தையின் செல்போனைப் பரிசோதித்ததில் தற்கொலைக்கு முன்பு அவர் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சட்டப்படியான விசாரணைகள் மற்றும் பிற நடைமுறைகள் முடிவடைந்த பிறகு, உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு உடற்கூறு ஆய்வும் நிறைவடைந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து உள்ள போலீசார், தற்கொலைக்கான முழுமையான காரணங்களை அறிய தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next articleமக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு
- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...